Blog

  • Dhanumalaya swamy koil kanikanum nigazhchi

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி வருகிற 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.

    குமரி மாவட்டத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில். . இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை விஷூ பண்டிகை  கனி காணும் நிகழ்ச்சி கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கோவிலில் பூஜைகள் அனைத்தும் கேரள விதிமுறைப்படியும், கேரள பஞ்சாங்கத்தின் படியும் நடைபெறுகிறது.

    கேரள விதிமுறைப்படி பூஜைகள் நடைபெறும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை விஷூ அதாவது கேரள புத்தாண்டு கனி காணும் நிகழ்ச்சி வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  தனம் 
    ரிஷபம் – எதிர்ப்பு
    மிதுனம் – வெற்றி 
    கடனம் – கவலை
    சிம்மம் – பயம்
    கன்னி – நட்பு
    துலாம் – தடங்கல் 
    விருச்சிகம் – தாமதம் 
    தனுசு – சுகம் 
    மகரம் –   வரவு  
    கும்பம் – களிப்பு 
    மீனம் – சிக்கல்
    சந்திராஷ்டமம்    – பூராடம் 
     

  • April 12  subamugurthanaal 

    ஏப்ரல் 12  – சுபமுகூர்த்த நாள்
    விளம்பி வருடம் – பங்குனி 29
    12-ஏப்-2019 வெள்ளி  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    சப்தமி    கா    10.49
    நட்சத்திரம்    :    திருவாதிரை    கா    7.32
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூராடம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்

     

  • Sabari Malai Nadai thirappu

    விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.  கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டினார். இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், உதயாஸ் தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ரகலச பூஜை உள்ளிட்ட பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது.

     
    ஏப்ரல் 15- ந் தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து பக்தர்களுக்கு விஷூக்கனி காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாரம்பரிய முறைப்படி, அன்றைய தினம் ஐயப்ப பக்தர்களுக்கு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் விஷூ கை நீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள். 10 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் ஏப்ரல் 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கேரள அரசின் சார்பில் சிறப்பு பஸ்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிலக்கல்லுக்கு இயக்கப்படுகிறது. நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பக்தர்கள், மாற்று பஸ்களில் கொண்டுவரப்படுவார்கள். தனியார் வாகனங்களில் வரும் பக்தர்களின் வாகனங்களை பார்க் செய்ய நிலக்கல்லில் விசாலமான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை மே மாதம் 14- ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 19- ந் தேதி வரை 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  பெருமை 
    ரிஷபம் – உயர்வு
    மிதுனம் – இரக்கம் 
    கடனம் – பரிவு
    சிம்மம் – சோர்வு
    கன்னி – விவேகம் 
    துலாம் – அச்சம் 
    விருச்சிகம் – நோய்
    தனுசு – சினம் 
    மகரம் –   பிரீதி  
    கும்பம் – தனம்  
    மீனம் – பொறாமை  
    சந்திராஷ்டமம்    – மூலம்

  • April 11 Indraya Nalla Neram

    ஏப்ரல் 11 – இன்றைய நல்ல நேரம்
    விளம்பி வருடம் – பங்குனி 28
    11-ஏப்-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சஷ்டி    ம    12.42
    நட்சத்திரம்    :    மிருகசீரிடம்    கா    8.37
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    மூலம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Thiruthani bramorchava kodiyetram

    திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர்.

    திருத்தணி கோயில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி வரும் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் தினந்தோறும் காலை இரவு பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் பக்தர்கள் அருள்பாலிக்கிறார்.

    முருகனின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியம் சுவாமி திருக்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ இன்று காலை 6.30 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை மாத பிரம்மோற்சவயொட்டி இன்று அதிகாலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசம், வேல், பச்சைகள் முத்து, அணிவித்து தீபாராதணை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோயில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் கேடய வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    அதை தொடர்ந்து, தினமும், மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் காலை, மாலை ஆகிய இருவேளைகளில், ஒவ்வொரு வாகனத்தில் உற்சவர் முருகப் பெருமான் வீதியுலா வந்து அருள்பாலிப்பார்.வரும், 16ம் தேதி தேர் திருவிழாவும், 17ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம், 19ம் தேதி உற்சவர் சண்முகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைபெறுகிறது.

  • Thirupathy ticket timing changed

    திருப்பதியில்  ஏப்ரல் 10-ஆம் தேதி முதல்  நேர ஒதுக்கீடு டிக்கெட் வழங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்வ தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டுகளை பக்தர்களின் ஆதார் கார்டுகளை வைத்து நள்ளிரவு 12 மணி முதல் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. 

    பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் தினந்தோறும் அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்வ தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் விதமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 

    எனவே பக்தர்கள் திருப்பதியில் உள்ள அரசு பேருந்து நிலையம், ஸ்ரீனிவாசம் மற்றும் விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வு அறை, திருப்பதி  ரயில் நிலையம் பின்புறம் உள்ள இரண்டாவது சத்திரம், அலிபிரியில் உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை மாற்றம் செய்யப்பட்ட நேரத்தில் இனி பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  வரவு
    ரிஷபம் – தாமதம் 
    மிதுனம் – செலவு 
    கடனம் – நோய் 
    சிம்மம் – வெற்றி
    கன்னி – துன்பம் 
    துலாம் –   நன்மை 
    விருச்சிகம் – அமைதி 
    தனுசு – பக்தி 
    மகரம் –   பயம்  
    கும்பம் – கவலை 
    மீனம் – மேன்மை 
    சந்திராஷ்டமம்    – கேட்டை 
     

  • April 10 Indraya Nalla Neram

    ஏப்ரல் 10 வசந்த பஞ்சமி
    விளம்பி வருடம் – பங்குனி 27
      சுபமுகூர்த்த நாள்
    வசந்த பஞ்சமி
    10-ஏப்-2019 புதன்  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    திதித்துவயம்          
    திதி நேரம்    :    பஞ்சமி    ம    2.14
    நட்சத்திரம்    :    ரோகிணி    கா    9.18
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கேட்டை
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்