18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை!
அனுமன் ஜெயந்தியை ஒட்டி சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள ஶ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
அவசியம் படிக்க
அனுமன் ஜெயந்தியை ஒட்டி சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள ஶ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
இன்றைய ராசிபலன்
மேஷம் – பொறுமை
ரிஷபம் – நட்பு
மிதுனம் – செலவு
கடகம் – உற்சாகம்
சிம்மம் – நன்மை
கன்னி – விருத்தி
துலாம் – உழைப்பு
விருச்சிகம் – நற்செயல்
தனுசு – அமைதி
மகரம் – ஆதாயம்
கும்பம் – போட்டி
மீனம் – ஆக்கம்
சந்திராஷ்டமம் – திருவாதிரை, புனர்பூசம்
ஜனவரி 13 – இன்றைய நல்லநேரம்
சோபகிருது வருடம் – மார்கழி 28
13-ஜன-2024 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : திதித்துவயம்
திதி நேரம் : துவிதியை ம 2.35
நட்சத்திரம் : திருவோணம் மா 4.16
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை,புனர்பூசம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
தை பொங்கல் திருநாள் முதலாக, தை அமாவாசை, ரத சப்தமி, தைப்பூசம், தை கிருத்திகை ஆகியன நாமறிந்த சிறப்பான நாட்கள். தை மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டிய வேறு சில வழிபாடுகளும் உண்டு.
சாவித்ரி கௌரி விரதம்: தை மாதம் 2-ஆம் நாள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. சிவனார் தனக்கருளிய இந்த விரதத்தை, தருமருக்கு போதித்தாராம் மார்க்கண்டேயர். விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். அதன்பின், குயவர் வீட்டுக்குப் போய் அவரது சக்கரத்தில் இருந்து மண்ணை எடுத்துக் கொண்டு வர வேண்டும். அந்த மண்ணால் சாவித்ரி தேவி வடிவம் செய்ய வேண்டும்.
பிறகு மௌன விரதம் பூண்டு முறைப்படி பூஜை செய்து, ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் பூஜித்து, 9-வது நாளன்று மாலையில் பூஜையை முடிக்க வேண்டும். இந்த முறைப்படி ஒன்பது ஆண்டுகள் பூஜை செய்ய வேண்டும். ஒன்பதாம் ஆண்டு பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோடி முறங்களில்…
ஒவ்வொன்றிலும் ஒன்பது வெற்றிலை பாக்கு- ஒன்பது மஞ்சள் கிழங்குகள் – ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும். அதன் பிறகு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும். அதன் பிறகே உண்ண வேண்டும்.
நீண்ட ஆயுள், செல்வம், சந்தான பாக்கியத்தையும் அருளக் கூடியது இந்த விரதம். பைரவ வழிபாடு: தை மாதத்தில் முதலில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை வடை மாலை சாற்றி வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும்.
வீரபத்திர வழிபாடு: மங்கலவாரம் எனப்படும் செவ்வாய்க் கிழமை தோறும் ஒரு வருட காலம் வீரபத்திரரை வழிபட, வல்வினைகள் நீங்கும். வருடம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், தை மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமைகளிலாவது இந்த விரதம் இருப்பது சிறப்பு. இதனால், நீங்காத தடைகள் நீங்கும். பயமும் தீவினைகளும் நம்மைவிட்டு விலகும். கிரக பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும் அற்புத வழிபாடு இது.
காரைக்காலில் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பத்து ஸ்ரீகோதண்டராமர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள த்ரிநேத்ர தசபுஜ பஞ்சமுக ஆஞ்சனேயர் ஏகாந்த அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.
காரைக்கால் அடுத்த கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் ஆலயத்தில் ஹனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மூலவர் ஸ்ரீதேவி,பூதேவி சமேத வரதராஜ பெருமாள், உற்சவர் ஸ்ரீகோதண்டராமர் மற்றும் ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சநேயருக்குசிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றது.
இதில் பால்,தயிர், மஞ்சள், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், திரவியப்பொடி மற்றும் பலவகை பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து ஏகாந்த அலங்காரத்தில் பக்தர்கள் அருள்பாலித்தார் பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்றைய ராசிபலன்
மேஷம் – போட்டி
ரிஷபம் – சிரமம்
மிதுனம் – உற்சாகம்
கடகம் – நஷ்டம்
சிம்மம் – முயற்சி
கன்னி – செலவு
துலாம் – ஆக்கம்
விருச்சிகம் – இன்பம்
தனுசு – பாசம்
மகரம் – மறதி
கும்பம் – லாபம்
மீனம் – அமைதி
சந்திராஷ்டமம் – மிருகசீருஷம் , திருவாதிரை
ஜனவரி 12 – சந்திர தரிசன நாள்
சோபகிருது வருடம் – மார்கழி 27
12-ஜன-2024 வெள்ளி
விவேகானந்தர் பிறந்த நாள்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : பிரதமை
திதி நேரம் : பிரதமை மா 4.40
நட்சத்திரம் : உத்திராடம் மா 5.41
யோகம் : சித்த-மரணயோகம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிசீ டம்,திருவாதிரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
அனுமன் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமன் பிறந்த நாளன்று காலையிலேயே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ஏனெனில், அனுமனின் ஆசிரியர் சூரியன். அவரிடமே அனுமன் இலக்கணம் படித்து, சர்வ வியாகரண பண்டிதர் என்னும் பட்டம் பெற்றார். வியாகரணம் என்றால் இலக்கணம். அனுமனின் குருவை நமது குருவாக மதித்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் திரும்பிய இடமெல்லாம் விநாயகர் கோயில் இருப்பதை போல், மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கும் கேரளா முதல் மகாராஷ்டிரம் வரை ஆஞ்சநேயருக்கு தனி கோயில்கள் அதிகம். பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோயில்களில் தனி சன்னதியிலும், சிவன் கோயில்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கம்.சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம்.
வெண்ணெய் சாத்துவது ஏன்:
ராமசேவைக்காக தன் உடம்பைப் புண்ணாக்கிக் கொண்டவர் அனுமன். போர்க்களத்தில் அவர் பட்ட காயம் கொஞ்ச நஞ்சமல்ல. அவரைக் கட்டிப் போட்டு தெருத்தெருவாக இழுத்துச் சென்றார்கள். காயத்தின் வேதனை குறைய குளிர்ந்த பொருள் பூசுவது இயல்பு தானே! அதனால் தான், அனுமனுக்கு வெண்ணெய் சாத்தும் வழக்கம் ஏற்பட்டது. உலகியல் ரீதியாக இப்படி ஒரு கருத்து சொல்லப்பட்டாலும், ஆன்மிகக் கருத்து வேறு மாதிரியானது. வெண்ணெய் வெண்மை நிறமுடையது. வெள்ளை உள்ளமுள்ள பக்தர்களை அனுமனே தன்னுடன் சேர்த்து அருள் செய்கிறான் என்பதன் அடையாளமாக வெண்ணெய் சாத்தப்படுகிறது.
கெட்டுப்போகாத வெண்ணெய்: திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் அனந்த பத்மநாபன் சந்நிதி முன்புறமுள்ள ஆஞ்சநேயருக்கு முக்கியமான வழிபாடு வெண்ணெய் சாத்துவது ஆகும். இந்த வெண்ணெய் எவ்வளவு வெயில் அடித்தாலும் உருகுவது இல்லை. எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப்போவதும் இல்லை.
குங்குமப் பொட்டு: வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம். பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும்.
ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய் பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்.
ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்.
திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழனன்று வெற்றிலை மாலை, துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சாத்தலாம். அனுமன் ஜெயந்தியன்று வாயுபுத்திரர் அனுமனை நினைத்து வழிபடலாம்.
சனிக்கிழமை நாளில், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது துளசி மாலை அணிவித்து, மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். வாழ்வில் எல்லாக் காரியங்களிலும் ஜெயம் உண்டாக்கித் தந்தருள்வார் அனுமன் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
அனுமனுக்கு உரிய சனிக்கிழமை நாளில், அனுமனைத் துதிப்பதும் அனுமன் சாலீசா பாராயணம் செய்வது மிகவும் விசேஷம் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
இந்த நாளில், அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும். தடைப் பட்ட காரியங்கள் யாவும் நிறைவேறும். மனதில் உள்ள குழப்பம் விலகும். சங்கடங்கள் யாவும் தீரும்.
வியாபாரத்தில் ஏற்றம் இல்லையே என வருந்துபவர்கள், தொழிலில் தொடர்ந்து நஷ்டமே ஏற்பட்டு வருகிறது எனக் கலங்குபவர்கள், அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்தி, வேண்டிக் கொண்டால், விரைவில் தொழிலில் ஏற்றம் உண்டு. வியாபாரத்தில் வெற்றியைத் தந்தருள்வார் ஆஞ்சநேயர் என்கிறார் திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலின் ஸ்ரீநிவாச பட்டாச்சார்யர்.
அனுமன் சாலீசா பாராயணம் செய்வது, மனோதிடத்தையும் மன வலிமையையும் வழங்கும் என்கிறார்கள். மேலும் வெண்ணெய்க் காப்பு சார்த்தி வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும்.
ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஷ்ச மஹாபல
ராஜா ஜயதி ஸுக்ரீவோ ராகவேணாபிபாலித
தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மண
ஹநுமாந்ஷத்ருஸைந்யாநாம் நிஹந்தா மாருதாத்மஜ
ந ராவணஸஹஸ்ரமே யுத்தே ப்ரதிபலம்பவேத்.
ஷிலாபிஸ்து ப்ரஹரத: பாதபைஷ்ச ஸஹஸ்ரஷ
அர்தயித்வா புரீம் மங்காமபிவாத்ய ச மைதிலீம்.
ஸமரித்தார்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வ ரக்ஷஸாம்
தஸ்ய ஸந்நாதஷப்தேந தேபவந்பயஷங்கிதா
ததரிஷுஷ்ச ஹநூமந்தம்
ஸந்த்யாமேகமிவோந்நதம்