Blog

  • Kaala sarba dhosha parigarangal

    ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம், போன்ற நட்சத்திரங்கள், வரும் நாட்களில் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஷ்வரம் என்னும் ராகு பகவான் குடிகொண்டிருக்கும் திருக்கோவிலுக்குச் சென்று ராகு பகவானுக்குப் பால் அபிஷேகம் செய்து வணங்கி வழிபட்டு வருவது முதல் பரிகாரம் ஆகும். அதனால் தடைகள் அகலும். துன்பங்கள் குறையும்.

    கேதுவை வழிபடக் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தசுவாமி திருக்கோவி லுக்குச் சென்று வழிபட வேண்டும். அன்று அவருடைய (கேதுவினுடைய) நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் ஒன்றாக இருந்தால் நல்லது.

    திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காளஹஸ்தி என்கின்ற திருத்தலமும், இதற்கு உகந்ததாகும். அதுபோல ராமேஸ்வரமும் தோஷ பரிகாரத்திற்கு மிகவும் உகந்த ஸ்தலமாகும். சும்மா பெயருக்காக  சென்று வழிபடுவதைவிட வழிபட்டால தோஷம் குறையும் என்ற முழு நம்பிக்கையோடு சென்று வழிபடுவது  மிகவும் முக்கியம்.

    சுவாதி நட்சத்திரத்தன்று, திருவாலங்காட்டுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டால், களத்திரதோஷம், புத்திர தோஷம் நீங்கும். மந்திரபாதிப்பு எனப்படும் அபிசாரப்பிரயோகம் நீங்கிவிடும்.

    திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாட்களில்,சிவபெருமானை வணங்கி,மருத்துவ சிகிச்சையை துவக்கினால்,எந்த நோயாக இருந்தாலும் விரைவில் குணமாகும். இந்த நட்சத்திரம் நிற்கும் நாளில்,பாம்புக்கடி,விஷக்கடிக்குரிய மந்திரங்களை அதிகமான எண்ணிக்கையில் ஜபித்தால்,எளிதில் சித்தி பெறலாம்.

    ஒருவருக்கு பேய், பிசாசு தொல்லைகள் இருக்குமானால், அவரை திருநாகேஸ்வரம் அல்லது சிதம்பரம் அல்லது திருவாலங்காடுக்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்று அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்தால்,பேய் பிசாசுத்தொல்லைகள் நீங்கும்.

  • Vasthu dhosham neenga

    வீட்டில் ஓயாத பிரச்னையா… காரணம், வீட்டின் வாஸ்து தோஷமாக இருக்கலாம். கட்டி முடித்த வீட்டில் சில குறைபாடுகள் இருக்கலாம். சில பரிகாரங்களை சரிவர செய்து வந்தால் வாஸ்துவினால் ஏற்படும் தோஷம் விலகி நலன் பெறலாம் என்பது நம்பிக்கை. எல்லாவற்றிற்கும் பரிகாரம் உள்ளது. இதை சரிவர செய்து வந்தால் வாஸ்துவினால் ஏற்படும் தோஷம் விலகி நலன் பெறலாம். எனவே அவ்வாறு வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் செய்ய வேண்டியவை.

    வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.

    ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.

    பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.

    தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.

    திருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.

    காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  வெற்றி
    ரிஷபம் – வருத்தம்  
    மிதுனம் – நன்மை 
    கடனம் – அமைதி 
    சிம்மம் – செலவு
    கன்னி – ஆதரவு
    துலாம் –   உதவி 
    விருச்சிகம் – பாசம் 
    தனுசு – சுகம் 
    மகரம் –   நட்பு 
    கும்பம் – போட்டி 
    மீனம் – கோபம் 
    சந்திராஷ்டமம்    – அனுஷம்
     

  • April 9 Indraya Naal Eppadi

    ஏப்ரல் 9 – இன்றைய நாள் எப்படி…
    விளம்பி வருடம் – பங்குனி 26
    09-ஏப்-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    ம    3.18
    நட்சத்திரம்    :    கார்த்திகை    கா    9.36
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அனுஷம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Siva peruman meedhu Sooriyan

    காட்பாடி அருகே 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோவிலில் சிவன்பெருமான் திருமேனி மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் அதிசய நிகழ்வு  நடைபெற்றுள்ளது. 

    காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளி கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு அகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 22 ஆம் நாள் முதல் 10 நாட்கள் இத்திருகோவிலில் உள்ள சிவன்பெருமான் திருமேனி மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிகழ்வு நடைபெறும். 

    அதே போல் இந்தாண்டு பங்குனி உத்திராயனத்தில் பங்குனி மாதம் 22 முதல் சித்திரை  1 வரை  ஏழு நாட்கள் சூரியபகவானின் ஒளிக்கதிர்கள் சிவன் மீது படுகிறது. சிவன் மீது சூரியஒளி படும் இந்த அதிசய நிகழ்வு காலை  ஆறு மணி முதல் 6.30 வரை நடைபெறும். இந்த அதிசய நிகழ்வு  அகவே சூரியன் வழிப்பட்ட திருத்தலமாக இந்த கோவில் கருதப்படுகிறது. 

    ஆண்டுக்கு ஒரு முறை ஒளிக்கதிர்கள் சிவன் மீது படுவதால் இந்த நிகழ்வை காண மாவட்டதின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அகதீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். சிவபெருமானை சூரியன் தரிசிப்பதால் இதை காணும் பக்தர்களுக்கு எழுபிரவிகளில் செய்த வினைகள் தீரும் என்பது ஐதீகமாக கருதப்படுகின்றது.

  • Thookka Nerchai vizha

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் புகழ்பெற்ற குழந்தைகள் தூக்க நேர்ச்சை வழிபாட்டு துவங்கியது. 1432 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

    கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நட்சத்திர தினத்தில் தூக்க நேர்ச்சை நடைபெறுகிறது. நிகழாண்டு விழா கடந்த மார்ச் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, திருவிழா நாள்களில் நாள்தோறும் காலையில் கணபதி ஹோமம், சமயச் சொற்பொழிவு, தூக்கக்காரர்களின் நமஸ்காரம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    9ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தூக்கக்காரர்கள் பிரதான பூஜாரியுடன் வள்ளவிளை கடலில் நீராடி பஞ்சகவ்ய முழுக்கல் செய்து,  பூஜைக்குப் பின்னர் கோயிலை அடைந்து நமஸ்காரத்தில் ஈடுபடுவர். மாலை 6 மணிக்கு தூக்க நிகழ்வின் வெள்ளோட்டமான வண்டியோட்டம் நடைபெறும்.

    திருவிழாவின் சிறப்பு நிகழ்வான தூக்க நேர்ச்சை இன்று தொடங்கி உள்ளது.  அதிகாலை 5 மணிக்கு அம்மன் பச்சைப் பந்தலில் எழுந்தருளினார்.  மாலை 6 மணி முதல் தூக்க நேர்ச்சை நடைபெற்று வருகிறது.  நிகழாண்டு 1432 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. தூக்க நேர்ச்சை நிறைவடைந்த பின்னர், குருசி தர்ப்பணத்துடன் விழா நிறைவடையும். 

    தூக்கத் திருவிழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டம், கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழக, கேரள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
     

  • Madurai Chitirai Festival

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வேத மந்திரங்கள் முழங்க சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்றாலும், சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்றது. அந்த வகையில் சிறப்பு பெற்ற சித்திரை திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. 

    முன்னதாக கோயில் கம்பத்தடி மண்டபம் கொடி மரம் முன்பு அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட இன்று காலை 10.05 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் மிதுன லக்னத்தில் தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 15ம் தேதி இரவு 8 மணிக்கு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 16ம் தேதி திக்விஜயமும், மீனாட்சி திருக்கல்யாணம் வரும் 17ம் தேதியும் , வரும் 18ம் தேதியன்று காலை மாசி வீதிகளில் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. இந்நிலையில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் 19 ம் தேதி நடை பெறுகிறது.
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  செலவு
    ரிஷபம் – ஆதாயம் 
    மிதுனம் – சுகம் 
    கடனம் – பெருமை 
    சிம்மம் – பயம் 
    கன்னி – நற்செய்தி  
    துலாம் –   நன்மை 
    விருச்சிகம் – போட்டி
    தனுசு – மேன்மை 
    மகரம் –   அச்சம் 
    கும்பம் – உதவி 
    மீனம் – வரவு
    சந்திராஷ்டமம்    – விசாகம்

  • April 8 Kiruthigai

    விளம்பி வருடம் – பங்குனி 25
     கார்த்திகை 
    08-ஏப்-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    ம    3.59
    நட்சத்திரம்    :    பரணி    கா    9.31
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    விசாகம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Peacock Feather

    இந்த  மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?

    எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வந்தால் வீட்டின் வாஸ்து தோஷம் நீங்கும்.

    நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைத்தால் ,செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யும்.

    மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.

    சனி தோஷம் நீங்க….
    மூன்று மயில் இறகை ஒன்றாக இணைத்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்குமாம்.

    வாஸ்து தோஷம் நீங்க…
    வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க 8 மயில் இறகை ஒன்றாக சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, அதை பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வாஸ்துவினால் ஏற்பட்ட தோஷம் நீங்குமாம்.

    செல்வம் அதிகரிக்க…
    நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் மயில் இறகு ஒன்றை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யும்.

    எதிர்மறை ஆற்றல் நீங்க…
    மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.

    உற்பத்தி மேம்பட….
    ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.

    ஒற்றுமை ஓங்க…
    திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்னைகள் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும்.