அக்டோபர் 30 – மாத சிவராத்திரி
குரோதி வருடம் – ஐப்பசி 13
அக்டோபர் 30 – 2024
புதன்
மாத சிவராத்திரி
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : கா 7.30 – 9.00
குளிகை : கா 10.30 – 12.00
ராகு : ம 12.00 – 1.30
திதி : அதிதி
திதி நேரம் : திரையோதசி ம 2.21
நட்சத்திரம் : அஸ்தம் இ 11.22
யோகம் : மரண-சித்த
சந்திராஷ்டமம் : சதயம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
Blog
-
அக்டோபர் 30 – மாத சிவராத்திரி
-
நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாணம்
நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் கோலகலமாக நடைபெற்றது.ஆயிரகணக்காண பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வைபவம் இன்று அதிகாலை கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடந்தது.
இந்த விழாவிற்காக கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் காந்திமதி அம்பாள் மனக்கோலத்தில் எழுந்தருளினார். அதன்பின்னர் நெல்லை கோவிந்தர் மாப்பிள்ளை அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி நெல்லையப்பரை சுவாமி சன்னதியில் இருந்து மேள தாளம் முழங்க தங்க பல்லக்கில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அழைத்து வந்தார்.
அதனை தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு திருக்கல்யாண சடங்குகள் செய்யபட்டு மாலை மாற்று வைபவம் நடைபெற்றது.பின்னர் சுவாமி நெல்லையப்பரிடம் வைத்து பூஜை செய்யப்பட்ட திருமாங்கல்யம் காந்திமதி அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாடச உபச்சார மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி அம்பாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் ஆறுமுக நயினார் சன்னதியில் திருக்கல்யாண விருந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது இந்த விழாவின் தொடர்ச்சியாக சுவாமி அம்பாள் பூம் பல்லாக்கில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
-
அக்டோபர் 29 – ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – மறதி
ரிஷபம் – ஓய்வு
மிதுனம் – பாராட்டு
கடகம் – சோதனை
சிம்மம் – சாந்தம்
கன்னி – குழப்பம்
துலாம் – ஊக்கம்
விருச்சிகம் – ஜெயம்
தனுசு – நலம்
மகரம் – பொறுமை
கும்பம் – பயணம்
மீனம் – நன்மை
சந்திராஷ்டமம் – திருவோணம், அவிட்டம் -
அக்டோபர் 29 – பிரதோஷம்
அக்டோபர் 29 – பிரதோஷம்
குரோதி வருடம் – ஐப்பசி 12
அக்டோபர் 29 – 2024
செவ்வாய்
பிரதோஷம்
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : கா 9.00 – 10.30
குளிகை : ம 12.00 – 1.30
ராகு : ம 3.00 – 4.30
திதி : திரையோதசி
திதி நேரம் : துவாதசி ம 12.20
நட்சத்திரம் : உத்திரம் இ 8.48
யோகம் : அமிர்த-சித்த
சந்திராஷ்டமம் : அவிட்டம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் தேதி அறிவிப்பு….
ஆனைமலையில் அமைந்துள்ள மாசாணி அம்மன் கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்துச் செல்வது வழக்கம்.
அவ்வாறு வரும் பக்தர்கள் இக்கோயிலில் மிளகாய் அரைத்து வழிபடுவது சிறப்பு அம்சமாகும். இந்நிலையில் ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் 14 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.இதற்காக கடந்த சில மாதங்களாக கோயில் வளாகத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால் கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் 9 45 மணிக்குள் நடைபெறும் என அறங்காவலர் நிர்வாகிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த கும்பாபிஷேகத்தில் சுமார் 4 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்காக கூடுதல் வேலைபாடுகள் நடைபெற்று வருவதாக கோயில் நிர்வாகத்தினர் 5.30 மணி அளவில் தெரிவித்துள்ளனர்.
இதற்காக இன்று கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் மாசாணி அம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர் உறுப்பினர்கள் மஞ்சுளாதேவி,மருதமுத்து, திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
அக்டோபர் 27 – ஏகாதசி நாள் ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – நிறைவு
ரிஷபம் – மேன்மை
மிதுனம் – ஆதாயம்
கடகம் – அசதி
சிம்மம் – நற்செயல்
கன்னி – உயர்வு
துலாம் – வரவு
விருச்சிகம் – ஆக்கம்
தனுசு – அனுகூலம்
மகரம் – நட்பு
கும்பம் – நஷ்டம்
மீனம் – ஜெயம்
சந்திராஷ்டமம் – பூராடம், உத்திராடம் -
அக்டோபர் 27 – வாஸ்து நாள் (காலை 7.44 – 8.20)
அக்டோபர் 27 – வாஸ்து நாள் (காலை 7.44 – 8.20)
குரோதி வருடம் – ஐப்பசி 10
அக்டோபர் 27 – 2024
ஞாயிறு
ஏகாதசி
வாஸ்து நாள் (காலை 7.44 – 8.20)
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 12.00 – 1.30
குளிகை : ம 3.00 – 4.30
ராகு : மா 4.30 – 6.00
திதி : ஏகாதசி
திதி நேரம் : தசமி கா 8.54
நட்சத்திரம் : மகம் மா 4.10
யோகம் : மரண-சித்த
சந்திராஷ்டமம் : உத்திராடம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
அக்டோபர் 26 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…
அக்டோபர் 26 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – புகழ்
ரிஷபம் – இன்பம்
மிதுனம் – உதவி
கடகம் – பொறுமை
சிம்மம் – பாராட்டு
கன்னி – ஏமாற்றம்
துலாம் – வெற்றி
விருச்சிகம் – சோதனை
தனுசு – அலைச்சல்
மகரம் – மேன்மை
கும்பம் – சுபம்
மீனம் – நன்மை
சந்திராஷ்டமம் – மூலம், பூராடம் -
அக்டோபர் 26 – நெல்லை காந்திமதியம்மன் தேர்
அக்டோபர் 26 – நெல்லை காந்திமதியம்மன் தேர்
குரோதி வருடம் – ஐப்பசி 09
அக்டோபர் 26 – 2024
சனி
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 1.30 – 3.00
குளிகை : கா 6.00 – 7.30
ராகு : கா 9.00 – 10.30
திதி : தசமி
திதி நேரம் : நவமி கா 7.44
நட்சத்திரம் : ஆயில்யம் ம 2.22
யோகம் : மரண-அமிர்த
சந்திராஷ்டமம் : பூராடம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
மீன ராசிக்கு நவம்பர் மாத ராசிபலன்….
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
கிரகநிலை:
ராசியில் ராஹூ – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் – பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றம்:
05.11.2024 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.
08.11.2024 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13.11.2024 அன்று பாக்கிய ஸ்தானத்தில் புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.
16.11.2024 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து சூர்யன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
சிக்கனம் வீட்டை காக்கும் சேமிப்பு நாட்டைக் காக்கும் என்பதை நன்கு உணர்ந்து செயல்படும் மீன ராசி அன்பர்களே இந்த மாதம் அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்க பெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. இசை நாட்டியம் போன்ற கலைகளில் ஆர்வம் பிறக்கும். வீண் ஆசைகள் தோன்றலாம். மனதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் மன நிறைவு உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வாக்கு வன்மையால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர் தொடர்பாக பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களுக்காக உழைக்க வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மோதல்கள் குறையும்.
பெண்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமையுடன் செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.
அரசியல்துறையினர் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. எதிர்ப்புகள் அகலும்
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சாதுரியமான பேச்சால் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.
பூரட்டாதி:
இந்த மாதம் ஊழியர்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்துசேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். உங்களை ஒதுக்கியவர்களே உங்களைத் தேடிவருவார்கள்.
உத்திரட்டாதி:
இந்த மாதம் தொழிலாளர்கள் ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். தொழிலதிபர்கள் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.
ரேவதி:
இந்த மாதம் நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய் மருந்துக்கு கட்டுப்பட்டு விடும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும்.
பரிகாரம்: குல தெய்வத்தை பூஜித்து வணங்கிவர எல்லா தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் அமைதி ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
சந்திராஷ்டம தினங்கள் : 1, 2, 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22
-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்