Blog

  • Sabari Malai Nadai Thirappu

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. சுவாமியே சரணம் அய்யப்பா என்ற சரணகோஷம் முழங்க, சபரிமலை நடை திறக்கப்பட்டது. 

    கார்த்திகை முதல் தேதி துவங்கி 41 நாட்கள் தொடர்ச்சியாக பூஜை நடைபெறும் காலம் மண்டல காலம். இந்த பூஜைக்காக இன்று சபரிமலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி சரணகோஷம் முழங்க, நடை திறந்து விளக்கேற்றினார்.  நடைதிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளுக்குப் பிறகு 18-ம் படிக்கு கீழே உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது. 

    நாளை காலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றியதும் மண்டலகாலம் தொடங்கும். தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். பின்னர் கணபதி ஹோமம் நடைபெறும். தொடர்ந்து உச்சபூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜைகள் நடைபெறும். மதியம் உச்சபூஜைக்கு முன்னோடியாக களபாபிஷேகம் நடைபெறும்.
     

  • november 16 Rasi palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – உயர்வு
    ரிஷபம் – பாராட்டு  
    மிதுனம் – நலம்  
    கடனம் – தோல்வி
    சிம்மம் – இரக்கம் 
    கன்னி –  அலைச்சல்
    துலாம் –  பொறுமை 
    விருச்சிகம் – சோதனை 
    தனுசு –     சினம் 
    மகரம் –  நிம்மதி 
    கும்பம் – பகை 
    மீனம் –     வெற்றி 
    சந்திராஷ்டமம்    – கேட்டை, மூலம்
     

  • November 16 Indraya Naal Eppadi

    நவம்பர் 16 – திருஇந்தளூர் பரிமள ரெங்கராஜர் தேர்
    விகாரி வருடம் – ஐப்பசி 30
    16-நவ-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    இ    7.20
    நட்சத்திரம்    :    திருவாதிரை    இ    11.41
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கேட்டை,மூலம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Sabari Malai Online Ticket booking

    சபரிமலை ஐயப்பன் கோவில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், தரிசனத்துக்கான தேதி மற்றும் நேரத்தை ஆன்லைன் மூலம் பதிவுசெய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மகர விளக்கு பூஜைக்காக வரும் 16-ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள கேரள போலீஸார் முடிவு செய்துள்ளனர். 

    இதேபோல, தரிசனத்துக்கு ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. www.sabarimalaq.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதேபோல, நிலக்கல் பகுதியிலிருந்து பம்பை-க்கு பேருந்து சேவைக்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக வலைதளத்தில் லாக்கின் செய்து தங்களது பெயர், வயது, முகவரி ஆகிய தகவல்களுடன் புகைப்படத்தையும் சேர்க்க வேண்டும்.

    ஒருவர் அதிகபட்சம் 10 டிக்கெட்டுகளை முன்பதிவுசெய்ய முடியும். டிக்கெட்டை பிரின்ட் அவுட் எடுத்து வர வேண்டும் என்று கேரள போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். முன்பதிவு செய்யும் பேருந்து டிக்கெட்டுகள், பம்பையிலிருந்து நிலக்கல் திரும்பி வருவதற்கு 48 மணிநேரத்துக்கு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வாகனங்கள், நிலக்கல் பகுதிவரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், பக்தர்கள் கேஎஸ்ஆர்டிசி பேருந்து மூலம் பம்பை-க்கு செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • Iyappa Slogam

    இதம் ஆஜ்யம், கமமண்டல
    கால மகரகால பரஹமசியவ்ர
    தேன ஹரிஹர புத்ர தர்ம
    சாஸ்த்ர பிமஷதர்த்தம் பூரயாகி

    பொருள்:

    ஐயப்ப சுவாமியே! மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் சுவாமிமார்களான நாங்கள் அறிந்தும் அறியாமலும் ஏதாவது தவறு செய்திருந்தால், அதை மன்னித்து, பதினெட்டுப் படிகளையும் ஏறச்செய்து, நல்ல தரிசனத்தை அளிக்க வேண்டும்.
     

  • Iyappa Bakthargal Viradha Murai

    ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்பவர்கள் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் போது ஒருசிலவற்றை மனதில் கொண்டு நடக்க வேண்டும். ஒரு மண்டலத்திற்கு விரதம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள், எப்போதும் மனதை அமைதியாக வைத்து, ஐயப்பனையே நினைத்து, சரணம் சொல்லி வழிபட வேண்டும். 

    மாலை போட்டவர்கள், மெத்தை, தலையணை, போர்வை என்று எதையும் உபயோகிக்கக்கூடாது. வெறும் தரையில், ஒரு துணியை விரித்து மட்டுமே படுக்க வேண்டும். ஐயப்பனுக்கு மாலை போட்டவர்கள், மனதை அமைதியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இக்காலத்தில் கோபம் மற்றும் மற்றவர்களின் மனம் புண்படும்படியான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசக்கூடாது. சாந்தமுடன் இருக்க வேண்டியது அவசியம். 

    மாலை போட்டுவிட்டால், விரதம் முடிந்து மாலையை கழற்றும் வரை முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ, நகத்தை வெட்டவோ, அலங்காரம் செய்யவோ, செருப்பு அணியவோ அல்லது வாசனை திரவியங்களை தடவிக் கொள்ளவோ கூடாது. ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் போது, பெண்களை சகோதரியாகவும், தாயாகவும் தான் பார்க்க வேண்டும். மேலும் வீட்டில் இருக்கும் மனைவி மற்றும் மற்ற பெண்களின் தொண்டும், பக்தியும் மிகவும் உயர்வானதும், போற்றக்கூடியதும் ஆகும். 

    ஒருவேளை கழுத்தில் அணிந்திருந்த மாலை அறுந்துவிட்டால், அதை சரிசெய்து மீண்டும் அணிந்து கொள்ளலாம். இதனால் எந்த ஒரு தவறும் இல்லை. மனம் வருந்த வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி என்றால், அவர்களை காண்பதைத் தவிர்ப்பதோடு, வசதி இருந்தால், அவர்களை தனி அறையில் இருக்குமாறு கூறலாம். இல்லாவிட்டால், மாலை அணிந்திருப்பவர்கள் வெளியிடங்களில் தங்கிக் கொள்வது நல்லது. 

    எப்போதும் மாலைப் போடும் தருணத்தில், அச்சமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருக்கக்கூடாது. ஒருவேளை மனதில் ஏதேனும் குழப்பமோ அல்லது மனம் ஏதேனும் சஞ்சலத்துடன் இருந்தால், மாலைப் போடுவதைத் தள்ளிப் போடுவது நல்லது.

    இருமுடி கட்டும் நிகழ்ச்சியை மற்ற இடங்களில் வைப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே நடத்துவது நல்லது. இதனால் வீடு மங்களகரமாகவும், தீய சக்திகள் அகன்றும் இருக்கும். மாலை போட்ட பின் மது, புகை, அசைவ உணவுகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால், புகைப்பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்கள் ஐயப்பனுக்கு மாலை போடுவது ஓர் சிறந்த வழியாக அமையும். 

    உங்கள் குருசாமி சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கு இணையானவர். எனவே அவருக்கு பணிவிடை செய்து, ஐயப்பனின் அருளைப் பெறுங்கள். எதிர்பாராமல் உங்கள் குடும்பத்தில் பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்தால், நீங்கள் அணிந்துள்ள மாலையை சுவாமி ஐயப்பன் முன் வைத்துவிடுங்கள். மேலும் ஒரு வருடம் கழித்து நீங்கள் உங்கள் யாத்திரையைத் தொடங்கலாம். 

    ஐயப்பனுக்கு மாலை போட்டுவிட்டால், தலைக்கு எண்ணெய் வைக்கவோ அல்லது எண்ணெய் குளியலோ மேற்கொள்ளக்கூடாது. ஐயப்ப பக்தர்கள் பகல் நேரத்தில் தூங்கக்கூடாது. ஒருவேளை தூங்கினால், மீண்டும் குளித்த பின்னரே எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள வேண்டும். ஐயப்ப பக்தர்கள் வீட்டைத் தவிர, கடைகளிலோ அல்லது வெளியிடங்களிலோ எங்கும் உண்ணக்கூடாது. 

    மாலை அணிந்தவர்கள், காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் பச்சைத்தண்ணீரில் குளிக்க வேண்டும். குளித்துமுடித்த பின் விபூதி இட்டு, விளக்கு ஏற்றி ஐயப்பனின் 108 சரணத்தையும் சொல்லி வணங்க வேண்டும். இதேப் போல் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் குளித்து, காலையில் செய்ததைப் போலவே செய்ய வேண்டும்.
     

  • Sabari Malai Maalai aniyum murai

    கார்த்திகை மாதம் முதல் தேதியன்று சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிய வேண்டும். அன்று நாள், கிழமை பார்க்க வேண்டிய அவசியமில்லை.54 அல்லது 108 மணிகள் உள்ள துளசி மணிமாலையை ஏதேனும் ஒரு கோவிலில், குரு சுவாமியின் திருக்கரங்களால் அணிந்து கொள்ள வேண்டும்.

    குரு சுவாமி இல்லாத பட்சத்தில் கோவிலுக்குச் சென்று அர்ச்சகரை குருவாக ஏற்று மாலை அணிந்து கொள்ளலாம் அல்லது வீட்டிலேயே பூஜை செய்து தாயின் கரத்தால் மாலை அணிந்து கொள்ளலாம். மாலை அணிந்த பக்தர்கள் ஐயப்பமார்கள் என்றே அழைக்கப்படுவார்கள்.

    மாலை அணிந்தபின் என்ன செய்ய வேண்டும்?

    மாலை அணிந்தபின் கடுமையான பிரம்மசர்ய விரதத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம், விரத நாட்களில் புறத்தூய்மை அவசியம்.  ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் கடைபிடிக்க வேண்டும். தினமும் காலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி, ஐயப்பனைத் தொழுது ஐயப்பன் பாடல்களை பாடலாம். நாள்தோறும் ஆலயம் சென்று இறைவனை தொழுது, பஜனை வழிபாடு செய்ய வேண்டும். ஐயப்பனை நினைத்து விரதத்தை மேற்கொண்டால் சகல துன்பங்களையும் நீக்கி நம்மை காத்தருள்வார்.

  • Nadakadhathai Nadathi vaitha Prasannam

    மதிப்பிற்குரிய டாக்டர் கீது வாட்ஸ் அவர்களுக்கு, 

    என் பெயர் திருமதி சிவராமன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்திய மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மிக சிலரே. அவர்களில் ஒருவர் தான் கீது வாட்ஸ். பிரசன்னம் பார்ப்பதிலும் நியுமராலஜி கணிப்பதிலும் மிகவும் வல்லவர். அவர்களிடம் நமது பிரச்சனையை சொன்னால் அதை மிக எளிய முறையில் பரிகாரங்கள் மூலம் தீர்த்து வைக்கின்றார். அவற்றில் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    என் மகளின் ஜாதகத்தை பார்த்து இந்த தேதியில், இந்த கிழமையில், இந்த நட்சத்திரத்தில் முதுகில் மச்சத்துடன் பெண் குழந்தை பிறக்கும் என்று ஆருடம் சொன்னார். அதேபோல என் மகளுக்கு முதுகில் மச்சத்துடன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. என் மகளும், பேத்தியும், மருமகனும் வெளிநாடு எப்போது செல்வார்கள் என்பதையும் கணித்து சொன்னார். சொன்ன சொல் அப்படியே பலித்தது. என் குடும்ப நண்பர் ஒருவர், வீட்டு பிரச்சனைகளால் மிரண்டு போயிருந்தார். என் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களைச் சொல்லி கீது வாட்ஸை அணுகச் சொன்னேன். என் நண்பரது வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளையும் நல்ல முறையில் தீர்த்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர்கள் சொல்லும் சில எளிய பரிகாரங்களை மிகவும் சிரத்தையுடன் செய்து வந்தாலே கை மேல் பலன் கிடைக்கும். என் வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சனைகளுக்கு அவர்கள் சொன்ன பரிகாரங்கள் மிகுந்த பலனை அளித்தது. என்ன செய்வதென்றே தெரியாமல் சில பிரச்சனைகளோடு அவரை ஒரு முறை சந்தித்தேன். திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மனுக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை செய்ய சொன்னார்கள். அந்த பூஜையை மூன்று மாதம் தொடர்ந்து செய்த பிறகு என் வாழ்வில் நம்ப முடியாத அதிசயங்கள் நடந்தது. நடக்கவே நடக்காதென்று எதையெல்லாம் நான் நினைத்திருந்தேனோ அது எல்லாம் நடந்தது. நன்றி.

    -சவுதியிலிருந்து திருமதி. சிவராமன்

    பிரசன்ன ஜோதிடர் டாக்டர். கீது வாட்ஸ் அவர்களை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

    Dr. Geetu Watts (Prasanna Jodhidar)

    9-A, துளசி கார்டன், (Near Golden Flats Signal)

    சந்தான சீனிவாச பெருமாள் கோவில் தெரு,

    முகப்பேர் மேற்கு, சென்னை – 600 037

    போன் – 98845 12895 / 98848 80257
     

  • November 15 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – உயர்வு
    ரிஷபம் – பாராட்டு  
    மிதுனம் – நலம்  
    கடனம் – தோல்வி
    சிம்மம் – இரக்கம் 
    கன்னி –  அலைச்சல்
    துலாம் –  பொறுமை 
    விருச்சிகம் – சோதனை 
    தனுசு –     சினம் 
    மகரம் –  நிம்மதி 
    கும்பம் – பகை 
    மீனம் –     வெற்றி 
    சந்திராஷ்டமம்    – அனுஷம், கேட்டை
     

  • November 15 Sangadahar chadurthi

    நவம்பர் 15 – சங்கடஹர சதுர்த்தி
    விகாரி வருடம் – ஐப்பசி 29
     சங்கடஹர சதுர்த்தி 
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    மாயவரம் கவுரிமாயூரநாதர் தேர்
    15-நவ-2019 வெள்ளி  
    சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    இ    8.08
    நட்சத்திரம்    :    மிருகசீரிடம்    இ    12.04
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அனுஷம்,கேட்டை
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்