மார்ச் 25 – பங்குனி உத்திரம்
சோபகிருது வருடம் – பங்குனி 12
மார் 25, 2024 திங்கள்
பங்குனி உத்திரம்
நல்ல நேரம் : 6.30 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 4.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : பிரதமை
திதி நேரம் : பவுர்ணமி ம 1.16
நட்சத்திரம் : உத்திரம் கா 11.19
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : திருவோணம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
மார்ச் 25 – பங்குனி உத்திரம்
-
பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் 62 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன ஒற்றை தேங்காய்….
350 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய விசேஷ நாளான வள்ளி முருகன் திருக்கல்யாண உற்சவத்தில் வைக்கப்பட்ட தேங்காய் ஒன்றை ரூபாய் 62,000 க்கு ஏலம் எடுத்த வெளியூர் பக்தர்.
கடந்த தைப்பூசம் மறுநாள் நடைபெற்ற தெய்வயானை முருகன் திருமண வைபத்தில் ஒரு தேங்காய் 36 ஆயிரம் விலை போன நிலையில் இந்தப் பங்குனி உத்திர திருநாளில் ஒரே தேங்காய் 62,000 க்கு ஏலம் எடுக்கப்பட்ட து.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நகரில் மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் திருக்கோவில். சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவில் போடி நாயக்கனூரை ஆண்ட ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்டு தற்போது இந்து அறநிலைத்துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இங்கு கடந்த வாரம் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் செய்யப்பட்டு நாளை பங்குனி உத்திரம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று பள்ளிக்கும் முருக பெருமானுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இந்தத் திருக்கல்யாண நிகழ்ச்சியின்முக்கிய திருக்கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. ரூபாய் ஐந்தாயிரத்தில் தொடங்கிய தேங்காய் ஏலம் நிறைவாக ரூபாய் 62 ஆயிரம் வரை கேட்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன் கவிதா வள்ளியம்மை தம்பதியினர் இந்த ஒற்றைத் தேங்காயை ரூபாய் 62 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். கடந்த தைப்பூசம் மறுநாள் நடைபெற்ற தேவயானி முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவத்தில் ஏலம் விடப்பட்ட தேங்காய் ரூபாய் 32,000 க்கு விலை போனது .
இன்று பங்குனி உத்திரம் முதல் நாள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் முருகப்பெருமான் வள்ளி திருக்கல்யாண வைபவத்தில் வைக்கப்பட்ட தேங்காய் ஒன்று இரண்டு மடங்கு அதிகம் விலை கேட்கப்பட்டு ரூபாய் 62,000 க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
இது தவிர கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் ஏலம் எடுக்கப்பட்ட தேங்காய் இன்று சுவாமி முன்பு உடைக்கப்பட்டதில் தேங்காய் முற்றிலும் அழுகாமல் காய்ந்து நிலையில் ஓடுடன் ஒட்டிக்கொண்டு என்பது குறைபாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலின் சிவாச்சாரியார் அந்த தேங்காயை பக்தர்களுக்கு காண்பித்த இப்பொழுது அனைவரும் அரோகரா கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர்
-
பழனி பங்குனி உத்திரத்திருவிழா தேரோட்டம்….
பழனி பங்குனி உத்திரத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழா கடந்த 18ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று முத்துகுமாரசுவாமி ,வள்ளி,தெய்வானை திருக்கல்யாணமும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் இன்றும் நடைபெற்றது. இன்று மாலை 4.மணிக்கு மேல் அருள்மிகு முத்துக்குமாராசாமி-வள்ளி,தெய்வானையுடன், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பழனி அடிவாரம் வடக்குகிரிவீதியில் இருந்து நான்கு கிரிவீதிகளிலும் வலம் வந்து அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுக்க, அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி தெய்வயானை சமேதராக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேரோட்டத்தில் பழனி கோவில் இணைஆணையர் மாரிமுத்து, அறங்காவலர் தலைவர் சந்திரமோகன் ,அறங்காவலர் குழுவினர், கோட்டாட்சியர் சரவணன், திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். வருகின்ற 27 ஆம் தேதி கொடி இறக்க நிகழ்ச்சியுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைகிறது.
-
மார்ச் 24 – சுபமுகூர்த்த நாள்
மார்ச் 24 – சுபமுகூர்த்த நாள்
சோபகிருது வருடம் – பங்குனி 11
மார் 24, 2024 ஞாயிறு
பவுர்ணமி
ஹோலி,
கழுகுமலை,
கங்கைகொண்டான்,
திருச்சுழியில் தேர்
வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 7.31 – 9.00)
நல்ல நேரம் : 7.30 – 8.30
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : பவுர்ணமி
திதி நேரம் : சதுர்த்தசி கா 11.24
நட்சத்திரம் : பூரம் கா 8.46
யோகம் : சித்த-அமிர்த
சந்திராஷ்டமம் : திருவோணம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
மார்ச் 24 – பவுர்ணமி நாள் ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – லாபம்
ரிஷபம் – பயம்
மிதுனம் – நலம்
கடகம் – ஆக்கம்
சிம்மம் – இன்பம்
கன்னி – நன்மை
துலாம் – பகை
விருச்சிகம் – வரவு
தனுசு – புகழ்
மகரம் – பரிசு
கும்பம் – பரிவு
மீனம் – இன்பம்
சந்திராஷ்டமம் – திருவோணம் -
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா… திருக்கல்யாண வைபவம்….
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து, பாதயாத்திரையாக வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு தீர்த்தம் செலுத்தி வழிபடுகின்றனர். இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஆறாம் நாள் திருவிழாவான இன்று நடைபெற்றது.
திருஆவினன்குடி கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் அருள்மிகு முத்துக்குமாரசாமி- வள்ளி,தெய்வானைக்கு திருமணம் நடைபெற்றது. முன்னதாக அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.தொடர்ந்து அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வானையுடன் மணக்கோலத்தில் வெள்ளித்தேரேறி நான்கு கிரிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருமண நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசம் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர். பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை ஞாயிற்றுகிழமை மாலை நடைபெறவுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
இட்டகவேலி ஶ்ரீ நீலகேசி அம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை திருவிழா…
குமரி இட்டகவேலி ஶ்ரீ நீலகேசி அம்மன் கோவிலில் 151 பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை திருவிழா இன்று நடைபெற்றது.
குமரி மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படும் கோவில்களில் ஒன்றான இட்டகவேலி ஶ்ரீ நீலகேசி அம்மன் கோவில் தூக்கத்திருவிழா கடந்த 17 ம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில் விழாவின் 7ஆம் திருவிழா நாளான இன்று பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை திருவிழா நடத்தப்பட்டது.
முன்னதாக கோவிலில் வழிபடும் அம்மன்கள் மூன்று பேரும் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பந்தலில் எழுந்தருளினர்.தொடர்ந்து தூக்க தேரில் பொருத்தப்பட்டிருந்த வில்லுகளில் நான்கு தூக்கக்காரர்கள் பச்சிளம் குழந்தைகளை தூக்கி வானுயுர உயர்ந்தபடி நிற்கும் தேரை பக்தர்கள் கூடி இழுத்து கோவிலை சுற்றி ஒருமுறை வலம் வைத்து தூக்க நேர்ச்சையை முடித்து வைத்தனர்.
இந்த வருடம் 151 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்பட்டது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் ஆசி பெற்று சென்றனர்.
-
திருப்பதி… தெப்பத்தில் வலம் வந்து காட்சியளித்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாசர்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலமாக நடைபெற்று வரும் வருடாந்திர தெப்போற்சவம். தெப்பத்தில் வலம் வந்து காட்சியளித்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாசர்.
ஆண்டுதோறும் ஐந்து நாட்கள் வருடாந்திர தெப்போற்சவம் நடத்துவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 21ஆம் தேதி தெப்போற்சவம் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது அந்த வகையில் நான்காம் நாளான இன்று ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீ சீனிவாச பெருமாளை அலங்கரித்து மாட வீதிகளில் வலம் வர செய்தனர்.
தொடர்ந்து வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவ மூர்த்திகளை எழுந்தருள செய்து திருக்குளத்தில் வலம் வரச் செய்தனர் நான்காம் நாளான இன்று ஐந்து சுற்றுகள் திருக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு பெருமாள் தாயார்கள் காட்சியளித்தனர் .
-
மார்ச் 23 – இன்றைய ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – ஆசை
ரிஷபம் – உயர்வு
மிதுனம் – நஷ்டம்
கடகம் – ஜெயம்
சிம்மம் – மறதி
கன்னி – அச்சம்
துலாம் – பக்தி
விருச்சிகம் – சுகம்
தனுசு – நன்மை
மகரம் – வெற்றி
கும்பம் – சாந்தம்
மீனம் – லாபம்
சந்திராஷ்டமம் – உத்திராடம் -
மார்ச் 23 – இன்றைய நல்லநேரம்
மார்ச் 23 – இன்றைய நல்லநேரம்
சோபகிருது வருடம் – பங்குனி 10
மார் 23, 2024 சனி
நல்ல நேரம் : 7.30 – 8.30
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : திரையோதசி கா 9.12
நட்சத்திரம் : மகம் கா 6.08
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : உத்திராடம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்