Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Mahalinga Swamy Temple Kumbakonam

    மகாலிங்க சுவாமி கோவில் தைப்பூச பெருவிழாவையொட்டி பஞ்சரத தேரோட்டம்!

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி கோவில் தைப்பூச பெருவிழாவையொட்டி பஞ்சரத தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

  • January 25 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – சாந்தம்
    ரிஷபம்         –  முயற்சி
    மிதுனம்     –   நலம்
    கடகம்         –  நன்மை  
    சிம்மம்         –   சினம்
    கன்னி         –    பாராட்டு
    துலாம்         –     அலைச்சல்
    விருச்சிகம்     –  கவனம்
    தனுசு         –     ஆக்கம்
    மகரம்         –    ஆர்வம்
    கும்பம்         –      சிரமம்
    மீனம்         –      மேன்மை
    சந்திராஷ்டமம்    –      கேட்டை

     

  • January 25 2024 thaipoosam

    ஜனவரி 25 – தைப்பூசம்
    சோபகிருது வருடம் – தை 11
    பவுர்ணமி
    25-ஜன-2024 வியாழன்
    தைப்பூசம்,
    கோவை, மருதமலை, பழநி முருகன்,
    நாகர்கோவில் நாகராஜா தேர்
    கரிநாள்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் : பவுர்ணமி இ 11.56
    நட்சத்திரம் : புனர்பூசம் கா 9.13
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : கேட்டை
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • murugan thaipoosam

    சந்திரன் கடகத்தில் தனது சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் பூச நட்சத்திரத்தில் இருந்து மகர ராசியில் இருக்கும் சூரியனை பார்க்கும் நாளே தைப்பூசம். சக்தியின் வெளிப்பாடும், தெய்வாம்சமும் பொருந்திய காலம் தை மாதம். தைப்பூச நாள் சிவன், அம்பாள், முருகனுக்கு உகந்த நாளாகும்.

    தினசரி கோயிலுக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் வீட்டில் காலை, மாலை இரு வேளையும் காமாட்சியம்மன் விளக்கு அல்லது குத்துவிளக்கு ஏற்றி வைத்து அந்த ஜோதியை வணங்குவது பல காலமாக உள்ள சாஸ்திர சம்பிரதாய வழக்கம். ஆலயத்தில் இறைவனை தரிசித்த பின்னர் கற்பூர ஜோதியை வணங்கி கண்களில் ஒற்றிக் கொள்வது ஆலய வழிபாடுகளின் முக்கிய அம்சம்.

    தைப்பூசத்தின் சிறப்புகள் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக நடனம் புரிவார்.நடன நிலையில் உள்ள சிவனை, நடராஜர் என வணங்குகிறோம். தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார். இந்த நிலையை உமா மகேஸ்வரர் என்றழைக்கிறோம். ஆகவே இந்த தைப்பூச திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும்.

    தேவ குருவான பிரகஸ்பதிக்கு பூசம் நட்சத்திரம் என்பதால் அன்றைய தினம் குரு வழிபாடு செய்வதும் சிறப்பு. பூச நட்சத்திர நாள் காவடி பிரியன் கந்தனுக்கு மிகவும் விசேஷமான நாள். இந்நாளில்தான் முருகப் பெருமான் வள்ளியை மணமுடித்தார். தாரகாசுரனை வதம் செய்ய தாய் பார்வதியிடம் வேல் வாங்கிய நாள். இந்நாளில் அனைத்து முருகன் ஸ்தலங்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும்.

    தைப்பூச நாளை காணிக்கை செலுத்தும் நாளாக முருக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். பழங்கள், நெல், காய்கறிகள் எது விளைந்தாலும் அதை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகவே காவடிகளில் அவற்றை வைத்து எடுத்து செல்வார்கள்.இந்த நாளில் உடலை வருத்தி நடைபயணம் மேற்கொண்டு முருகப் பெருமானை தரிசிப்பார்கள். தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளிலும், மருதமலை, சிக்கல், வயலூர், குன்றக்குடி, வல்லக்கோட்டை, திருப்போரூர், குன்றத்தூர், வடபழனி என அனைத்து முருகன் கோயில்களிலும் அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும்.

  • Mangadu theppam thiruvizha

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் தெப்ப திருவிழா தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கோ பூஜையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. தெப்பத் திருவிழாவின் முதல் நாளான நேற்று அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் முதலில் வெள்ளீஸ்வரர் மூன்று சுற்றுகளும் அதனை தொடர்ந்து காமாட்சி அம்மன் எழுந்தருளி தெப்பத்தில் ஏழு சுற்றுகளும் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

     

    பின்னர் இரவு காமாட்சி அம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. தெப்பத்தில் சென்றுவர குறிப்பிட்ட பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் தெப்ப திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் கோவில் ஜப்பம் அருகே குவிந்து இருந்தனர் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மாங்காடு போலீசாரம் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    நேற்று தொடங்கிய தெப்ப திருவிழாவானது வரும் 26 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் செயல் அலுவலர் கவெனிதா மற்றும் பரம்பரை தர்மகர்த்தா மணலி. சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

  • palani murugan kalyanam

    பழனி தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான முத்துகுமாரசுவாமி  ,வள்ளி ,தெய்வானை திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.  

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசப் பெருவிழா கடந்த ஜன.19 ல் திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது.  10 நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி வெள்ளிக் காமதேனு, வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு இரதவீதி உலா எழுந்தருளினார். வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.  

    பொற்சுண்ணம் இடித்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பிரதாய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தம்பதி சமேதர் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சோடஷ அபிஷேகமும், தொடர்ந்து சோடஷ உபச்சாரமும் நடைபெற்றது. தொடர்ந்து தம்பதி சமேதர் முத்துக்குமாரசாமி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய வெள்ளித்தேரில் ஏற்றம் செய்யப்பட்டு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு இரத வீதிகளிலும் ஆடி அசைந்து உலா வந்தது.

    நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து பரவசமடைந்து அரோகரா கோஷம் எழுப்பினர். நாளை மாலை தேரடியில் 4.30 மணிக்கு தைப்பூசத் திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக வரும் ஜன.28 அன்று தெப்பத்தேர் உலா மற்றும் திருக்கொடி இறக்கம் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள்,உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  • January 24 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – வெற்றி
    ரிஷபம்         –  தனம்
    மிதுனம்     –   ஓய்வு  
    கடகம்         –  மறதி   
    சிம்மம்         –   சினம்
    கன்னி         –    உற்சாகம்
    துலாம்         –     நிறைவு
    விருச்சிகம்     –  செலவு   
    தனுசு         –     பகை
    மகரம்         –    நன்மை
    கும்பம்         –      பெருமை
    மீனம்         –      லாபம்
    சந்திராஷ்டமம்    –      அனுஷம்

  • January 24 2024 subamurthanaal

    ஜனவரி 24 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – தை 10
    சுபமுகூர்த்த நாள்
    24-ஜன-2024 புதன்
    குன்றக்குடி,
    திருவிடைமருதூரில் தேர்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : சதுர்த்தசி இ 10.43
    நட்சத்திரம் : திருவாதிரை கா 7.43
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அனுஷம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Thai poosam viradham

    முருகப்பெருமானுக்கு உகந்த நாள் தைப்பூச திருநாள்.  தைப்பூச நாளில் வள்ளலார் முக்தியடைந்தார். இறைவன் ஒளிமயமானவர் என்பதை உணர்த்தும் வகையிலேயே தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

    சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர். தைப்பூச தினத்தன்று அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள். இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

    இயற்கையை வழிபடும் பாரம்பரியத்தின் ஒரு வெளிபாட்டை விளக்கும் தினமாகவும் தைப்பூசம் பெருமை பெறுகின்றது. தேவர்களின் குருவாகக் கொள்ளப்படும் பிரகஷ்பதி (குரு பகவான்) பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகின்றார்.

    இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகின்றார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராஜப்பெருமான் சிவதாண்டவமாடிக் காணுப்படி செய்த நாளாகவும் தைப்பூசம் விளங்குகின்றது.

    அத்துடன் வாயுபகவானும், வர்ணபகவானும், அக்னி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகின்றது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளமையை உணர்த்தப்பட்ட புண்ணிய நாள்தான் இந்த தைப்பூச நன்னாளாகும்.*

    ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாக சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

    'தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்" என்பது பழமொழியாக அமைவதால்; ஏடு தொடக்கம், புதிர் எடுத்தல், புதி துண்ணல், பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல், திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற்கொள்கின்றனர்.

    தைப்பூச விரத முறை :

    தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு, ருத்ராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். பின்பு தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். தைப்பூசத்தன்று உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச விரதத்தை கடைபிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்.

    சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.

  • January 23 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – போட்டி
    ரிஷபம்         –  பொறுமை
    மிதுனம்     –   நலம்
    கடகம்         –  லாபம்  
    சிம்மம்         –   இரக்கம்   
    கன்னி         –    சிந்தனை
    துலாம்         –     மறதி
    விருச்சிகம்     –  சோதனை  
    தனுசு         –     நட்பு
    மகரம்         –    வெற்றி
    கும்பம்         –      அசதி  
    மீனம்         –      புகழ்
    சந்திராஷ்டமம்    –      விசாகம்