Category: old…

old…

  • திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறப்பு….

    திருமலைக்கு செல்ல திருப்பதி மலைப்பாதை இன்று முதல் 12-ந் தேதி வரை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    திருமலை ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் அக்டோபர் 3-ந் தேதி தொடங்க உள்ளது. அதற்காக திருமலையில் உள்ள மாட வீதிகள், முக்கிய வளைவுகள், சந்திப்புகளில் வண்ண மின்விளக்கு அலங்காரம், மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.
    திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து கழகம் சார்பில் 750 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    மேலும் மலைபாதையில் நடந்து வருபவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அக்டோபர் 1 முதல் வரும் 12-ந் தேதி வரை முதல், இரண்டாம் மலைப் பாதைகள் இரண்டும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையையொட்டி, வரும் 7,8-ந் தேதிகளில் இருசக்கர வாகனங்கள் மலைப் பாதையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

  • ஐயப்ப பக்தர்களை கவுரவிக்க தேவசம் போர்டு முடிவு…..

    சபரிமலைக்கு ஐயப்பனை தரிசனம் செய்ய 50 ஆண்டுகளாக வரும் பக்தர்களை கவுரவிக்க தேவசம் போர்டு முடிவுசெய்துள்ளது. 50 ஆண்டுகளாக சபரிமலை வருவோர் தங்களை பற்றிய விவரங்களை தேவசம் போர்டுக்கு பதிவு தபால் மூலம் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக் மண்டல பூஜையின் போது தேவசம் போர்டு சார்பில் பொன்னாடை போர்த்தி சபரிமலை ஐயப்பன் உருவச்சிலை வழங்கி கவுரவிக்கப்படும் என்று தேவசம்போர்டு தலைவர் பிராயர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  • சபரிமலை ஐயப்பன் விக்ரகத்துக்கு புதிய அஷ்டபந்தனம்….

    சபரிமலை ஐயப்பன் விக்ரகத்துக்கு அக்டோபர் மாதம் 22, 23-ந்தேதிகளில் புதிதாக அஷ்டபந்தனம் சாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    இந்த ஆண்டு மண்டல பூஜைக்கு இன்னும் 50 நாட்களே உள்ளது. இதனால் சபரிமலையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
    ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின்போது லட்சக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் சபரிமலையில் திரள்வார்கள்.
    சமீபத்தில் சபரிமலை கோவிலை புனரமைப்பதற்காக தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. அப்போது சபரிமலை, மாளிகைபுரத்து அம்மன் கோவில்களில் சில பணிகளை செய்ய ஐயப்பனின் உத்தரவு கிடைத்தது.
    சுவாமி ஐயப்பன் விக்ரகம், மாளிகைபுரத்து அம்மன் விக்ரகம் ஆகியவற்றின் பீடத்தில் சாத்தப்பட்டுள்ள அஷ்ட பந்தனம் மூலிகையை மாற்றி புதியதாக அஷ்ட பந்தனம் சாத்த உத்தரவு கிடைத்தது.
    இதை தொடர்ந்து புதிய அஷ்ட பந்தனம் சாத்தும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 22, 23-ந்தேதிகளில் சபரிமலையிலும், மாளிகைபுரத்திலும் நடைபெற உள்ளது.

  • திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு சிறப்பு பேருந்துகள்….

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்திற்காக ஆந்திரா மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 11ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.
    பிரம்மோற்சவ விழாவுக்கு லட்ச கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், இந்த நாட்களில் சிறப்பு பேருந்துகளை இயக்க ஆந்திரா மற்றும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
    பிரம்மோற்சவத்தின் சாதாரண நாட்களில் நாள்தோறும் 2,000 முறை திருப்பதி திருமலை இடையே பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மேலும், தமிழக பக்தர்களுக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து 135 ஆந்திரா பஸ்கள், 135 தமிழக பஸ்கள் என மொத்தம் 270 பஸ்கள் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருத்தணி உள்ளிட்ட வழித்தடங்களில் திருப்பதிக்கு இயக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

  • ராமேஸ்வரம் கோயிலில் உண்டியல் காணிக்கை ….

    ராமேஸ்வரம் கோயில் உண்டியல் 55 லட்ச ரூபாய் காணிக்கையாக வசூலாகி உள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
    கோயில் கிழக்கு திருக்கல்யாண மண்டபத்தில் இணை கமிஷனர் செல்வராஜ் முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் கோயில் ஊழியர்கள், உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
    இதில் 55 லட்சத்து 62 ஆயிரத்து 71 ரூபாயும், தங்கம் 64 கிராம், வெள்ளி 3 கிலோ 750 கிராம் வசூலாகி இருந்தது.

  • திருமலையில் விரைவு தரிசன சேவை ரத்து…..

    திருமலையில், அக்டோபர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் 300 ரூபாய் விரைவு தரிசனத்தை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
    திருமலையில், பிரம்மோற்சவத்தின் போது, அக்டோபர் 7 ஆம் தேதி இரவு, கருடசேவை நடக்க உள்ளது. கருடசேவை உற்சவத்தை காண திருமலைக்கு, ஐந்து லட்சம் பக்தர்கள் வரை வருவர். அதனால், அக்மடோபர் 7 மற்றும் புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையான, அக்டோபர் 8 என, இரு நாட்களிலும், 300 ரூபாய் விரைவு தரிசனத்தை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    மேலும், பிரம்மோற்சவ நாட்களில், குறைந்த அளவே, விரைவு தரிசன டிக்கெட் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

  • தல்லாகுளம் பெருமாள் கோவில் புரட்டாசி பெருந் திருவிழா

    அழகர்கோவிலின் உப கோவிலான தல்லாகுளம் பெருமாள் கோவிலில் வரும் 3 ஆம் தேதி புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது புரட்டாசி பெருந்திருவிழா ஆகும். அதன்படி இந்த வருட புரட்டாசி பெருந்திருவிழா வருகிற அக்டோபர் 3–ந்தேதி காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்கு கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று மாலையில் பெருமாள் அன்னவாகனத்தில் எழுந்தருளி புறப்பாடாகிறார். மறுநாள் காலை கிருஷ்ணாவதாரம், இரவு சிம்ம வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெற்று, புதன்கிழமை காலையில் ராமாவதாரமும், இரவு அனுமார் வாகனத்தில் சாமி புறப்பாடும், மறுநாள் வியாழக்கிழமை காலையில் கஜேந்திர மோட்சமும், அன்றிரவு கருட வாகனத்திலும் பெருமாள் புறப்பாடு நடக்கிறது.

    அக்டோபர் 7ஆம் தேதி காலை ராஜாங்க சேவையும், இரவு சேஷவாகனத்திலும், 8–ந்தேதி காலை மோகனாவதாரமும், அன்றிரவு யானை வாகனமும். ஞாயிற்றுக்கிழமை காலையில் சேஷசயனத்திலும், அன்றிரவு புஷ்ப விமானத்திலும் பெருமாள் எழுந்தருளுகிறார்.
    அக்டோபர் 12–ந்தேதி காலையில் தீர்த்தவாரி நடைபெற்று, இரவு சப்தாவர்ண பூச்சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 13–ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 14–ந் தேதி காலை உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வி.ஆர். வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி க.செல்லத்துரை உள்பட திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

  • பழனி கோயிலில் விஜயதசமி அம்பு போடும் விழா….

    பழனி மலைக் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, அக்டோபர் 11 ஆம் தேதி விஜயதசமி அம்பு போடுதல் மற்றும் வன்னிகாசுரன் வதை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
    பழனி மலைக் கோயிலில் நவராத்திரி விழா அக்டோபர் 1 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு, மலைக் கோயிலில் தினமும் சிறப்புப் பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் நடைபெற உள்ளன. பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலிலும் நவராத்திரி நாள்கள் முழுவதும் பெரியநாயகி அம்மனுக்கும், அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசாமிக்கும் பல்வேறு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் நடைபெற உள்ளன.
    விழாவின் முக்கிய நிகழ்வாக, அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையும், அக்டோபர் 11 ஆம் தேதி விஜயதசமியை முன்னிட்டு அம்புவில் போடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னர், மலைக் கோயிலில் இருந்து சக்திவேல் புறப்பாடு செய்யப்பட்டு, அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயில் வந்தடையும்.

    இதனால், மலைக்கோயில் மதியம் 2.30 மணிக்கு மேல் திருக்காப்பிடப்படும். பின்னர், அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து சுவாமி தங்கக் குதிரை வாகனத்தில் வெற்றிவேர் மாலையுடன், அருள்மிகு பெருமாள் சகிதமாக அருள்மிகு மானூர் சுவாமிகள் கோயில் அருகிலுள்ள அருள்மிகு கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயிலில் எழுந்தருளி, வன்னி மரமாக மாறி நிற்கும் வன்னிகாசுரனை வதை செய்த பின், வேல் மலைக் கோவிலுக்கு புறப்பாடாகும். அதையடுத்து, மலைக் கோயிலில் சம்ரோட்சண பூஜைகள் நடத்தப்பட்டு, நள்ளிரவு அர்த்தஜாம பூஜை நடத்தப்படும்.

  • நவராத்திரியில் அம்பாளை வணங்குவதன் பலன்

    அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன. இந்தப் பெயர்களைச் சொல்லி வழிபட்டால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

    ஜெய் காளி- எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்
    ஜெய் சண்டிகாதேவி- செல்வம் சேரும்
    ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.
    ஜெய் துர்க்கா- ஏழ்மை அகலும், துன்பம்
    விலகும், போரில் வெற்றி கிடைக்கும், மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.
    ஜெய் சுபத்ரா- விருப்பங்கள் நிறைவேறும்
    ஜெய் ரோகிணி- நோய் தீரும்.

    நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும், அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும். கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா, ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச் சொல்லவும்.

  • கொலு வைக்க ரெடியா….

    பல வீடுகளில் கொலு வைப்பது பரம்பரை பரம்பரையாக வருகிற பழக்கம். பெண்கள், கலைத்திறமையையும் கற்பனை வளத்தையும் வெளிப்படுத்தப் பயன்படுகிற களம்… அதுமட்டுமல்ல விருந்தோம்பல் என்கிற உன்னதப் பண்புக்கு விளக்கம் தருகிற நிகழ்வு…
    இந்த அளவு முக்கியத்துவம் உள்ள கொலுத் திருவிழா, கொலு எப்படி வைக்க வேண்டும்… எப்படியெல்லாம் அலங்காரம் செய்தால் அழகாக இருக்கும்?

    கொலு என்பது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியை பூஜிக்கும் பண்டிகை. அதனால் ஒரு தெய்வத்துக்கு 3 நாட்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டாடுகிறோம்.
    இதனை நம் விருப்பத்திற்கேற்ப, நம் வசதிக்கேற்ப செய்யலாம்.
    ஒவ்வொரு வருடமும் புதிதாகக் கொஞ்சம் பொம்மைகளை வாங்கி வைத்து கொலுவை அழகுபடுத்துங்கள். 9 படிகள்தான் கொலு வைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப ஒற்றைப்படையில் படிகளில் கொலு அமைத்துக் கொள்ளலாம்.
    புதிதாக கொலு வைப்பவர்கள், ஒட்டு மொத்தமாக எல்லா பொம்மைகளையும் வாங்காமல் ஒவ்வொரு வருடமும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம். முதல்கட்டமாக விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, தசாவதார பொம்மைகளை வைத்து கொலு அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கடுத்து படிப்படியாக மற்ற பொம்மைகளை வாங்கலாம்.
    கொலுவில் பூங்கா அமைக்க சிலர் விரும்புவார்கள். அப்படி அமைப்பவர்கள், ஒரு வாரத்துக்கு முன்னதாக சிறு பாத்திரத்தில் மணல் பரப்பி வெந்தயம், கடுகு, கேழ்வரகு ஆகியவற்றை விதைத்து, வளரச் செய்து கொலுவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    பழைய பொம்மைகளின் வண்ணப்பூச்சு மங்கி இருந்தால், அவற்றுக்கு நீங்கள் விரும்பும் வண்ணம் பூசி, புதிது போலவே மாற்றலாம்.
    அதேபோல கொலு வைக்கும் வீடுகளில், சிலர் சுமங்கலிகளுக்கு மட்டும் தாம்பூலப்பை கொடுப்பார்கள். வீட்டுக்கு வந்து போகும் எல்லோருக்கும் தாம்பூலப்பை கொடுக்கலாம். அது உங்கள் மீது மற்றவர்களுக்கு இருக்கும் மதிப்பை உயர்த்திக் காட்டும். குழந்தைகளைக் கவரும் வகையில் அவர்களுக்குப் பிடித்த பொம்மைகளையோ, புத்தகங்களையோ பரிசாக கொடுக்கலாம்.