Blog

  • 2017-12-15-13-38-01

    மார்கழி மாத பிறப்பையொட்டி டிசம்பர் 16 ஆம் தேதி முதல் திருப்பதி கோவில் உள்பட 195 கோவில்களில் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பாடப்படுகிறது. திருப்பதி கோவிலில் தினமும் அதிகாலையில் சுப்ரபாத சேவை நடக்கிறது. ஆனால் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடப்படுகிறது. நாளை சனிக்கிழமை மார்கழி மாதம் பிறப்பதால் திருப்பதி கோவிலில் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை நிகழ்ச்சி தொடங்குகிறது. ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை நடை பெறுகிறது. தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை வேத விற்பன்னர்களைக் கொண்டு திருப்பாவை பாடப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பணட்டில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், வரதராஜ சுவாமி கோவில் உள்பட 195 கோவில்களில் திருப்பாவை நிகழச்சி நடைபெறுகிறது.

  • 2017-12-15-12-49-20

    திருவாலங்காட்டில் சிவபெருமான் ஆனந்த நர்த்தனம் புரிந்தபோது சிங்கி என்கிற நந்தி பகவான் மிருதங்கம் வாசிப்பதிலேயே தன் கவனம் முழுவதையும் செலுத்தியதால், அவரால் சிவனின் நடனத்தைக் காணமுடியாமல் போனது. ஆயினும் சிவபெருமானின் ஆனந்த நர்த்தனத்தைக் காண விரும்பி தவம் மேற்கொண்டு, மெய்ப்பேடு என்கிற இவ்விடத்தில் சிவனைப் பூஜை செய்து வந்தார். சிங்கி என்கிற அந்த நந்தியின் பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் அவ்விடத்தில் தோன்றி ஆனந்த நர்த்தனத்தை மீண்டும் ஆடிக்காட்டியதால் இத்தலத்தின் இறைவனுக்கு சிங்கீஸ்வரர் என்று பெயர். அம்பாள் மணம் மிகுந்த மலர்களை விரும்புபவள் ஆதலால் புஷ்ப குஜாம்பாள் என்று அழைக்கப்படுகிறாள். Singeeswarar Temple Mappedu. Veenai Aanjaneyarjpg மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவரான ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு அதே மூல நக்ஷத்திர தினத்தன்று சரஸ்வதி அவருடைய நாவில் சிங்கநாத பீஜாக்ஷர மந்திரங்களைப் பொறித்தார். மேலும், ஆஞ்சனேயரும் அதே மூல நக்ஷத்திர தினத்தன்று இத்தலத்தில் சிங்கநாதம் இசைத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றார். இத்தலத்தில் ஆஞ்சநேயர் வீணையுடன் இசைக்கலைஞராகக் காட்சி தந்து அருள் பாலிக்கிறார். அவர் இத்தலத்தில் அமிர்தவர்ஷணி ராகத்தை இசைத்ததாகவும் தலபுராணம் சொல்கிறது. எனவே மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய தலமாகவும் இது விளங்குகிறது. மூல நக்ஷத்திரத் தினத்தன்று இங்கே வந்து ஆஞ்சனேயரை வழிபடுவது நலமளிக்கும்.

  • 2017-12-15-12-33-13

    எப்போதும் தவக்கோலத்தில் அருளும் ஐயப்பன், ஆண்டுதோறும் மகரசங்கராந்தி நாளில் மட்டும் திருவாபரணம் அணிந்து முழு அலங்காரத்துடன் அருள்பாலிப்பார். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் சன்னிதானத்திற்கு எதிரில் உள்ள ஐயப்பனின் ஐந்தாவது மலையான காந்த மலையில் ஜோதி சொரூபமாக ஐயப்பன் காட்சிதருவார்.
    இறைவனுக்கென்று உருவ வழிபாடு பிற்காலத்தில் தான் இருக்க முடியும். ஏனெனில் மனிதன் தோன்றிய காலத்தில் உலோகங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. கற்களில் துவங்கிய சிற்பக்கலை படிப்படியாக வளர்ந்து, பிற்காலத்தில் ஐம்பொன் வரை சென்றது. எனவே மனிதன் துவக்க காலத்தில் ஒளியையே தெய்வகமாக வழிபட்டுள்ளான். சூரிய வழிபாடு தான் முதலில் தோன்றியது.
    நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என மனிதன் பகுத்தறிந்த போது ஜோதி வடிவாக அவன் இறைவனைக் கண்டான். அதனால்தான் வள்ளலார் இறைவனை அருட்பெருஞ்ஜோதி என அழைத்தார்.
    இறைவன் திருவண்ணாமலையில் ஜோதியாய் காட்சி அளிக்கிறார். கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபம் ஆண்டு முழுவதும் எரிவது அதனால் தான். இதே போல் தான் ஐயப்பசுவாமியும் ஜோதி வடிவாக காட்சி அளிப்பது, பொன்னம்பல மேட்டில் மகரசாந்தியன்று அவர் ஆண்டுதோறம் இந்த கலிகாலத்திலும் ஜோதி வடிவாய் காட்சி அளிக்கிறார்.
    பக்தர்கள் சன்னிதானத்தைச் சுற்றியுள்ள சன்னிதானம், பாண்டித்தாவாளம், புல்மேடு, சரங்குத்தி, நீலிமலை, மரக்கூடம், மலைஉச்சி, சாலக்கயம் மற்றும் அட்டதோடு ஆகிய 9 இடங்களில் இருந்து மகரஜோதியைக் காணலாம்.

  • 24

    வைகுண்ட ஏகாதசி மற்றும் புத்தாண்டையொட்டி 5 நாட்களுக்கு 24 மணி நேரமும் திருப்பதி திருமலை மலைப்பாதை திறந்தே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சொர்க்கவாசல் திறக்கப்படுவதையொட்டி வைகுண்ட ஏகாதசி மற்றும் மறுநாள் துவாதசியன்று திரளான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சுக்கு வெளியே நாராயணகிரி பகுதியில் பக்தர்களுக்காக 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு தற்காலிக வரிசை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வைகுண்ட ஏகாதசி விழா அன்று அதிகாலை நேரத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சொர்க்கவாசல் திறந்ததும் அதிகாலை 5.30 மணியளவில் முதலில் வி.ஐ.பி. தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் காலை 8 மணியளவில் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஏகாதசி தரிசனத்துக்காக வரும் இலவச தரிசன பக்தர்கள் 28-ந்தேதி காலை 10 மணியளவில் திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்க வைக்கப்படுகின்றனர். பக்தர்கள் வரிசையில் செல்ல, திருமலையில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு தரிசன வரிசைகள் மற்றும் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க கொட்டகைகள் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 28-ந்தேதியில் இருந்து ஜனவரி 1-ந்தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. பிரேக் தரிசனம், சிபாரிசு கடிதங்கள் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் நடைபாதை பக்தர்களுக்கு வழங்கப்படும் டோக்கன்களும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த 5 நாட்களும் 24 மணி நேரமும் திருப்பதி-திருமலை இடையே மலைப்பாதை திறந்தே இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • 2017-12-14-05-08-07

    ஐயப்பன் கோயிலுக்கு இடது பக்கம் மஞ்சமாதா தனிசன்னதியில் அருளுகிறாள். இங்கு மஞ்சள்பொடி தூவி, தேங்காய் உருட்டி வலம் வந்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.இங்குள்ள மணி மண்டபத்தில் தான் ஐயப்பனின் திருவாபரணப்பெட்டி வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். இவளது சன்னதிக்கு அருகில் நாகர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. இங்கு தான் கொடுகொட்டி பாடல் பாடுவது வழக்கம். ஜாதக ரீதியாக சனிதோஷம் உள்ளவர்கள் கொடுகொட்டி கலைஞர்களை பாடச்செய்து மஞ்சமாதாவை வணங்கிவருவர்.

  • 2017-12-12-05-49-37

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறிது. சுமார் 15 மணி நேரம் காத்திருந்த பிறகே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிகிறது. மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த மாதம் 15-ந்தேதி நடை திறக்கப்பட்டது. நடைதிறக்கப்பட்ட நாள் முதலே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழகம், கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள் அதிகளவு சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சுமார் 15 மணிநேரம் காத்திருந்த பிறகுதான் பக்தர்களால் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. பம்பையில் இருந்தே பக்தர்களை கட்டுப்படுத்தி வரிசையில் அனுப்பும் நிலை ஏற்பட்டது. இதனால் போலீசார் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். சபரிமலையில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. மண்டல பூஜை நெருங்குவதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும். இதனால் சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

  • 2017-12-12-05-33-04

    சபரிமலையில் துறவு பூண்ட யோக நிலையில் ஐயப்பன் எழுந்தருளியிருக்கிறார்.
    அப்படி இருந்தும் மகர விளக்கின் போது பந்தள மகா ராஜாவின் அரண்மனையிலிருந்து ஆபரணங்கள் வருவதும் அதை அணிவதும் அவர் காட்சித் தருவதும் சிறப்புப் பூஜை நிகழ்ச்சிகளாகும்.
    துறவியான சுவாமி ஆபரணங்கள் பூண்டு காட்சி தருவதேன்?
    அதற்கு ஓர் அபூர்வக் காரணம் உண்டு.
    ஐயப்பன் தன் அவதார நோக்கத்தின் நிமித்தம் பந்தள நாட்டை விட்டு சபரிமலைக்குப் புறப்படும் போது எல்லாரிடமும் தனித்தனியாக விடை பெற்றுக் கொண்டு வந்தார். அவர்களுள் பந்தள நாட்டில் நமக்குக் குருவாக இருந்த குருவும் ஒருவர்.
    அந்தக் குருவிடம் சுவாமி உங்களுக்கு நான் குருதட்சனையாக என்ன தர வேண்டும் என்று கேட்டார் ஐயப்பன்.
    குரு நெகிழ்ந்து போய் பெருமானே நீர் எனக்கு இப் பிறவியில் மாணாச்சுர் என்று கூறும் பேறே எனக்கு குருதட்சனை என்றார். அவருடைய மனைவியோ ஊமையாகவும், குருடனாகவுமிருந்த தங்கள் குழந்தையைக் குணப்படுத்தித் தரவேண்டும் என்று வேண்டினார்.
    குரு பத்தினியின் கோரிக்கைப்படி அந்த குழந்தை பிணிக்கு நீங்கச் செய்தார் ஐயப்பன்.
    அப்பொழுது தம் முன் நிற்பது தெய்வம் என்று உணர்வைக் கடந்து நெகிழ்ச்சியுற்ற நிலையில் அய்யனே நீ தங்கமும் ரத்தினமும் ஜொலிக்க மகராஜனாய் இருக்க வேண்டும், என்று ஆசீர்வதித்து விட்டார் குரு.
    எல்லாவற்றையும் கடந்த சுவாமிக்கு ஏன் சுவர்ண ரத்ன ஆபரணங்கள் என்ற உணர்வு அந்த குருவுக்கு அப்பொழுது தோன்றவில்லை.
    எனினும் குருவின் ஆசி ஆசிதானே.
    அது பொய்ந்து விடக் கூடாதே அதனால் தான் ஆண்டுக்கு ஒரு முறை அதாவது மகர விளக்கு விழாவின் போது தை 1-ம் தேதி முதல் தை 4-ம் தேதி வரை சுவாமி பந்தள ராஜன் பரம்பரையினர் கொண்டு வரும் ஆயிரம் சவரனுக்கு மேற்பட்ட தங்க ரத்ன ஆபரணங்களை அணிந்து காட்சி தருகிறார் ஸ்ரீ ஐயப்பன்.

  • 2017-12-11-13-09-16

    திருப்பதி திருமலையில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அதார் அட்டை கட்டாயமாக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு உலகில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். சுவாமி தரிசனத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க பக்தர்கள் விஐபி டிக்கட் பெற்றுக்கொண்டு ஏழுமலையானை தரிசிக்க செல்வார்கள். இதுவரை விஐபி தரிசன டிக்கெட்டை பெறுவதற்கு வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், அல்லது குடும்ப அட்டை இதில் ஏதாவது ஒன்றை காண்பித்தால் போதும். ஆனார் இந்த முறையில் மாற்றம் கொண்டு வர திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஜனவரி 1 முதல் விஐபி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் கையில் அதார் அட்டையை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆன்லைனில் முன் பதிவு செய்பவர்களும் ஆதார் அட்டை பிதிவு செய்தே இனி முன்பதி செய்ய முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • 2017-12-11-12-33-08

    தனிநெய்யையோ, தேங்காயையோ நிவேதனமாக்காது. நெய் தேங்காயை நிவேதனமாக்கியது ஏன் என்று தெரியுமா?
    முக்கண் கொண்ட தேங்காய் சிவனை உருவகப்படுத்தும். பசு நெய் கோபாலனாகிய மகா விஷ்ணுவை உருவகப்படுத்தும்.
    சிவன் விஷ்ணு இருவருடைய அருள் கதிரொளியின் கூட்டு சக்தியே சாஸ்தாவாகிய ஐயப்பனாதலால் நெய் தேங்காயும் சேர்த்து அவருக்கு நிவேதனப் பொருளாகின்றன. சபரிமலையை நோக்கி புறப்படும் போது இருமுடிக் கட்டி புறப்படுவார்கள்.
    இவற்றுள் ஒரு முடியில் சுவாமிக்குரிய அபிஷேக நிவேதனப் பொருட்கள் இருக்கும். இன்னொன்றில் நம் தேவைக்குரிய உணவுப் பொருட்கள் இருக்கும். நாம் போகப் போக நம் உணவுப் பொருட்கள் குறைந்து கொண்டே போய் இறைவனின் சன்னதியருகே செல்லும்போது நம் உணவுப் பொருட்கள் அடங்கிய முடி குறைந்திருக்கும். சுவாமி முடி மட்டும் அப்படியே மிஞ்சியிருக்கும்.
    இது ஒவ்வோர் ஆத்மாவும் இறைவனை அடையும் நிலையை உணர்த்துவது. மானுடராய்ப் பிறந்த நாம் இறைவனைத் தேட ஆரம்பிக்கும் போது இறைவன் மீதுள்ள பக்தி ஒரு முடியாகவும் நம் உலக தேவைகள் ஆகிய லௌகீகம் ஒரு முடியாகவும் இருக்கிறது. இரண்டு அம்சங்களுடனேயே தான் நாம் இறைவனைத் தேடுகிறோம். அந்த தேடலில் மெய்ஞ் ஞானம் கிட்டக் கிட்ட நம் லௌகீகப்பற்று குறைந்து மறைந்து போகிறது. இறைப் பக்தி ஒன்றுதான் மிஞ்சுகிறது. அப்பொழுதான் இறைவனடியும் தரிசனமாகிறது.

  • 22

    மண்டல பூஜையன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்க தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளாவில் இருந்து வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வருகிற 26-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் மதியம் மண்டல சிறப்பு பூஜை நடைபெறும். திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலைக்கு வழங்கிய 420 சவரன் எடையுள்ள தங்க அங்கி மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவித்து பூஜை நடத்தப்படுகிறது. இந்த தங்க அங்கி, பத்தினம்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த தங்க அங்கி டிசம்பர் 22-ந் தேதி காலை 7 மணிக்கு ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த ஊர்வலம் 22-ந் தேதி இரவு ஓமல்லூரிலும், 23-ந் தேதி இரவு கோண்ணியிலும், 24-ந் தேதி பெரிநாட்டிலும் தங்குகிறது. 25-ந் தேதி மதியம் பம்பை கணபதி கோவில் வந்து சேரும். அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்களின் தலைச்சுமையாக தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படும்.