Category: சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்

  • கருட தரிசனமும், அதன் பலனும்!

    புராணங்களின் படி, கருடன் தரிசனம் ஆன்மீகத்தில் சிறந்த பலன்களை அளிக்கும் என்ற நம்பிக்கை தமிழக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. வாரத்தின் ஒவ்வொரு கிழமையும் கருடனை தரிசிப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்த ஆர்வம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இது பக்தர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை கருடனை தரிசித்தால் உடல்நலக் குறைவுகள் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதனால், பலர் ஞாயிறு அன்று கோவில்களில் பிரார்த்தனை செய்கின்றனர். திங்கட்கிழமை தரிசனம் குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் நலத்தை பெருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை கருடனை தரிசிப்பது துணிவையும், தன்னம்பிக்கையையும் அளிக்கும் என்று இளைஞர்கள் கருதுகின்றனர்.

    புதன்கிழமை தரிசனம் பகைவர்களின் தொல்லைகளை அகற்றும் என்று பலரும் நம்புகின்றனர். வியாழக்கிழமை கருடனை தரிசிப்பது நீண்ட ஆயுளை வழங்கும் என்று ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர். வெள்ளிக்கிழமை தரிசனம் செல்வ வளத்தையும், லட்சுமி கடாட்சத்தையும் பெறுத்தரும் என்பதால், பக்தர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சனிக்கிழமை கருட தரிசனம் முக்தியை அளிக்கும் என்ற நம்பிக்கை மக்களை ஆன்மீக பாதையில் ஈர்க்கிறது.

    தமிழகத்தின் பல பெருமாள் கோவில்களில், குறிப்பாக திருநள்ளாறு, காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் கருடாழ்வார் சந்நிதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் இதுகுறித்த பதிவுகள் வைரலாகி, பக்தர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். ஆன்மீக விவாதங்களில், கருட தரிசனத்தின் முக்கியத்துவம் பற்றி பலர் விளக்கமளித்து, இதன் பலன்களை எடுத்துரைக்கின்றனர்.

     

  • முருகன் வழிபாடு: ஆன்மீக பலன்கள் மற்றும் முக்கியத்துவம்

    சென்னை: தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் ஆன்மீகத்தில் முருகன் வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. முருகப் பெருமான், ஞானத்தின் கடவுள், வீரத்தின் அடையாளம், மற்றும் தடைகளை அகற்றும் தெய்வமாக விளங்குகிறார். ஹிந்து புராணங்களின்படி, சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் மகனான முருகன், கார்த்திகேயன், சுப்பிரமணியன், ஷண்முகன், சரவணன் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். முருகன் வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து ஆன்மீக நிபுணர்கள் பல தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

    முருகனை வழிபடுவதால், மன அமைதி, தைரியம், மற்றும் ஞானம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக, திருமணத் தடைகள், கல்வியில் முன்னேற்றம், மற்றும் வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளை தீர்க்க முருகன் அருள் உதவும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், குறிப்பாக கார்த்திகை நட்சத்திர நாளில், முருகன் கோவில்களில் வேல் வழிபாடு, அபிஷேகம், மற்றும் அர்ச்சனை செய்வது சிறப்பு. தைப்பூசம், பங்குனி உத்திரம், மற்றும் வைகாசி விசாகம் போன்ற பண்டிகைகளில் முருகனை வணங்குவது பக்தர்களுக்கு பெரும் புண்ணியத்தை அளிக்கும்.

    ‘கந்த சஷ்டி கவசம்’ பாராயணம் செய்வது, முருகனின் ஆறு படைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, மற்றும் பழமுதிர்சோலை ஆகியவற்றுக்கு சென்று வழிபடுவது பக்தர்களிடையே பிரபலமாக உள்ளது. இது தீய சக்திகளை அகற்றி, உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும் தரும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு பிடித்த மலர்களான செண்பகம், புரசு, மற்றும் பால், தயிர், பன்னீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்வது ஆன்மீக உயர்வை அளிக்கும்.

    குழந்தைகளுக்கு கல்வி ஞானம், இளைஞர்களுக்கு தைரியம், மற்றும் குடும்பத்தினருக்கு நிம்மதி தருவதாக முருகன் வழிபாடு கருதப்படுகிறது. ஆன்மீக நிபுணர்கள், “முருகனை மனதார வணங்கினால், வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கும்,” என்கின்றனர்.

  • குலதெய்வ வழிபாடு: எந்த நாட்களில் வழிபடுவது சிறந்த பலனைத் தரும்?

    சில குடும்பங்கள் தொடர்ச்சியான சவால்களையும் தடைகளையும் எதிர்கொள்கின்றன. இவர்கள் தங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று முறையாக வழிபாடு செய்யும்போது, அவர்களின் கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை உணரலாம்.

    எனவே, முடிந்தவரை மாதம் ஒருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு. ஆனால், சிலரால் கோயிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலைகள் இருக்கலாம். இவர்கள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டில் குலதெய்வத்தை மனதில் நினைத்து, நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம்.

    எல்லா நாட்களும் குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்றவை என்றாலும், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள் மிகவும் உகந்தவை என ஆன்மிக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த நாட்களில் கோயிலுக்கு சென்று, குலதெய்வத்திற்கு பிடித்த நைவேத்தியங்களைப் படைத்து வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.

    அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் செல்ல முடியாதவர்கள், ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் கோயிலுக்கு சென்று வழிபடுவது நல்ல பலனை அளிக்கும்.

    குலதெய்வத்தின் தன்மைக்கு ஏற்பவும் குறிப்பிட்ட நாட்கள் சிறப்பு வாய்ந்தவை:

    • சிவபெருமான் அல்லது முனீஸ்வரர் போன்ற சிவனுடன் தொடர்புடைய தெய்வங்கள் குலதெய்வமாக இருந்தால், திங்கட்கிழமை வழிபாடு மிகவும் பொருத்தமானது.

    • முருகன் தொடர்புடைய தெய்வங்களாக இருந்தால், செவ்வாய்க்கிழமை வழிபடுவது சிறந்தது.

    • பெருமாள் தொடர்புடைய குலதெய்வங்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகள் உகந்தவை.

    • அம்பாள் போன்ற தெய்வங்களுக்கு வெள்ளிக்கிழமை வழிபாடு மிகுந்த ஆன்மிக அருளை வழங்கும்.

    குலதெய்வ வழிபாட்டின் மூலம் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் தடைகளைத் தாண்டுவதற்கான ஆற்றல் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

     

  • தமிழகத்தின் திருப்பதி: சிவபெருமான் அருள் பாவிக்கும் ஏழுமலை!

    தென்னகப் பகுதியில் ஆன்மீக பயணம் மேற்கொண்ட அகத்திய மாமுனிவர், திருமால் வாசம் செய்யும் திருமலையின் பெருமை குறித்து பிறர் கூற அறிந்து, இதுபோன்று சிவபெருமானுக்கு ஏழுமலை இல்லையே என ஏங்கினாராம். இதனை அறிந்த அகத்திய முனிவரின் உள் அகத்தில் குடி கொண்ட சிவபெருமான், "தனது தொண்டரின் விருப்பத்தை நிறைவேற்றும்படியாக" ஏழு குன்றுகள் அமைந்த வெள்ளையங்கிரி மலை மீது எழுந்தருளி, தன்னை அங்கு வந்து தரிசிக்குமாறு அகத்திய மாமுனிவருக்கு ஞானத்தின் மூலமாக உணர்த்தினாராம்.

    அதன்படி, அகத்திய மாமுனிவர் வெள்ளையங்கிரி மலை சென்று, அங்கு சுயம்புவாக அவதரித்த சிவ லிங்கத்தை வழிபட்டு தவத்தில் ஈடுபட்டார். சப்த ரிஷிகளில் ஒருவரான அகத்திய மாமுனிவர் தவம் புரிவதை கண்ட அந்த ஏழு குன்றுகளும் சிவனை நோக்கி தானும் தவம் புரிந்தன. அவைகளின் பக்தியை மெச்சி சிவபெருமான் தானும் தவக்கோலம் பூண்டதாக வரலாறு.

    அதன்படி, பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இதன் பெருமை அறிந்து இப்பகுதிக்கு வந்த போது, வேடன் ஒருவன் தனது நிலப்பரப்பில் அனுமதி இன்றி நுழைந்த அர்ஜுனனுடன் போர் புரிந்ததாகவும், பின் அந்த வேடன் தன் வேடத்தை கலைத்து சிவபெருமானாக காட்சியளித்த போது, அவரை பக்தி பெருக்குடன் வணங்கிய அர்ஜுனனுக்கு சிவபெருமான் தனது பாசுபத ஆயுதத்தை அளித்து அருள் பாவித்தார்.

    இங்கிருக்கும் ஏழு குன்றுகளும், நம் உடலில் உள்ள “ஏழு யோக சக்கரங்களை” குறிப்பதாக சாஸ்திர வல்லுநர்கள் கூறுகின்றனர். இமயத்தில் உள்ள கைலாயத்திற்கு யாத்திரை செல்ல இயலாதவர்கள் "தென் கைலாயம்" என ஆன்மீக அன்பர்களால் அழைக்கப்படும். வெள்ளையங்கிரி யாத்திரை சென்று அங்கு எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்தால், ஏழு பிறவியிலும் கைலாய யாத்திரை சென்று வந்த பலன் கிட்டும் என்பது திண்ணம்.

    கோவை மாவட்டம் பூண்டி கிரிமலையானது 5 1/2 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஏழு குன்றுகள் சிவபெருமான் அருள் பாவிக்கும் தென் திருப்பதி ஆகும். கோவை மாநகரிலிருந்து மேற்கே சுமா 36 கி.மீட்டதூரத்தில் மேற்குத் தொடச்சி மலையின் அடிவாரத்தில் அமையப்பெற்ற பிரசித்தி பெற்ற தென் கைலாயம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பல்வேறு ரிஷிகளும், மாமுனிகளும், சித்தர்களும், ஞானிகளும் ஈசனை வேண்டி தவம் புரிந்து பிறப்பில்லை நிலை அடைந்த பெருமைக்குரிய இடமாகும்.

    – பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • மானிடர்கள் செய்யும் பாவ புண்ணியங்களை கணக்கிட்டு, மேலோகத்தில் தீர்ப்பு வழங்கும் நீதிபதி யார் ?

    ஜனநாயக நாடான இந்தியாவில் மட்டும் இன்றி சர்வாதிகாரிகளின் ஆலமியின் கீழ் உள்ள மேலை நாடுகளில் கூட, ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்படும் நபருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன. வழக்கை கொடுத்தவருக்கும் எதிர் மனுதாரருக்கும் இடையே அவரவர் தரப்பு வழக்கறிஞர்களின் மாதத் திறமையின் அடிப்படையில் பாதிக்கப்படும் நபருக்கு நீதி வழங்குவதற்காக அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடுநிலையோடு நீதி வழங்க நீதிபதி ஒருவர் இருப்பது போன்று" பூலோகத்தில் மனிதர்களாகிய நாம் செய்யும் பாவ புண்ணியங்களை கணக்கிட்டு, அதற்கேற்ப நீதி வழங்குவதற்காக மேல் லோகத்தில் நீதிபதி ஒருவர் உள்ளார் அவர் யார் ? வாருங்கள் அந்த நீதிமானை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    அஷ்ட திசை பாலகர்களில் தெற்கு திசையின் அதிபதியான எமதர்மன், மகாவிஷ்ணுவின் வம்சத்தில் வந்தவர். அதாவது, மகாவிஷ்ணுவிடம் இருந்து தோன்றியவர் பிரம்மதேவன். அவரிடம் இருந்து தோன்றியவர்கள் மரீசி, காசியபர், சூரியன் ஆகிய மூவர். சூரியனிடம் இருந்து தோன்றியவரே எமதர்மன். விஸ்வகர்மாவின் மகளை சூரியன் மணம் புரிந்ததில், அவர்களுக்கு மனு, எமன் என இரண்டு ஆண் பிள்ளைகளும், யமுனா என்ற பெண் குழந்தையும் பிறந்தனர்.

    எமன் – நீதி, நேர்மை தவறாத சத்தியத்தின் காவலன். தனது சித்தி சாயாவால் பாதிக்கப்பட்ட போது, சூரியனின் ஆலோசனைப்படி சிவனை வேண்டி யாகம் நடத்தி கடும் தவம் புரிந்து, சிவபெருமான்ிடம் இருந்து தென் திசை அதிபதி என்ற பட்டம் பெற்று, எமலோகத்து அதிபர் ஆனார். சிவபெருமான், தனது ரிஷப வாகனத்திற்கு நிகராக, கருமை நிறம் கொண்ட எருமை மாடு ஒன்றை உருவாக்கி, மகாவிஷ்ணுவின் அம்சமான எமனுக்கு பரிசாக வழங்கினார் அதுவே எமதர்மனின் வாகனமான எருமை.

    மேலும், மானிடர்கள் உள்ளிட்ட ஜீவராசிகளின் பாவ புண்ணியங்களுக்கேற்ப நீதி வழங்கும் அதிகாரம் மிக்க நீதிபதி பொறுப்பையும் சிவபெருமான் எமதர்மனுக்கு அளித்தார். அவர் அமர்ந்து தீர்ப்பு வழங்குவதற்காக ஓடும் அக்னி ஆற்றுக்கு மேலே, சிம்மாசனம் அமைத்து கொடுத்தார்.

    எமதர்மன் அதில் அமர்ந்து நீதி வழங்குவதாக புராண இதிகாசங்கள் கூறுகின்றன. அவரது நீதி சிறிது சரிந்தாலும் சிம்மாசனத்துடன் எமதர்மன் அக்னி ஆற்றில் விழுந்து தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்பதால், நடுநிலையுடன் தீர்ப்பு வழங்கி வருவதாகவும் புராண கதைகள் உண்டு. தேவர்களுக்குள் மதிநுட்பம் மிக்கவராகவும் எமதர்மன் விளங்குகிறார். தர்மத்தின் வழி நடக்கும் அவர் ‘எமதர்மன்’ ‘தர்மராஜன்’ எனவும், காலம் தவறாமல் கடமையை செய்வதால் காலன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • ஆண்டின் 12 மாதமும், ஆலயங்களில் 12 திருவிழாவும்!

    நம் முன்னோர்கள் இறைவனை இமைப்பொழுதும் மறவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இரவு-பகல் அடங்கிய 24  மணி நேரத்தை, வாரங்கள், மாதங்கள் என பிரித்தனர், அதன்படி  ஆலயங்களில் ஆண்டின் 12 மாதங்களில் நடைபெறும் 12 திருவிழாவை குறித்து பார்ப்போம்,

    (1) சித்திரை மாதம் – சித்ரா பௌர்ணமி
    (2) வைகாசி மாதம் – வைகாசி விசாகம்
    (3) ஆனி மாதம் – சாவித்திரி விரதம்
    (4) ஆடி மாதம் – சாவித்திரி விரதம், கோபத்ம விரதம்.
    (5) ஆவணி மாதம் – ரட்சா பந்தனம்,  ஆவணி அவிட்டம்,
    (6) புரட்டாசி மாதம் – உமாமகேசுவர விரதம்
    (7) ஐப்பசி மாதம் – சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா,
    (8) கார்த்திகை மாதம் – கார்த்திகை தீபத் திருவிழா,
    (9) மார்கழி மாதம் – திருவாதிரை விரதம்,
    (10) தை மாதம் – தைப்பூசம்,
    (11) மாசி மாதம் – மாசி மகம்,
    (12) பங்குனி மாதம் – பங்குனி உத்திரம், இந்த 12 மாத விழாக்களின் போதும் அனைத்து ஆலயங்களிலும் இறைவனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • இறைவன் எங்கே இருக்கிறார் ? ஞானி சொன்னது என்ன ! 

     

    இறைவன் எங்கே இருக்கிறார்? ஞானி சொன்னது என்ன?

    ஒருமுறை ஞானி ஒருவர் இமயமலையில் இருந்து புறப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் ஆன்மீக யாத்திரை சென்று மக்களிடம் இறை பக்தி குறித்து எடுத்துரைத்து வந்தார். அப்படி வருகையில், கிராமம் ஒன்றில் செல்வாக்குடன் இருக்கும் செல்வந்தர் ஒருவர் ஞானியை சந்தித்து, தனது வீட்டிற்கு வந்து பசியாறும்படி அழைப்பு விடுத்தார். ஞானியும் தனது ஆன்மீக உபதேசங்களை முடித்துவிட்டு அவருடன் சென்றார்.

    அப்போது இறை பக்தி இல்லாத செல்வந்தரின் மகன் ஞானியை பார்த்து, "இறைவன் எங்கேயிருக்கின்றார்?" என்று கேட்டான். அதற்கு ஞானி, "இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறார்" என்றார். அப்படியானால், தனியாக கோவில்கள் எதற்கு? வழிபாடு எதற்கு? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அவனிடம், ஞானி கேட்டார், "உன் வீட்டில் பூஜை அறை இருக்கிறதா?" அவன், "ஆம்," என்றான். "அப்படியானால், பள்ளி அறை இருக்குமே?" "ஆம்," என்றான். "உணவு கூடம்?" "ஆம்," "கழிவறை?" "ஆம்."

    "அப்படியானால், நீ உணவை உணவறையில் சாப்பிடுகிறாயா? கழிவறையில் அமர்ந்து சாப்பிடுகிறாயா?" என்று கேட்டார். அதற்கு அவன், "அதில் என்ன சந்தேகம்? எல்லோரும் உணவை உணவு கூடத்தில் தானே சாப்பிடுவார்கள்." ஞானி சிரித்தார். "உன் வீட்டில் பல அறைகள் இருந்தும், உணவை நீ உணவகத்தில் தான் சாப்பிடுகிறாய். இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும், மனதை ஒருமைப்படுத்தி ஆத்ம ஞானம் பெற ஒரு இடம் வேண்டும். அதற்காகதான் இறைவன் கோவில்களில் குடிகொண்டுள்ளான்," என்றார்.

    அப்போது, வெளியில் இருந்து வீட்டிற்குள் ஓடி வந்த செல்லப்பிராணியான நாய் அவன் மீது தாவிய போது, அதன் காலில் இருந்த சேரானது அவனது புத்தாடையில் படிந்து விட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவன், நாயை காலால் எட்டி உதைக்க வழி தாங்காமல் குறைத்து கொண்டு அது ஓடியது. இதைப் பார்த்து வேதனை அடைந்த ஞானி, "வாயில்லா பிராணி அதனை கால்களால் எட்டி உதைக்கலாமா? நம்மைப் போன்று அதுவும் உயிரல்லவா?" என்றார். அதற்கு, அவன், "நம் உயிரும் நாயின் உயிரும் ஒன்றாகுமா?" என்றான். மீண்டும் அவனது அறியாமையை கண்டு சிரித்த ஞானி, அவனிடம் மேலே சுற்றிக் கொண்டிருக்கும் மின்விசிறியை பார்த்து, "இது எதனால் இயங்குகிறது?" என்றார். அதற்கு, அவன், "மின்சாரத்தால்," என்றான். "அப்படியானால், அந்த தொலைக்காட்சி பெட்டி எப்படி இயங்குகிறது?" "அதுவும் மின்சாரத்தால்," "அப்படியா? குளிர்சாதன பெட்டி?" "அதுவும் மின்சாரத்தால்." "அப்படியானால், மின்விசிறி சுயல்கிறதே. குளிர்சாதன பெட்டி ஏன் சுயலவில்லை?" என வினாவினார். அதற்கு அவன், "இது கூட தெரியாத உங்களை எப்படி எல்லோரும் முற்றும் உணர்ந்த ஞானி என்கின்ற நேரே?" என்றான்.

    சற்று நேரம் மௌனமாக இருந்த ஞானி சொன்னார், "மகனே, உன் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் அனைத்தும் ஒரே மின்சாரத்தால் இயங்குகிறது. அப்படி இருக்க அவை ஏன் வெவ்வேறு விதமாக செயல்படுகிறது தெரியுமா?" மீண்டும் உரைத்தார், "மின்சாரம் ஒன்றாக இருந்தாலும், அது சென்று சேரும் பொருளின் தன்மைக்கேற்றே இயங்கும். அது போன்று தான் உயிர் எனும் ஜோதியானது ஒன்றுதான். அது மாடுகளிடம் சென்றடையும் போது அதன் தன்மையுடனும், நாய் உள்ளிட்ட பிற ஜீவராசிகளிடம் சென்றடையும் போது அவைகளில் தன்மையுடனும் செயல்படுவது போல் நாமும் செயல்படுகிறோம். எனவே, நமக்குள் இருக்கும் உயிர் வேறு, மற்ற பிராணிகளுக்கு இருப்பது வேறு. உயிர் அல்ல, எல்லாம் பரம்பொருளான ஈசனின் ஜோதி வடிவமே," என விளக்கமாக கூறியதை கேட்டு, மனம் தெளிந்த செல்வந்தரின் மகன், அவரது காலில் விழுந்து வணங்கினான்.

    பொன்.கோ.முத்து, திருவள்ளூர்.

  • தை அமாவாசை: புனித நதிகளில் நீராடிய பக்தர்கள்!

    ல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் தை மாதம் வரக்கூடிய அமாவாசை, ஆடி மாதம் வரக்கூடிய அமாவாசை, புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய அமாவாசை ஆகியவை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. முன்னோர்களின் சாபங்கள், தோஷங்களில் இருந்து விடுபடுவதற்கும், நம்முடைய தலைமுறை துன்பம் இல்லாத வாழக்கையை பெறுவதற்கும், முன்னோர்களின் ஆசியை பெறுவதற்கும் ஏற்ற நாளாக தை அமாவாசை கருதப்படுகிறது. இந்த நாளன்று புனித நதிகளில் நீராடுவதும், தானங்கள் அளிப்பதும், வழிபாடு செய்வதும் மிக சிறந்த பலன்களை தரும் என்பது மக்களின் நம்பிக்கை.

    அதன்படி தை அமாவாசையான இன்று கடல் மற்றும் நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சூரிய உதயம் தொடங்கியதும் புனித நீராடினர். பின்னர் தங்களது முன்னோர்களுக்கு கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். இதையடுத்து ராமநாதசுவாமி கோயிலில் உள்ள மகாலட்சுமி தீர்த்தம் முதல் கோடி தீர்த்தம் வரை புனித நீராடினர். தொடர்ந்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசித்தனர். முன்னதாக இன்று அதிகாலை 4.30 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு ஸ்படிக லிங்க பூஜை சிறப்பாக நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி, அம்பாள் சன்னதிகளில் கால பூஜைகள் நடைபெற்றன. இதேபோல கோயில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் இணைந்து வடக்கு நந்தவனத்தில் பக்தர்களுக்கு பால், பிஸ்கட், குடிநீர் வழங்கினர். ராமநாதசுவாமி கோயில் தெற்கு திருக்கல்யாண மண்டபத்தில் நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்கள், சென்னை மெரினா கடற்கரை உட்பட பல இடங்களிலும் ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

    கன்னியாகுமரியில் புண்ணிய தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கடலில் புனித நீராடி, கடற்கரையில் தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர். பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோயில், பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.  

    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தாய், தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் என்று முன்னோர்களின் பெயர்களை கூறி புரோகிதர்கள் மூலம் எள், தர்ப்பண நீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு வைத்து வழிபட்டனர். நாகை மாவட்டத்தில் புதிய கடற்கரை, வேளாங்கண்ணி காமேஸ்வரம் கடற்கரை, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலய குளக்கரை, தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ப மண்டப படித்துறையில் திரளான மக்கள் திரண்டு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கல்லணை, பாபநாசம், கும்பகோணத்தில் உள்ள காவிரி படித்துறை, கரூர் மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி காவிரி மற்றும் அமராவதி ஆறுகள், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளுக்கு மக்கள் சென்று நீராடினர். டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

  • புத்தாண்டு 2025: சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

    பரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 26 ஆம்  தேதி மண்டல பூஜை நடைபெற்று முடிந்தது. மண்டல சீசனில் 41 நாட்களில் 32.49 லட்சம் பக்தர்கள் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். நடப்பு சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி தரிசன முன்பதிவின் படி தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கும் தரிசன அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மண்டல பூஜை நாட்கள் நெருங்க, நெருங்க பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வந்தது. இதையடுத்து உடனடி தரிசன முன்பதிவு மூலம் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கடந்த மண்டல சீசனில் ஒரே நாளில் அதிகப்படியாக 1 லட்சத்து 6 ஆயிரம் பக்தர்கள் வரை சிரமம் இன்றி ஐயப்பனை தரிசனம் செய்தனர். 

    இந்தநிலையில் மகரவிளக்கு சீசன் தொடங்கியதையடுத்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இன்று (புதன்கிழமை) ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. புத்தாண்டின் முதல் நாள் தரிசனத்திற்காக பம்பை முதல் சன்னிதானம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து ஐயப்ப சாமியை தரிசித்து வருகின்றனர். 

    மகர விளக்கு பூஜை வருகிற 14 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 15 ஆம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், உடனடி தரிசன முன்பதிவின்படி தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படும் என்றும், அதற்கு ஏதுவாக பம்பையில் உடனடி தரிசன முன்பதிவுக்கான கவுண்ட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

  • மீனாட்சியம்மன் கோவில் தெப்பத் திருவிழா!

    மீனாட்சியம்மன் கோவில் தெப்பத் திருவிழா!

    உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கச்சப்பரம், அன்னம், காமதேனு, சிம்ம வாகனம், குதிரை, ரிஷபம், யாளி, பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.