Blog

  • சிவனுக்கும் சித்தர்களுக்கும் என்ன தொடர்பு?

    சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு? அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பதன் காரணம் என்ன?யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் கடவுள் அல்ல…. ஆதி சித்தன். அதாவது முதல் சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள். அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள் சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக தான் பார்கிறார்கள்…. குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான் இந்த நிலை.

  • சிவனுக்கும் சித்தர்களுக்கும் என்ன தொடர்பு?

    சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு? அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பதன் காரணம் என்ன?யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் கடவுள் அல்ல…. ஆதி சித்தன். அதாவது முதல் சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள். அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள் சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக தான் பார்கிறார்கள்…. குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான் இந்த நிலை.

  • சிவனுக்கும் சித்தர்களுக்கும் என்ன தொடர்பு?

    சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு? அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பதன் காரணம் என்ன?யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் கடவுள் அல்ல…. ஆதி சித்தன். அதாவது முதல் சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள். அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள் சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக தான் பார்கிறார்கள்…. குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான் இந்த நிலை.

  • 1000-ஆவது ஆண்டு ஜயந்தி விழா… ராமானுஜர் கோயில் தேர் சீரமைக்கும் பணி தொடக்கம்

    ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி விழா ஏப்ரல் மாதம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி, ராமானுஜர் கோயிலில் உள்ள தேரை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    ஸ்ரீபெரும்பூதூரில் உள்ள ஆதிகேஷவபெருமாள், பாஷ்யகார சுவாமி கோயிலில் ராமானுஜர் தானுகந்த திருமேனியாக (உற்சவர்) அருள் பாலித்து வருகின்றார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவாதிரைக்கு 9 நாள்களுக்கு முன்பு, சித்திரைப் பெருவிழா அவதார உற்சவமாக நடைபெறும்.
    இந்த நிலையில், ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி உற்சவம், ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி மே 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, மே 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை 4 நாள்கள் தெப்பத் திருவிழா நடைபெறும். இதில், தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
    இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருவதால், சித்திரை திருவிழாவில் பெரிய தேரை பயன்படுத்தப்படாமல் சிறிய தேரை கோயில் நிர்வாகிகள் பயன்படுத்தி வந்தனர்.
    இந்த நிலையில், ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி விழாவை முன்னிட்டு, தேர் உலா வரும் காந்தி சாலை, சின்னக்கடை தெரு, திருமங்கை ஆழ்வார் தெரு ஆகிய சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
    மேலும், பாதாள சாக்கடை திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
    இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த பெரிய தேரை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.
    இதில், தேரின் சக்கரங்கள் மற்றும் வர்ணம் பூசும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள் விரைவில் நிறைவு பெறும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  • திருப்பதி கோயிலில் செல்லிடப்பேசி செயலிக்கு பெயர் சூட்ட அழைப்பு

    திருமலை திருப்பதி தேவஸ்தான செல்லிடப்பேசி செயலிக்கு பெயர் சூட்ட திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது உள்ளது.
    திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெலுங்கு புத்தாண்டான யுகாதி அன்று அதாவது வரும் மார்ச் 29 செல்லிடப்பேசி செயலியை தொடங்க முடிவு செய்தது. இதன் மூலம் பக்தர்கள் எளிதாக ஏழுமலையானின் ஆர்ஜித சேவா, விரைவு தரிசனம் உள்ளிட்ட தரிசன டிக்கெட்டுகள், வாடகை அறை முன்பதிவு, ஏழுமலையானுக்கு நன்கொடை வழங்குவது உள்ளிட்ட சேவைகளை செல்லிடப்பேசி வாயிலாகப் பெற முடியும். இந்த செயலிக்கு இன்னும் தேவஸ்தானம் பெயர் வைக்கவில்லை.
    இந்த செயலிக்கு பெயர் வைக்கும் வாய்ப்பை தேவஸ்தானம் பக்தர்களுக்கு வழங்கி உள்ளது. பக்தர்கள் தாங்கள் விரும்பும் பெயர்களை onlineservices@tirumala.org என்ற மின்னஞ்சல் மூலமோ அல்லது 9399399399 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கோ மார்ச் 17-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேவஸ்தானத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.
    அதிலிருந்து ஒரு பெயரை தேர்ந்தெடுத்து இந்த செயலிக்கு சூட்ட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

  • திருப்பதியில் பக்தர்களுக்கு புதிய வசதி

    திருப்பதி திருமலையில் உள்ள காத்திருப்பு அறைகளில் 24 மணி நேரமும் மருத்துவச் சேவை அளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் ஏழுமலையான் தரிசனத்துக்காக பல மணி நேரம் காத்திருக்கின்றனர். அவ்வாறு காத்திருக்கும் சமயங்களில் இருதய, நீரிழிவு, ரத்த அழுத்த நோயாளிகளுக்கு உடல் நலக்கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளது.


    அதனால் தேவஸ்தானம் வைகுண்டம் 2-இல் ஒரு மருத்துவர், இரு செவிலியர்கள் கொண்ட மருத்துவ நல மையத்தை தொடங்கியது. பக்தர்களின் வருகை அதிகம் இருக்கும் சமயத்தில், மருத்துவர்களின் உதவி கூடுதலாக தேவைப்படுவதால் வைகுண்டம் 1-லும் தேவஸ்தானம் மருத்துவ நல மையத்தை ஏற்படுத்தியது.
    இந்நிலையில் தற்போது இருதய நோயாளிகளின் எண்ணிக்கை பெருகி உள்ளதால் தேவஸ்தானம் வைகுண்டம் 1-இல் கூடுதலாக ஒரு மருத்துவ நல மையத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக மருத்துவ மையங்கள் செயல்படவில்லை. தற்போது அனைத்து மருத்துவ மையங்களிலும் ஒரு மருத்துவர், இரு செவிலியர்கள், ஒரு பாராமெடிக்கல் ஊழியர், ஒரு எம்.என்.ஓ. அல்லது எப்.எம்.என்.ஓ 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
    அதனால் இனி 24 மணி நேரமும் காத்திருப்பு அறைகளில் உள்ள மருத்துவ மையங்கள் திறந்திருக்கும். மேலும் இங்கு விலையுயர்ந்த அனைத்து மருந்துகளும் வைக்கப்பட்டுள்ளன. மேலும், காத்திருப்பு அறைகளில் நடமாடும் மருத்துவ மையமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாக மாறினால் அவர்கள் உடனடியாக திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் தெரிவித்தது.

  • பங்குனி உத்திரம் என்ற பார் போற்றும் விழா….

    வருங்காலம் நலமடையவும் எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றலைப் பெறவும் திருமுருகன் வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த ஆண்டுக்கான பங்குனிஉத்திரம் வருகிற 9-4-2017 (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. ஒரு வீட்டை நிலை நிறுத்துவது மரத்தாலான உத்திரம் தான். இரண்டு தூண்களுக்கு இடையே உத்திரம் அமைப்பர். அதுதான் வீட்டைத் தாங்கிப் பிடித்துக் கொள்கிறது.
    குருவிற்கு சொந்த வீடாக அமைந்த மீனத்தில் சூரியன் பங்குனி மாதத்தில் சஞ்சரிப்பார். ‘உத்ரம்’ நட்சத்திரம் வரும்பொழுது பங்குனி உத்திரம் என்ற பார் போற்றும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு தங்கரதம் ஏறி வரும் முருகப்பெருமானை தரிசித்தால், மங்கள நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். மன அமைதி கிடைக்கும்.
    அதே போல உத்திரத்தன்று முருகனை வழிபட்டால், தூண் போல நம்மை அவன் தாங்கிப் பிடித்துக் கொள்வான். துயரங்களை துரத்திவிட்டு துணையாக நம்முடன் அவன் இருப்பான். அன்றைய தினம் முருகப்பெருமானை, சர்க்கரையால் அபிஷேகம் செய்து சந்தோஷம் காணுங்கள். இளநீரால் அபிஷேகம் செய்து இனிய வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள். காவடி சுமந்தால் கவலைகள் குறையும். பால் அபிஷேகம் செய்தால் பார்போற்றும் வாழ்க்கை அமையும்.

  • திருப்பரங்குன்றம் கோயிலில் திருக்கல்யாணம்

    சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் கோயிலில் மார்ச் 4ல் துவங்கிய பங்குனித் திருவிழாவில், மார்ச் 15 ஆம் தேதி சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடந்தது. மதியம் 3:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பச்சை குதிரை வாகனத்தில் எழுந்தருளி, கிரிவீதியில் பச்சை குதிரை ஓட்டம் நடந்தது. பச்சை குதிரைக்கு களி கொடுக்கும் நிகழ்ச்சி முடிந்து, சுப்பிரமணிய சுவாமிக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு கோயில் ஆறுகால் பீடத்தில் தங்க குடத்தில் புனிதநீர் நிரப்பி பூஜைகள் நடந்தது. பட்டாபிஷேக அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். கிரீடத்திற்கு புனித நீர் அபிஷேகம், தீபாராதனை முடிந்து, சுவாமியின் சிரசில் சாத்துப்படி செய்யப்பட்டது. சுவாமியின் கரத்தில் நவரத்தின செங்கோல், வெள்ளி சேவல் மற்றும் மயில் கொடிகள் சாத்துப்படியானது. தீபாராதனை முடிந்து சுவாமிக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.தொடர்ந்து மார்ச் 16 ஆம் தேதி மதியம் 12 முதல் 12:30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 16

    கம்போடியக் கல்முகங்களை மிக நெருக்கத்தில் பார்ப்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். என்னுடைய வாழ்நாளில் இதுவரை சோழர்காலக் கோயில்களின் துவாரபாலகர்களைத்தான் பிரமாண்ட உருவில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். அதுவும் அதிகபட்சம் இடுப்புவரை உள்ள பகுதிதான் நேர்பார்வைக்குத் தெரியும். தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் ஆலய துவாரபாலகர்கள் ஆஜானுபாகுவான ஆட்கள். அண்ணாந்து பார்க்கும்போது சிற்பத்தின் முழுமையான அழகைத் தரிசிப்பது சிரமம். ஆனால் பாயோன் ஆலயக் கல்முகத்தை மிக அருகில் பார்த்து அதைத் தொட்டுப் பார்க்க முடிகிறது. 

    காலை முதல் அலைந்ததில் களைத்துப் போயிருந்தாலும், பாயோன் ஆலயத்தின் அழகு எங்களைக் கட்டிப் போட்டிருந்ததில் களைப்புத் தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தோம். அங்கோர் வாட் போலில்லாமல் இங்கு பயணிகளின் கூட்டம் சற்றுக் குறைவுதான். அதனால் எங்கள் சத்தம்தான் பெருஞ்சத்தமாக இருந்தது.

    மூன்றாம் தளத்தில் இருந்து பார்க்கும்போது சுற்றிலும் காடுதான் தெரிந்தது. வேறு நாகரிகக் கட்டுமானம் எதுவும் தெரியவில்லை. கோயிலைச் சுற்றிக் கடைகளும் ஏதுமில்லை. நம்ம ஊரில் புகழ்பெற்ற ஆலயங்களைச் சுற்றி வளைத்திருக்கும் வணிக நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்க் கோயிலை ஆக்ரமிப்பதைப் பார்த்திருக்கிறோம்.

    மதுரை புதுமண்டபத்தை நினைத்துப் பாருங்கள். அங்குள்ள சிற்பங்கள் படும்பாடு வரலாற்று ஆர்வலர்களைப் பொருமச் செய்யும். அதெப்படி ஒரு மாநிலத்திற்கே வரலாற்று உணர்வு மழுங்கிப் போயிருக்கும் ? அதெப்படி நம்முடைய மக்களுக்கு மட்டும் தமது மூதாதையர் செல்வங்களின் மேல் இப்படி ஓர் அலட்சியம் ?

    ஒருவேளை தமிழகத்தில் எவ்வளவு அலட்சியப்படுத்தினாலும் அதைத் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு சிற்பங்கள், செப்புத் திருமேனிகள், கல்வெட்டுகளின் எண்ணிக்கை அதிகமோ ? எதுவுமே அளவுக்கு அதிகமாகக் கிடைத்தால் அதன் அருமை தெரியாது என்பார்கள். நமக்கும் அப்படித்தானோ ? இல்லாவிட்டால் மதுரை மீனாட்சியம்மன் கோயில் நாயக்கர் கால ஓவியங்கள் மீது வெள்ளையடிக்கப்படுவதைப் பார்த்து சும்மா இருந்திருப்போமா ?

    ஆயிரமாண்டுப் பழமைமிக்க கற்கோபுரத்தின் மீது டிஸ்டெம்பர் சாயம் அடிப்பதைப் பார்த்தும் பதறாமல் அந்த இடத்தைக் கடக்க நம்மவர்களால் எப்படி முடிகிறது ? சிற்பங்களைச் சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று மணல்வீச்சு முறையில் அவற்றை மொண்ணையாக்கி வருகிறோமே.. இதற்கெல்லாம் என்று விடிவுகாலம் ? இல்லை அப்படி ஒன்று பிறக்குமுன்னரே எல்லாச் செல்வங்களையும் பின்னப்படுத்தி முடித்திருப்போமா ? ஈஸ்வரோ ரக்‌ஷத் !…

    இவ்வளவு அவநம்பிக்கைக்கு இடையிலும் சில விடிவெள்ளிகளைப் பார்க்க முடிகிறது. ஃபேஸ்புக்கில் இளையர்கள் சிலர் ஆலயச் சிலைகளைத் தேடிப் பிடித்துப் பெரியவர்கள் துணையோடு அதன் வரலாற்றை அறிந்து படத்தோடு பதிவிடுவதைப் பார்க்கும்போது மனத்துக்கு ஆறுதலாக இருக்கிறது. சசி தரன் என்ற இளையர் ஒருவர் ஒரு கல்வெட்டு ஆதாரம் தேடிக் கர்நாடகம் வரை சென்று வந்த அனுபவத்தை அண்மையில் படித்தேன். இவரைப் போன்ற இளையர்களைப் பார்க்கும்போது இன்னும் ஒரு நூற்றாண்டு இரும் என்று வாழ்த்தத் தோன்றுகிறது.

    கம்போடிய வரலாறு பற்றி அங்குள்ள இளையர்கள் பெருமிதம் கொண்டிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. உள்ளூர் மனிதர்களோடு நெருங்கிப் பழகினால்தான் அதைத் தெரிந்து கொள்ள முடியும்.

    ஆனால் அது அவர்களின் வாழ்வாதாரம் என்பதால் அதைப் பேணுவதில் அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை அனுமானிக்க முடிகிறது. அங்கோர் வாட் ஆலயம் ஒன்று மட்டுமே கம்போடியப் பொருளியலுக்கு மில்லியன் கணக்கான டாலர் வருமானத்தை ஈட்டித் தருகிறது. அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அங்கோர் வாட்டின் பங்கு 16 விழுக்காடு. ஆயத்த ஆடை விற்பனைத் துறைக்கு அடுத்தபடியாக, முக்கியமான பொருளியல் உந்துசக்தி சுற்றுலாத் துறைதான். 2006ஆம் ஆண்டில், சுற்றுலாத் துறை தந்த வருமானம், 1.59 பில்லியன் டாலர் என்கிறது விக்கிப்பீடியா. கம்போடியாவும் அங்கோர்வாட்டும் சொல்லும் பொருளும் போல் பிரிக்க முடியாதவை. ஆகவே, அதைப் பொல்லம்பொத்திப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது கம்போடியா என்றுகூடச் சொல்லலாம்.

    இப்போது அங்கோர் வாட்டின் நுழைவுக் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது அந்நாட்டு அரசு. கிட்டத்தட்ட 80 விழுக்காட்டு உயர்வு. அது உள்ளூர்க்காரர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நுழைவுக் கட்டண உயர்வுக்கு அஞ்சிப் பயணிகளின் வரத்து குறைந்துபோனால் என்ன செய்வது என்ற அச்சம் அவர்களுக்கு. சுற்றுலா வழிகாட்டிகளும் இந்த உயர்வை ஆதரிக்கவில்லை. அரசாங்கம் வானத்தில் இருந்துகொண்டு முடிவு எடுக்கிறது. எங்களைக் கலந்து ஆலோசிக்கவில்லை என்கின்றனர் வழிகாட்டிகள்.

    அரசாங்கமோ, இது நியாயமான உயர்வுதான். யானை வாங்குவோருக்கு அங்குசம் வாங்கவா பணமில்லாமல் போய்விடும் என்கிறது அது. ஒரு நாள் அனுமதிக் கட்டணம் 2014-இல் நாங்கள் போகும்போது 20 அமெரிக்க டாலர். இப்போது அது 37 டாலர். ஒரு குடும்பமாகப் போகும்போது நிச்சயம் கையைக் கடிக்கும். நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு, நுழைவுக் கட்டணம் மட்டும் இந்திய ரூபாயில் சுமார் 9000 வரும். பெருந்தொகைதான். ஒப்புநோக்க, இந்தியாவில் தாஜ் மகாலைப் பார்க்கவரும் வெளிநாட்டினரிடம் 1000 ரூபாய்தான் வசூலிக்கப்படுகிறது. இந்தியக் குடிமக்களுக்கு 40 ரூபாய்தான்.

    சில சுற்றுலாத் தலங்களில் குடும்பமாகப் போகும்போது அதற்கென ஒரு தொகுப்புச் சீட்டு இருக்கும். சற்று மலிவாக இருக்கும். அங்கோர் வாட்டில் அப்படிக் கிடையாது. தனித்தனிக் கட்டணம்தான். இருந்தாலும் அங்கோர் வாட்டைப் பார்க்கக் கொடுக்கலாம்தான் என்னைப் பொறுத்தவரை. இத்தனை சீராக அதைப் பராமரிக்கிறார்களே !.. அதற்கே தகும் அந்தக் கட்டணம்.

    சரி பாயோனுக்கு வருவோம். கல்முகங்களுக்கு மேல் சில இடங்களில் செடி முளைத்திருக்கிறது. அப்பனே யாராவது அதைப் பிடுங்கிப் போடுங்கள் என்று சொல்லத் தோன்றியது. கம்போடியாவின் பல ஆலயங்களை இந்தச் செடிகள் வளர்ந்து ஊடுருவிப் பிளந்து வீழ்த்தியுள்ளன. பாயோனுக்கும் அந்த கதி வரக்கூடாது. மூன்றாம் தளம் மிகவும் நெருக்கமாக இருந்தது. சில ஆய்வாளர்கள் இது முதலில் திட்டமிடாத கட்டுமானமாக இருக்கலாம் என்கிறார்கள். 

    இத்தனை பெரிய ஆலயத்தைத் திட்டமிட்ட தலைமைச் சிற்பி இந்த இடத்தை இவ்வளவு குறுகலாக வடிவமைக்கக் காரணங்கள் குறைவு என்பது அவர்களின் வாதம். பிற்காலத்தில் இது சேர்க்கப்பட்டிருக்கலாம். அல்லது மூன்றாம் தளம் கட்டும்போது திடீரெனக் கட்டுமானத் திட்டம் மாற்றப்பட்டிருக்கலாம். மத்தியிலுள்ள வட்டக் கட்டுமானம் ஓர் ஒழுங்கற்றுக் காணப்படுகிறது. அதனைச் சுற்றிலும் நிலை வாசல்களோடு பலகணிகள். சிதைந்த முகங்கள். கற்களின் உட்கூடு பல இடங்களில் தெளிவாகத் தெரிகிறது. எந்தச் சாந்தும் கற்களை இணைக்கவில்லை. கற்கள் ஒன்றையொன்று சார்ந்து அடுக்கப்பட்டுள்ளன.

    மேலே மேலே கற்களை அடுக்கும்போது அதிகரிக்கும் எடை காரணமாகக் கீழே உள்ள கட்டுமானம் மேலும் உறுதிபெறுகிறது. பெரும்பாலான கற்களின் உட்புறத்தில் அவற்றைத் தூக்குவதற்காகப் போடப்பட்ட துளைகள் இன்னும் தெளிவாகத் தெரிகின்றன. கிழக்கு வாயிலில் இருந்து நெடுகப் பார்த்தால் அடுத்த முனைவரை தடையின்றித் தெரிகிறது. கருவறையில், ஒரு புத்தர் சிலையை இருத்தியுள்ளனர். அது தொடக்க காலத்தில் இருந்து உள்ள சிலையா அல்லது தற்காலிக ஸ்தாபிதமா தெரியவில்லை. அதற்கும் அசிங்கமான ஒரு ஜிகினாத் துணி.

    சுற்றிலும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துக் கீழே மலர்ப் படையல். உண்டியலில் பலநாட்டு நாணயங்கள் கிடந்தன. கருவறையின் உச்சி திறந்து கிடக்கிறது. பெரிய பொந்துபோல் இருக்கும் அதன் வழியாகச் சூரிய ஒளி வருகிறது. திறந்து கிடப்பதால், மேலிருந்து பெய்த மழைநீர் ஒழுகிப் பக்கவாட்டுச் சுவர்களில் வழிந்த தடம் தெரிகிறது. இது திட்டமிட்டுக் கட்டப்பட்ட துவாரமா அல்லது காலப்போக்கில் கோயில் சிதிலமடைந்து ஏற்பட்ட துவாரமா என்று அனுமானிக்க முடியவில்லை.

    அதிகமாக மழை பெய்யும் இடம் என்பதால், எல்லாமே நீரில் ஊறிப் போய் உள்ளன. அதற்கு இணையாக வெயிலும் கொளுத்துகிறது. அதனால்தான் இப்படி ஒரு பசுமை இந்த ஊரில். பாயோன் கல்முகங்களோடு நாங்கள் ஐவரும் விதவிதமாகப் படங்கள் எடுத்துக் கொண்டோம். கோயிலுக்கு உள்ளே வரும்போது எல்லாரும் சேர்ந்து வந்தோம். ஆனால், கருவறைக்கு அருகே வந்தபோது அவரவர்க்குப் பிடித்த அம்சங்களைப் பார்க்க நேரம் எடுத்துக் கொண்டதால் பிரிந்துவிட்டோம்.

    ஒரு மணி நேரம்தான் ஓட்டுநர் எங்களுக்குக் கொடுத்திருந்தார். ஆனால், அதற்குள் பாயோனைப் பார்ப்பது இயலாத காரியம். இருந்தாலும் வேறு வழியில்லை. குடும்பத்தோடு மறுபடி வருவோம் என்று மனத்தை சமாதானப்படுத்திக் கொண்டு கோயிலை விட்டு வெளியேறத் தொடங்கினோம். மேற்குப்புற வாயில் வழியாக நானும் பரணியும் வெளியேறினோம். வழியில் ஒரு புத்தர் சிலை நடுநாயகமாக வைக்கப்பட்டு அதற்கும் எல்லாச் சடங்குகளும் செய்யப்பட்டிருந்தன.

    சுற்றிலும் கற்கள். பாயோன் ஆலயம் முழுமையாக இருந்தபோது இந்தக் கற்கள் எங்கே இருந்தனவோ.. இன்று மொத்தமாக எடுத்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் மழை பெரிதாகப் பிடித்துக் கொண்டது. நல்லவேளை இதுவரை எங்களை விட்டுவைத்ததே பெரிது. தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு கேமராவைக் கையால் மூடிக் காப்பாற்றியவாறு ஓடி வந்து வண்டியில் ஏறிக் கொண்டோம்.

    கனத்த மழைக்கு நடுவே கனவு போல் கரைந்து கொண்டிருந்தது பாயோன். விட்டு வரவே மனமில்லை. இதைப் படித்துவிட்டு கம்போடியா போகத் திட்டமிடுவோர் இந்தக் கோயிலுக்கும் போதுமான நேரம் ஒதுக்குங்கள். இதைப் பற்றி இன்னும் விரிவாகப் படித்துவிட்டுச் செல்லுங்கள். இணையத்தில் ஏராளமான தகவல்களும் ஆவணப் படங்களும் காணக் கிடைக்கின்றன.

    பிள்ளைகளுக்கு இதை ஓர் ஒப்படைப்பாகக் கொடுத்துக் குறிப்பு எடுக்கச் சொல்லிப் போய்வந்தால் அவர்களும் இந்த இடங்களை ஆர்வமாகப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒரு குடும்பமாகப் போனால், எல்லாருக்கும் இந்த இடங்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் தெரிந்திருப்பது அவசியம். இல்லாவிட்டால் ஆர்வம் உள்ளவரை மற்றவர்கள் பார்க்க விடமாட்டார்கள். போலாம் போலாம் என்று பிள்ளைகள் நச்சரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

    பாயோனிலிருந்து புறப்பட்டு நகர்ப் பகுதிக்குள் சென்று இரவுப் பயணத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டோம். நல்ல அகலமான சாலைகள். பெரிதாகப் போக்குவரத்து இல்லை. கடைகள் எல்லாமே பயணிகளை இலக்காகக் கொண்டு இயங்குபவைபோல் தெரிந்தன. கலைப் பொருட்கள் விற்கும் சில கடைகளை எட்டிப் பார்த்தோம். அங்கேயே உட்கார்ந்து சில பொருட்களைச் செய்து கொண்டிருந்தார்கள் சில கலைஞர்கள்.

    எல்லாம் ஆனை விலை. குதிரை விலை. எங்களால் கனமான பொருட்களை எடுத்துச் செல்லவும் முடியாது. கைச் சுமை மட்டும்தான் விமானத்தில் பதிவு செய்திருந்தோம். அது ஏழு கிலோதான். ஆகவே, ஒன்றும் வாங்கவில்லை. சியாம் ரீப்பிலிருந்து தலைநகர் புனோம் பென் செல்ல வேண்டும். குறைந்தது ஏழு, எட்டு மணி நேரம் பிடிக்கும். மறுபடியும் அந்தக் கண்டான் முண்டான் சாலையில் செல்வதை நினைத்தாலே உடம்பு வலித்தது. என்ன செய்ய முடியும் ?

    புறப்பட்டோம். வழியில் இரவு ஒன்பது, பத்து மணிவாக்கில் ஓர் ஊரில் சாப்பிட வண்டியை நிறுத்தினோம். இந்தக் கடைதான் நாங்கள் முதலில் வந்த அன்று மூடப்பட்டிருந்தது. அன்று 11 மணியாகிவிட்டதால் கடை மூடிவிட்டார்கள். இன்று நேரத்தோடு வந்ததால், தப்பித்தோம். உணவு பரவாயில்லை ரகம்தான். பிரட்டிய சோறும் முட்டை ஆம்லெட்டும் சாப்பிட்டுப் பசியாறினோம். வரும்போது இருந்த உற்சாகம், தெம்பு போகும்போது இல்லை அனைவருக்கும்.

    வண்டியில் ஏறியதுமே கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. ஓட்டுநர் ராவுக்குத் துணையாக நவீன் மட்டும் முன்னிருக்கையில் அமர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டு வந்தார். நாங்கள் நால்வரும் பெரும்பாலான நேரம் அம்பேலாகி விட்டோம். பின்னிரவு மூன்று மணிவாக்கில் புனோம் பென் சென்று சேர்ந்தோம். ஒரு சாதாரணமான ஹோட்டலில் இரண்டு அறைகள் பதிவு செய்திருந்தார் ராஜூ. அறை சுமாராக இருந்தாலும் அன்பான உபசரிப்பு..

    காலையில் எழுந்து கம்போடிய அரண்மனையும் தேசிய அரும்பொருளகமும் பார்த்துவிட்டு அறைக்குத் திரும்பி அருகிலுள்ள சந்தையில் சில நினைவுப் பொருட்கள் வாங்குவதாகத் திட்டம். மாலை நான்கு மணிக்கு விமானத்தைப் பிடிக்கவேண்டும். காலையில் எவ்வளவு சீக்கிரம் கிளம்புகிறோமோ அவ்வளவு கூடுதலான இடங்களைப் பார்க்கலாம். ஹோட்டலில் காலை உணவு கிடையாது. வெளியில்தான் சாப்பிட்டாக வேண்டும். அதில் எங்கள் பொன்னான நேரம் வீணாகப் போவது தெரியாமல் எல்லாரும் படுத்ததும் உறங்கிப் போனோம்..

    – பொன். மகாலிங்கம்

     

     

    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

     
     
  • மாங்கல்ய பலம் தரும் காரடையான் நோன்பு

    காட்டை கோயிலாக்கிய சாவித்ரி

    இல்லறம் நல்லறமாக அமைய , கணவனும் மனைவியும் மனமொத்த தம்பதியராக வாழ்வது அவசியம் . குடும்பத்திற்கு ஆணிவேரான கணவன் நீண்ட ஆயுளுடனும் ,தேக ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டியும் , தான் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டும் சுமங்கலிப் பெண்கள் இருக்கும் விரதமே காரடையான் நோன்பு. மாசியும், பங்குனியும் சேரும் சுப வேளையில் ‘காரடையான் நோன்பு’கடைபிடிக்கப்படுகிறது. இது கவுரி விரதம், காமாட்சி விரதம், சாவித்ரி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெண்கள் தங்கள் மாங்கல்ய பலம் கூடுவதற்காக மேற்கொள்ளும் நோன்பு இது .

    நோன்பு பிறந்த கதை

    அஷ்வபதி மன்னனின் மகள் சாவித்ரி, விதிவசத்தால் தனது நாட்டை எதிரிகளிடம் பறிகொடுத்த சால்வ நாட்டு மன்னனின் மகன் சத்யவானை ,விரும்பி திருமணம் செய்து கொள்கிறாள் . காட்டையே தங்களது வசந்த மாளிகையாக மாற்றி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர் . ஒரு நாள் ஞாலத்தை சுற்றி வரும் திரிகால ஞானியான நாரதர் மூலம் சத்யவானுக்கு ஆயுள் குறைவு என்று அறிந்து அதிர்ச்சி அடைகிறாள் சாவித்ரி . கணவனின் நீண்ட ஆயுளுக்காக தான் வசிக்கும் காட்டையே கோவிலாக்கி விரதம் இருக்க ஆரம்பித்தாள். தனது கணவன் சத்யவானின் நீண்ட ஆயுளுக்காக சாவித்திரி நோன்பிருந்தது பங்குனி மாதம் பிறக்கிற நேரம். ஆனால் சோதனையாக அன்று மாலையே சத்தியவானுக்கு கடும் தலைவலி ஏற்பட்டு மனைவியின் மடியில் சாய்ந்தான். அதே நேரத்தில், பதிவிரதையான சாவித்ரியின் கண்களுக்கு எருமை வாகனத்தில் கையில் பாசக்கயிற்றுடன் ஒரு உருவம் தென்பட்டது. சற்றும் மனம் பதறாத சாவித்திரி நீங்கள் யார்? என்றாள் . சாவித்ரியின் கண்களுக்கு தனது உருவம் தென்பட்டது குறித்து சற்று அதிர்ந்த எமதர்மராஜன் , நீ பதிவிரதை என்பதால் உன் கண்ணுக்குத் தெரிந்தேன். நான் தான் எமதர்மராஜா. உன் கணவனின் ஆயுளைப் பறிக்க வந்தேன்,என்றார் . மேலும் தான் வந்த வேலையை முடித்துக் கொண்டு சத்யவானின் உயிருடன் கிளம்பினார். தன்னை பின் தொடர்ந்த சாவித்திரியிடம் உனக்கு வேண்டும் வரங்களைத் தருகிறேன் கேள். ஆனால் எடுத்த உயிரை கொடுக்க வாய்ப்பில்லை என்றார் .

    குலம் தழைக்க வரம் வேண்டும்

    சாவித்ரியும் விடாப்பிடியாக என் குல வம்சம் தழைக்க வேண்டும் என்ற வரம் கேட்டாள் . தன் கடமையை நிறைவேற்றும் அவசரத்தில் இருந்த எமன் அப்படியே ஆகட்டும் உன் வம்சம் வாழையடி வாழையாக தழைக்கும்’ என்று வரம் தந்தார் . ‘‘தர்மராஜனாகிய உங்கள் வாக்கு பலிக்க வேண்டும் என்றால் , என் கணவனை உயிருடன் என்னுடன் அனுப்ப வேண்டும்’’ என்றாள் சாவித்ரி. அவளது புத்தி சாதுர்யத்தால் கவரப்பட்ட எமதர்மன் , சத்யவானுக்கு மீண்டும் உயிர் தந்தார் . நீண்ட ஆயுளுடன் வாழுமாறு அவர்களை வாழ்த்தினார். காட்டில் கிடைத்த மண்ணை பிசைந்து , தனது பதிவிரதா தன்மையினால் , சாவித்ரி அடைகளாக தட்டி , காமாட்சி அம்மனை நினைத்து படைத்து தனது விரதத்தை முடித்தாள்.

    ‘உருகாத வெண்ணையும், ஓரடையும் நூற்றேன்.

    மறுக்காமல் எனக்கு மாங்கல்யம் தா’

    என்று பிரார்த்தித்து கணவர் மற்றும் பெரியோர்களிடம் ஆசி பெற்று நோன்பை முடிக்க வேண்டும்.

    – ப . கோமதி சுரேஷ்