Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • ஏப்ரல் 15 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – வரவு
    ரிஷபம்         – வெற்றி
    மிதுனம்     – பயம்
    கடகம்         –  உயர்வு
    சிம்மம்         –   நன்மை
    கன்னி         –    கவலை  
    துலாம்         –     ஆதரவு   
    விருச்சிகம்     –  அமைதி
    தனுசு         –     துன்பம்
    மகரம்         –    பரிவு
    கும்பம்         –      செலவு
    மீனம்         –      தாமதம்
    சந்திராஷ்டமம்    –       விசாகம்

     

  • தமிழ் புத்தாண்டு… தங்ககவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்,,,

    தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி மற்றும் தங்ககவச அலங்காரம்! -ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்!

    நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் உருவான மலையின் மேற்குப்பகுதியில், அருள்மிகு நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மசுவாமி கோயில் குடவறைக் கோயிலாக அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு எதிரில் 18 அடி உயரத்தில் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. மேற்கூரை இல்லாமல் நரசிம்மரை வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் இங்கு இரவு பகல் 24 மணி நேரமும் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்து வருகிறார்.

    உலகபுகழ் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 1008 வடைமாலை சாற்றிய பிறகு 5 மணிக்கு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய் காப்பு, பஞ்சாமிருதம், நெய், தேன், பழ வகைகள், பால், தயிர், மஞ்சள், சந்தனம் சொர்ணம் கொண்டு அபிஷேகமும் பின்னர் பல் வகை வாசனை மலர்களால் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து. ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு மஹா தீபம் காண்பிக்கப்பட்டன.

    இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் நாமக்கல் கோட்டை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

  • ஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு நாள் ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – தோல்வி
    ரிஷபம்         – பரிசு
    மிதுனம்     – லாபம்  
    கடகம்         –  செலவு
    சிம்மம்         –   சுகம்
    கன்னி         –    கவலை  
    துலாம்         –     வெற்றி  
    விருச்சிகம்     –  நன்மை
    தனுசு         –     பயம்
    மகரம்         –    துன்பம்  
    கும்பம்         –      சிக்கல்  
    மீனம்         –      ஆதரவு
    சந்திராஷ்டமம்    –       சுவாதி

  • ஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு

    ஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு
    குரோதி வருடம் – சித்திரை – 1
    ஏப் 14, 2024
    ஞாயிறு
    தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள்
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : சூன்ய
    திதி நேரம் :  சஷ்டி மா 4.47
    நட்சத்திரம் :  மிருகசீரிடம் அ.கா 5.17
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : சுவாதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • தமிழ் புத்தாண்டு சித்திரை கனி காணுதல்…

    சித்திரை முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இது உத்தராயண காலத்தில் சூரியனின் பயணத்தில் ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில் நுழையும் காலமாகும். இதனையே தமிழ் வருடத்தின் பிறப்பாக கொண்டாடுகிறோம்.
     
    தமிழில் இத்தினத்தில் சித்திரை கனி காணுதல் என்றும் மலையாளத்தில் விஷூ கனி காணுதல் என்கிற சடங்கானது கேரளா மற்றும் தமிழகத்தில் அனைவரது வீட்டிலும் நடைபெறுகிறது. சித்திரை முதல் நாள் கனிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படும். காரணம் என்னவென்றால் மா, பலா, வாழை என்கின்ற முக்கனிகளும் இக்காலத்தில் கிடைக்கும்.

    பங்குனி கடைசி நாள் இரவே பூஜை அறையில் மாகோலமிட்டு பின் ஒரு பெரிய தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளும் வைப்பர், தேங்காய் வைப்பர், பின்பு வெற்றிலை, பாக்கு, வாசனை மலர்களை கொண்டும், கொன்றை மலரினாலும் அலங்கரிப்பர்.

    பணம் மற்றும் காசுகளை நிரப்பி வைப்பர், ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை அந்த தட்டில் வைப்பர், அதன் பிறகு உப்பு, சர்க்கரை, அரிசி, பருப்பு முதலானவற்றை தனித்தனி பாத்திரத்தில் நிரப்பி வைப்பர். அதற்கு பின் உறங்க சென்று விட்டு காலையில் எழுந்தவுடன் முதலில் சென்று பூஜை அறையில் உள்ள மங்கள பொருட்களில் கண் விழிக்க வேண்டும்.

    இப்படி செய்வதால் வீட்டில் மங்களம் பொங்கும், லட்சுமி கடாக்க்ஷம் நிறையும் என்றும், வருடம் முழுவதும் மகிழ்ச்சி நிறையும் என்பது நம்பிக்கை ஆகும். இதுவே சித்திரை கனி மற்றும் விஷூகனி காணுதல் எனப்படுகிறது.

  • குரோதி வருடம்…. துயில் நீங்கி எழும்போது செய்ய வேண்டியது….

    சித்திரை பிறக்கும் தினத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். சித்திரை, தமிழ் மாதங்களில் முதல் மாதம் என்பதால் அம்மாதப்பிறப்பை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் ஒரு புதிய பெயரில் பிறக்கும். இந்தாண்டு குரோதி வருடம் பிறக்கிறது.

    சித்திரை மாதம் தொடங்குவதற்கு முன், இரவு வீட்டில் நிலைக்கண்ணாடி முன்பாக தட்டில் பலவகையான பழங்கள், பணம்-காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்துவிடுவார்கள். மறுநாள் காலையில் துயில் நீங்கி எழும்போது, அந்த தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண் விழிப்பார்கள். இது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது.

    பூஜையறைகளை அலங்கரித்து விளக்கேற்றுவதும், முக்கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுவதும், புதுவருட பஞ்சாங்கம் வாங்கி பெரியோர் வாயால் பஞ்சாங்க பலனை கேட்பதும், இன்றும் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக உள்ளது.

    சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர்மோர் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப்பச்சடி, பருப்பு வடை, பருப்பு பாயாசம், மசால் வடை போன்றவை இடம்பெறுதல் அவசியம்.

  • ஏப்ரல் 13 – இன்றைய நல்லநேரம்

    ஏப்ரல் 13 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – பங்குனி 31
    ஏப் 13, 2024
    சனி
    பாபநாசம், கோவில்பட்டியில் தேர்
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : பஞ்சமி
    திதி நேரம் :  பஞ்சமி மா 5.00
    நட்சத்திரம் :  ரோகிணி அ.கா 5.05
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : சித்திரை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • ஏப்ரல் 13 – இன்றைய ராசிபலன்….

    ஏப்ரல் 13 – இன்றைய ராசிபலன்….
    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – செலவு
    ரிஷபம்         – சுபம்
    மிதுனம்     – நட்பு
    கடகம்         –  புகழ்
    சிம்மம்         –   அமைதி
    கன்னி         –    பிரீதி
    துலாம்         –     நன்மை
    விருச்சிகம்     –  வாழ்வு
    தனுசு         –     அன்பு
    மகரம்         –    உயர்வு
    கும்பம்         –      கவலை
    மீனம்         –      தடை
    சந்திராஷ்டமம்    –       சித்திரை

  • ஏப்ரல் 12 – சதுர்த்தி

    ஏப்ரல் 12 – சதுர்த்தி
    சோபகிருது வருடம் – பங்குனி 30
    ஏப் 12, 2024
    வெள்ளி
    சதுர்த்தி
    நல்ல நேரம் : 9.30 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் :  சதுர்த்தி மா 5.47
    நட்சத்திரம் :  கார்த்திகை அ.கா 5.16
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் : அஸ்தம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • ஏப்ரல் 12 – சதுர்த்தி நாள் ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – சுபம்
    ரிஷபம்         – அமைதி
    மிதுனம்     – பாராட்டு
    கடகம்         –  வெற்றி
    சிம்மம்         –   உயர்வு
    கன்னி         –    கவலை
    துலாம்         –     ஆதரவு  
    விருச்சிகம்     –  அன்பு
    தனுசு         –     கோபம்
    மகரம்         –    புகழ்
    கும்பம்         –      போட்டி
    மீனம்         –      நிறைவு
    சந்திராஷ்டமம்    –       அஸ்தம்