திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் சாலக்கட்ல பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விமர்சையாக துவங்கியது ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் மாட வீதிகளில் வலம் வந்தார். கோலாட்டங்கள் பஜனை குழுவினர் வாத்திய கச்சேரிகள் என்று மாடவீதிகளில் வாகன சேவை வைபவமாக நடைபெற்றது.
Blog
-
Thirupathy bramorchavam starts
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாலக்கட்ல பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வைபவமாக துவங்கியது.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தெலுங்கு பஞ்சாங்கப்படி அதிக மாசம் வருவதால் இரண்டு பிரம்மோசங்கள் நிகழ்த்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் துவக்கத்தில் சாலக்கட்ல பிரம்மோற்சவம் விமர்சையாக துவங்கியது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமியை கொடி மரத்தின் அருகே எழுந்தருள ச் செய்து கொடி மரத்திற்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து கருடக்கொடி ஏற்றி வைத்து விமர்சையாக துவங்கியது பத்து நாட்கள் ஏழுமலையானின் வாகன சேவைகள் காலை மாலை இரண்டு வேளைகளிலும் நடைபெறும். பிரம்மோற்சவ வாகன சேவைகளை காண ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வந்து குவிந்துள்ளனர்.
-
then thirupathy bramorchavam
சிறுமுகை அருகே ஜடையம்பாளையத்தில் தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை ஒட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் அமைந்துள்ள தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று மலையப்பசாமி கோவில் முன் மண்டபத்தில் எழுந்தருளும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக காலை மலையப்ப சாமி சின்னசேஷ வாகனம் ஸ்தாபன திருமஞ்சனம் அன்னபசி வாகனம் ஆகியவற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த நிலையில் மாலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் மலையப்ப சாமி அலங்கார கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்
ஊஞ்சல் உற்சவத்தின் போது வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓதி பக்தர்கள் மலையப்ப சாமியான ஸ்ரீ வெங்கடேச பெருமாளை வழிபட்டனர்.
-
bullet vinayakar
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விவசாயம் செய்யும் விநாயகர் புல்லட்டில் அமர்ந்த விநாயகர் என அற்புதமான சிலைகள் அமைத்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மதுரை ஆதீனம் கொடியசைத்து துவக்கி வைத்தார் …
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமான விநாயகர் சிலைகள் கடந்த இரண்டு மாதங்களாக தயார் செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி ஆன வீதி உலா வந்தது.
விநாயகர் விவசாயத்திற்கு உரம் போடுவது உரம் போடுவது போலவும், புல்லட்டில் விநாயகர் வலம் வருவது போன்ற விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு இராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் அருகே தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது
ஊர்வலத்தை மதுரை ஆதீனம் கொடியசைத்து துவக்கி வைத்தார் மழையிலும் இருபறமும் பொதுமக்கள் கூடி நின்று விநாயகரை வழிபட்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வனத்தில் பங்கேற்றனர் .
விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தவரின் பெயரில் இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி தலைமையில் 3 டிஎஸ்பிகள் 10 ஆய்வாளர்கள் என 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
-
September 20 2023 Sasti
செப்டம்பர் 20 – சஷ்டி
சோபகிருது வருடம் – புரட்டாசி 3
20-செப்-2023 புதன் ரபியுல்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : சஷ்டி
திதி நேரம் : பஞ்சமி கா 11.36
நட்சத்திரம் : விசாகம் ம 1.5
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அசுவினி,பரணி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
September 19 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – எதிர்ப்பு
ரிஷபம் – தடங்கல்
மிதுனம் – வெற்றி
கடகம் – மகிழ்ச்சி
சிம்மம் – பரிசு
கன்னி – சுகம்
துலாம் – தாமதம்
விருச்சிகம் – வரவு
தனுசு – சிக்கல்
மகரம் – வாழ்வு
கும்பம் – விவேகம்
மீனம் – நன்மை
சந்திராஷ்டமம் – ரேவதி, அஸ்வினி -
September 19 2023 Calendar
செப்டம்பர் 19 – இன்றைய நல்லநேரம்
சோபகிருது வருடம் – புரட்டாசி 2
19-செப்-2023 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : பஞ்சமி
திதி நேரம் : சதுர்த்தி ம 11.50
நட்சத்திரம் : சுவாதி ம 12.51
யோகம் : சித்த-மரணயோகம்
சந்திராஷ்டமம் : ரேவதி,அசுவினி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
trichy 150 kg kozhukattai
விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டையில் 150 கிலோ கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது..
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா 18/09/2023 முதல் 01/10/2023 முடிய சிறப்பாக நடைபெற உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாணிக்க விநாயகருக்கும், உச்சி விநாயகருக்கும் காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் பிரம்மாண்டமான கொழுக்கட்டை மாணிக்க விநாயகர் சன்னதியில் 75 கிலோ, உச்சி விநாயகர் சன்னதியில் 75 கிலோ 150 கிலோ எடையில் நிவேத்தியம் செய்யப்படுகிறது. இந்த கொழுக்கட்டை பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய் ஆகிய பொருட்களைக் கொண்டு திருக்கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டது..
மேலும் 2004 ஆம் ஆண்டு முதல் பெரிய கொழுக்கட்டை தயார் செய்து படையல் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. பெரிய கொழுக்கட்டையானது நிவேத்தியம் செய்யப்பட்டு சேவார்த்திகளுக்கு விநியோகம் செய்யப்படும். இன்று தொடங்கி 14 தினங்கள் நடைபெறும் திருவிழாவில் உச்சிப்பிள்ளையார் ,மாணிக்க விநாயகர் சன்னதி மூலவருக்கு தினந்தோறும் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும். மாலை பக்தி இன்னிசை நிகழ்ச்சி நாட்டிய நிகழ்ச்சி ஆன்மீக சொற்பொழிவு போன்ற கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணிக்க விநாயகர் உற்சவர் திருவிழா நாட்களில் மாலை 4 மணிக்கு பாலகணபதி, நாகாபரண கணபதி, லெஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர்கணபதி, சித்திபுத்தி கணபதி மற்றும் நர்த்தன கணபதி ஆகிய பல்வேறு விஷேச அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி தருவார். மெகா சைஸ் கொழுக்கட்டை தோளில் சுமந்து படையிலிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபடும்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்வார்கள்.விழாவிற்கான ஏற்பாடுகளை மலைக்கோட்டை கோயில் உதவிஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர். மலைக்கோட்டை கோயிலில் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாப்படுகிறது.
-
Vinayakar rupees alangaram
காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் ரூ.15 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் புகழ்பெற்ற ஏலேல சிங்க விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவறை முழுவதும் அலங்காரம் செய்யப்படும். பின்னர் பொது மக்கள் வழிபட்டு செல்வர். தொடர்ந்து இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக ஏலேல சிங்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. பின்னர் ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டது.
ரூ.15 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூ.50, ரூ.100, ரூ. 200, ரூ.500 என புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனை வழியாக வரும் பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமான வழிபட்டுச் சென்று வருகின்றனர்.
-
Karur temple kodiyetram
தமிழகத்தின் தென் திருப்பதியான கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கோவில் பட்டாச்சாரியார் கொடியை ஏற்றி வைத்து தீபாராதனை காண்பித்தார். பின்னர் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வருகின்ற 24-ம் தேதி திருக்கல்யாண உற்சவம் தொடர்ந்து 26 ஆம் தேதி திருத்தேர் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.