Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • ரிஷப ராசிக்கு ஜூலை மாதம் செல்வங்கள் சேர செய்ய வேண்டியது…

    ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

    கிரகநிலை:

    ராசியில் குரு – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் – பஞசம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சனி (வ) – லாப ஸ்தானத்தில் ராஹூ – அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றங்கள்:

    07-07-2024 அன்று சுக்கிரன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    11-07-2024 அன்று செவ்வாய் அயன சயன போக  ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    16-07-2024 அன்று சூரியன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    எந்த ஒரு காரியத்திலும் அனுபவ அறிவைக் கொண்டு திறம்பட செயலாற்றும் ரிஷப ராசியினரே இந்த மாதம் பணவரத்து திருப்தி தரும். ஆனால் உங்களுக்கு நன்மை செய்கிறேன் என்று கூறிக் கொண்டு உங்களை சுற்றி வருபவர்களால் செலவு உண்டாகும் கவனம் தேவை. திடீர் கோபம் ஏற்பட்டு அதனால் அடுத்தவர்களிடம் சண்டை உண்டாக நேரலாம். எனவே மிகவும் நிதானமாக இருப்பது நல்லது. வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

    தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

    குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும் படியாக இருக்கலாம். நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கைத் துணை ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

    பெண்களுக்கு வீண் பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை தரும். மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது.

    மாணவர்களுக்கு நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.

    கார்த்திகை 2, 3, 4 பாதம்:

    தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

    ரோகிணி:

    எடுத்த காரியத்தை தைரியமாக உறுதியுடன் செயல்படுத்துவீர்கள். வாழ்க்கைக்கு தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய ஆடை அணிகலன்கள் – ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும்.

    மிருக சிரீஷம் 1, 2, பாதம்:

    தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்தது இனி சீராகும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். அதே நேரத்தில் பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நன்மை தரும்.

    பரிகாரம்: பவுர்ணமியில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்க எல்லா செல்வங்களும் சேரும். கடன் பிரச்சனை தீரும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 19, 20

    அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • மேஷ ராசிக்கு ஜூலை மாத ராசிபலன்

    மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

    கிரகநிலை:

    ராசியில் சந்திரன், செவ்வாய் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – சுக ஸ்தானத்தில் புதன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சனி (வ) – அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றங்கள்:

    07-07-2024 அன்று சுக்கிரன் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    11-07-2024 அன்று செவ்வாய் ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    16-07-2024 அன்று சூரியன் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும் மேஷ ராசியினரே இந்த மாதம் எதைப் பற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பணவரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. இல்லையெனில் வீணான அவச்சொல் வாங்க நேரிடும்.

    தொழில் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது அவை போய் சேர்ந்தனவா என்று கண்காணிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம்.

    குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளிடம் நிதானமாக பேசுவது நல்லது.

    பெண்களுக்கு எதைப் பற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வரவும் செலவும் சரியாக இருக்கும்.

    மாணவர்களுக்கு கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை நன்கு படிப்பது நல்லது.

    அஸ்வினி:

    ஒரு குறிக்கோளை மனதில் வைத்து துணிவுடன் செயலாற்றுவீர்கள். உங்கள் பேச்சு திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்துமுடியும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் அவர்களால் உதவி ஆகியவையும் கிடைக்கலாம். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார். பகைகள் விலகும்.

    பரணி:

    தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராது. போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் மீதான மதிப்பு உயரும். சக தொழிலாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.

    கார்த்திகை 1ம் பாதம்:

    குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், எதிர்ப்புகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

    பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து கந்தர்சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 17, 18

    அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10, 11

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • ஜூன் 30 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  சுகம்
    ரிஷபம்         – லாபம்
    மிதுனம்     – சுபம்
    கடகம்         –  ஜெயம்
    சிம்மம்         –   தாமதம்  
    கன்னி         –    நற்செயல்  
    துலாம்         –     பக்தி
    விருச்சிகம்     –  மேன்மை
    தனுசு         –     கவலை
    மகரம்         –    அமைதி
    கும்பம்         –      பரிசு
    மீனம்         –      ஆதரவு   
    சந்திராஷ்டமம்    –         மகம்

  • ஜூன் 30 – இன்றைய நல்லநேரம்

    ஜூன் 30 – இன்றைய நல்லநேரம்
    குரோதி வருடம் – ஆனி 16
    ஜூன் 30 – 2024
    ஞாயிறு
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : திதித்துவயம்
    திதி நேரம் :  நவமி ம 1.35
    நட்சத்திரம் :  ரேவதி கா 9.10
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் : உத்திரம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • ஜூன் 28 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  போட்டி
    ரிஷபம்         – பெருமை  
    மிதுனம்     – மகிழ்ச்சி
    கடகம்         –  உற்சாகம்
    சிம்மம்         –   ஜெயம்
    கன்னி         –    உயர்வு  
    துலாம்         –     நேசம்
    விருச்சிகம்     –  பாசும்
    தனுசு         –     அனுகூலம்  
    மகரம்         –    சோர்வு
    கும்பம்         –      பக்தி  
    மீனம்         –      சினம்  
    சந்திராஷ்டமம்    –         பூசம், ஆயில்யம்

  • ஜூன் 28 – வெள்ளி

    ஜூன் 28  – வெள்ளி
    குரோதி வருடம் – ஆனி 14
    ஜூன் 28 – 2024
    வெள்ளி
    நல்ல நேரம் : 9.30 – 10.30
    எமகண்டம் : 3.00 – 4.30
    குளிகை : 7.30 -9.00
    ராகு : 10.30 – 12.00
    திதி : சப்தமி
    திதி நேரம் :  சப்தமி மா 6.24
    நட்சத்திரம் :  பூரட்டாதி ம 12.24
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • சுயம்பு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய 94 ம் ஆண்டு சிரசு ஊர்வலம்…

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பாலாற்றங்கரையில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு சுயம்பு ஸ்ரீகெங்கையம்மன் கோயில் 94 ஆம் ஆண்டு சிரசு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

    திருப்பத்தூர் மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய சிரசு திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெற்று வரும் இத்திருவிழாவிற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பாகவே அம்மனுக்கு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருந்து  நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய 3 நாட்களாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் கூழ் அமுது படைத்தல்,  மாவிளக்கு படைத்தல் மற்றும் அம்மன் ஊர்வலம் ஆராதனை நடந்தது. அம்மனுக்கு ஏராளமான பெண்கள்   பொங்கலிட்டும் , நேர்த்திக்கடன் செலுத்தியும் வணங்கினார்கள்.

    மேலும் தமிழ் கலாச்சாரம் போற்றும் வகையில் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழாவில் பல்வேறு நடன நிகழ்ச்சிகள் கச்சேரி விளையாட்டுப் போட்டிகள், வாண வேடிக்கை, நையாண்டி மேளம், கரகாட்டம் இரவு திருப்பத்தூர் மாவட்டமே போற்றும் வகையில் வான வேடிக்கை உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தது.

    இதனைத் தொடர்ந்து அருள்மிகு கெங்கை அம்மன் சிரசு திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள். வீடுகள் தோறும் அம்மனுக்கு சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெற்றது.

    திருவிழாவை காண தேவலாபுரம்,ராமச்சந்திராபுரம் , காமராஜபுரம், கம்மகிருஷ்ணம் பள்ளி, வெங்கடசமுத்திரம், மிட்டாளம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கோவிந்தாபுரம்,  துத்திப்பட்டு, ஆம்பூர் நகரம், வேலூர், திருப்பத்தூர், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

     

  • பழனி அருள்மிகு கூனக்காளியம்மன் கோயிலில் ஆனித் திருவிழா…

    பழனி அருள்மிகு கூனக்காளியம்மன் கோயிலில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

    பழனி கடைவீதி பின்புறம் கச்சேரி புதுத்தெருவில் ஆனிமாதத் திருவிழா செவ்வாய்க்கிழமை சக்திகரகம் எடுத்து வருதலுடன் துவங்கியது.  மாலையில் சரவணப்பொய்கையில் சக்திகரகம் எடுத்து வருதல் அம்மனுக்கு மகாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியன நடைபெற்றது.  புதன்கிழமை காலை சண்முகநதிக்கு தீர்த்தம் எடுத்து வருதலும் மாலையில் மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது.  

    நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் மாவிளக்கு ஏந்தியபடி ஓம் சக்தி கோஷத்துடன் ஊர்வலம் வந்தனர்.  இரவு 12 மணி அளவில் சக்திகரகம் சண்முகநதியில் விடப்பட்டது.  மறுபூஜை மற்றும் சிறப்பு அன்னதான நிகழ்ச்சிகளும், சமையல் போட்டிகளும் நடைபெறுகிறது.  வரும் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வைத்து கிடா வெட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.  

    அன்று அருள்மிகு கருப்பண சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம். சந்தனகாப்பு அலங்காரமும், அசைவவிருந்தும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் தலைவர் மற்றும் நிர்வாகி பி எஸ் கே எல் ராஜா , இளைஞர் நற்பணி மன்றம், மாதர் சங்கம் ஆகியன இணைந்து நடத்தி வருகிறது.

  • ஜூன் 27 – இன்றைய ராசிபலன்….

    ஜூன் 27 – இன்றைய ராசிபலன்….
    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  நம்பிக்கை
    ரிஷபம்         – பாராட்டு
    மிதுனம்     – உதவி
    கடகம்         –  சிரமம்  
    சிம்மம்         –   ஊக்கம்
    கன்னி         –    தனம்    
    துலாம்         –     பரிவு   
    விருச்சிகம்     –  நிறைவு
    தனுசு         –     ஓய்வு
    மகரம்         –    பரிசு
    கும்பம்         –      நேர்மை
    மீனம்         –      பாசம்
    சந்திராஷ்டமம்    –         புனர்பூசம், பூசம்

  • ஜூன் 27 – இன்றைய நாள் எப்படி?

    ஜூன் 27 – இன்றைய நாள் எப்படி?
    குரோதி வருடம் – ஆனி 13
    ஜூன் 27 – 2024
    வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 11.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    குளிகை : 9.00 – 10.30
    ராகு : 1.30 – 3.00
    திதி : சஷ்டி
    திதி நேரம் :  சஷ்டி இ 8.50
    நட்சத்திரம் :  சதயம் ம 2.00
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் : பூசம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்