Author: சக்தி ஆன்லைன் டீம்

  • kadan-thollai-theerkum-koil

    கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில்அமைந்துள்ளது ” திருச்சேறை உடையார் கோவில் “. இங்கு தனி சந்நதியில் ” ருணவிமோச்சனராய் ” அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன்.

    திருச்சேறை உடையார் கோவிலில் தொடர்ந்து 11திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்று “கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே ” என மனம் உருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

    ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள ” ரிண விமோஷன லிங்கேஸ்வரர் “.

    கும்பகோணம் – திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழி படுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.

    இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது சிறப்பு.

  • thiripranteeswaras-koil-ipasi-thiruvizha-kodiyettram

    பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீசுவரர் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி இருக்கிறது.

    இதையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி மலர் அலங்காரத்தில் வீதியுலா வந்தார்.

    தொடர்ந்து, இன்று காலை கமல வாகனத்தில் சுவாமி – அம்மன் வீதி உலா நடைபெற்றது. 26இல் சிம்ம வாகனத்திலும், 27இல் ரிஷப வாகனத்திலும், 28இல் இந்திர வாகனத்திலும், 29இல் யானை வாகனத்திலும், 30இல் காமதேனு வாகனத்திலும், 31இல் கிளி வாகனத்திலும், நவ. 1ஆம் தேதி பூம்பல்லக்கிலும் சுவாமி-அம்மன் வீதியுலா வருவர்.

    திருவிழாவின் சிகர நிகழ்வாக நவ. 3ஆம் தேதி திருகல்யாணம் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பாளையங்கோட்டை திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளையினர் செய்துவருகின்றனர்.

  • indru-ungal-rasikku-enna-palan

    அக்டோபர் 25
    விளம்பி வருடம் – ஐப்பசி 8
    25-அக்-2018 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : பிரதமை
    திதி நேரம் : பிரதமை இ 10.34
    நட்சத்திரம் : அசுவினி கா 11.29
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : சித்திரை
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – கவலை
    ரிஷபம் – வரவு
    மிதுனம் – தாமதம்
    கடனம் – பிரீதி
    சிம்மம் – ஆதரவு
    கன்னி – பாசம்
    துலாம் – வெற்றி
    விருச்சிகம் – கவனம்
    தனுசு – இன்பம்
    மகரம் – உயர்வு
    கும்பம் – ஊக்கம்
    மீனம் – பிரயாணம்

  • matravar-etriya-vilakkai-naam-etralama

    பிறர் ஏற்றிய தீபம் என்பதால் அதற்கு ஏதாவது தோஷம் ஏற்படாது. அதுபோல, நாம் தீபம் ஏற்றினால் நமக்கு கிடைக்கவேண்டிய பலன் பிறருக்கும் போய்விடாது.

    சிவன் கோயில் சந்நிதியில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. ஒரு எலி அந்த விளக்கில் இருந்த நெய்யைக் குடிக்க வாயை வைத்தது.

    எதிர்பாராமல் எலியின் வாய்பட்டு அணைய இருந்த திரியில் சுடர், தூண்டப்பட்டு பிரகாசமாக எரிந்தது.

    இந்நிகழ்ச்சி பெரிய புண்ணியச் செயலாக அமைந்து, மறுபிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது. சுவாமி சந்நிதியில் விளக்கேற்றுவது தான் முக்கியமே தவிர மற்ற சந்தேகம் எதுவும் வேண்டாம்.

  • ippasi-pournami-sivalayangalil-annabishegam

    அபிஷேகப் பிரியரான சிவபெருமான், அபிஷேக நேரங்களில் பல்வேறு திரவியங்களால் திருமுழுக்காட்டு செய்விக்கப் பெறுகிறார். பின்னரும் லிங்கத் திருமேனியின் மேலே தாரா பாத்திரம் எனப்படும் செம்புப் பாத்திரத்தில் நீர் நிறைத்து, சொட்டு சொட்டாக லிங்கத் திருமேனியின்மீது அபிஷேகிக்கப்படும் தாரை அமைப்பை பல ஆலயங்களிலும் குறிப்பாக வடமாநிலங்களில் நாம் காணமுடியும்.

    இந்த அபிஷேக வரிசையில், ஐப்பசி பௌர்ணமி நாளான இன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்பட்டது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்த அன்னத்தைக் கொண்டு முழுக்காட்டப்பட்டது. இனிப்பு, காய்கறி மற்றும் பழங்களுடன் செய்யப்படும் சுத்த அன்னாபிஷேகக் காட்சி, ஆலயத்துக்கு வழிபட வரும் பக்தர்களை பரவசத்துக்கு உள்ளாக்கியது. சிவாலயங்களில் கருவறையிலுள்ள சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பின்னர், சமைத்த சுத்த அன்னத்தைக் கொண்டு திருமுழுக்காட்டப்பட்டது.

    லிங்கத் திருமேனி மறையுமளவுக்கு அன்னம் குவிக்கப்பட்டு, இனிப்புகள், பழங்கள் நிவேதனதுக்கு வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தில் நடைபெறும் அன்னாபிஷேகப் பெருவிழா தமிழகத்தில் நடைபெறும் ஒரு முக்கிய திருவிழா ஆகும்.

    சுமார் பதின்மூன்றரை அடி உயரமும் அறுபது அடி சுற்றளவும் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனிக்கு, 108 மூட்டை அரிசி அன்னமாக சமைக்கப்பட்டு அன்னா பிஷேகம் நடைபெற்றது. பின்னர் இறைவனுக்குப் படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது. கங்கை கொண்ட சோழபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கூடி அன்னாபிஷேகத்தை தரிசித்து மகிழ்ந்தனர்.

    இந்த அன்னாபிஷேக நாளன்று இறைவனைத் தரிசித்து பிரசாதத்தை உட்கொள்வதை பெரும் பேறாக பக்தர்கள் கருதுவதுடன், வரும்காலங்களில் வாழ்வில் பஞ்சமே இராது என்றும் நம்புகின்றனர். அத்துடன் அபிஷேக அன்னத்தை எறும்பு, கால்நடை, பறவை உள்ளிட்ட எல்லா உயிர்களுக்கும் அளிப்பர்.

  • koyilil-udaikum-thengai-azhugi-irundhal

    நமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும்.

    அப்படி இருக்கும் போது, நமது வீட்டில் அல்லது கோவில் பூஜைக்கு பயன்படுத்தும் தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம் உங்களுக்கு தெரியுமா?

    தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?

    தேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் முதல் கண் பிரம்மன், இரண்டாம் கண் லஷ்மி, மூன்றாம் கண் சிவன் என்று போற்றப் படுகிறது.

    அப்படி இருக்கும் தேங்காயை நாம் பயன்படுத்தும் போது, அது அழுகி இருப்பது, கோணலாக உடைவது, சிதறு தேங்காய் உடைக்கும் போது சுக்கு நூறாக உடைவது, தேங்காயில் பூ வருவது இது போன்ற அனைத்து விஷயத்திற்கும் நன்மை மற்றும் தீமைக்கான சகுனங்கள் உண்டு.

    அந்த வகையில் தேங்காய் உடைக்கும் போது, அது அழுகிய நிலையில் இருந்தால், அவர்களுக்கு அது ஏமாற்றம் மற்றும் கலக்கத்தை கொடுத்து, மனதில் குழப்பத்தை அளிப்பதால், இதை நாம் அபசகுனமாக நினைக்கிறோம் அல்லவா?

    ஆனால், உண்மையில் நாம் உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால், அது நல்ல அறிகுறி என்றும். அவர்களை அண்டி இருக்கும் தீய சக்திகள், பீடை, கண்திருஷ்டி போன்றவை அகன்று போகிறது, எனவே இது ஒரு நல்ல அறிகுறி தான் என்று கூறப்படுகிறது.

    தேங்காய் கொப்பரையாக இருந்தால் என்ன அர்த்தம்?

    நாம் உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால், அவர்களின் வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்று அர்த்தமாகும்.

    தேங்காயில் பூ இருந்தால் என்ன அர்த்தம்?

    நாம் உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால், அது நமக்கு பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விஷயங்கள் போன்றவை நடக்கும் என்பதை குறிக்கும் ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது.

  • thirumanam-kaikooda-eliya-parigaram

    பல்வேறு காரணங்களால் திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    நல்லெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய் ஆகியவற்றை சமஅளவு கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் இந்த கூட்டு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

    இந்த தீபத்துக்கு புதிய சிவப்பு நிறத்துணியை திரியாக பயன்படுத்த வேண்டும். தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுதல் வேண்டும். அதன்பிறகு 108 அங்காளம்மன் போற்றி சொல்ல லேண்டும்.

    அது முடிந்ததும் அங்காளபரமேசுவரிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இப்படி செய்தால் விரைவில் திருமணம் கைக்கூடும்.

  • indru-yogam-perum-rasigal

    அக்டோபர் 24
    விளம்பி வருடம் – ஐப்பசி 7
    பவுர்ணமி பவுர்ணமி
    சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்
    24-அக்-2018 புதன்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் : பவுர்ணமி இ 11.01
    நட்சத்திரம் : ரேவதி கா 10.27
    யோகம் : மரண யோகம்
    சந்திராஷ்டமம் : அஸ்தம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்

    மேஷம் – உயர்வு
    ரிஷபம் – வெற்றி
    மிதுனம் – சுபம்
    கடனம் – செலவு
    சிம்மம் – பிரீதி
    கன்னி – போட்டி
    துலாம் – மேன்மை
    விருச்சிகம் – ஆதரவு
    தனுசு – பயம்
    மகரம் – நலம்
    கும்பம் – அன்பு
    மீனம் – கவலை

  • thangathai-prasadamaga-vazhangum-koil

    கோயிலில் தரிசனம் முடிந்த பின் பிரசாதமாக பொங்கல், புளியோதரை, பூ, பழம், விபூதி, குங்குமம் போன்றவற்றை பிரசாதமாக வழங்குவதை பார்த்து இருப்போம். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில், பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளியை பிரசாதமாக வழங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனர்.

    என்ன ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா…!

    ஆம், மத்தியப் பிரதேச மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது ரத்லம் என்று அழைக்கப்படும் ரத்னபுரி நகரம். இங்குள்ள மகாலட்சுமி கோயிலில்தான் தங்கத்தை பிரசாதமாக வழங்குகின்றனர்.

    ஏழை எளியவர்களின் வறுமையைப் போக்கும் எண்ணத்தில் அமைக்கப்பட்ட இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக பணம் செலுத்துவது இல்லை. வேண்டுதல் நிறைவேறி நேர்த்திக் கடன் செலுத்தும் அனைவரும், தங்களால் இயன்ற அளவுக்கு தங்கம் அல்லது வெள்ளியை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    இப்படி, ஆண்டு முழுவதும் பக்தர்கள் செலுத்தும் தங்கம் மற்றும் வெள்ளி மலை போல் குவித்து வைக்கப்பட்டிருக்கும். பொதுவாக, அனைத்து கோயில்களிலும் சேரும் பணம், தங்கம், வெள்ளி போன்றவற்றை திருப்பணிக்காக பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இந்தக் கோயிலில் காணிக்கையாக கிடைத்த தங்கம் மற்றும் வெள்ளியை, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.

    இந்த நிகழ்ச்சி, ஆண்டுதோறும் தீபாவளித் திருநாள் அன்று நடக்கிறது. அன்றைய தினம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பிரசாதமாக வழங்கப்படுகிறது. ‘‘இதை, இறைவனால் தரப்படும் பிரசாதமாக பக்தர்கள் பார்க்கின்றனர். எனவே, இந்தக் கோயிலில் வழங்கப்படும் தங்கத்தை பக்தர்கள் யாரும் விற்பனை செய்வது கிடையாது’’ என்கின்றனர் கோயில் நிர்வாகிகள்.

  • sangadangal-theerkum-sapdha-kanniyar

    தங்கள் குலதெய்வம் எது என்று தெரியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த சப்த கன்னியரை வழிபட்டு பலன் பெறலாம்.

    அன்னை ஆதிபராசக்தியின் அம்சத்தில் இருந்து உருவானவர்கள் ‘சப்தகன்னியர்’. சண்ட, முண்டர்கள் என்னும் இரண்டு அசுரர்களை அழிப்பதற்காக, கர்ப்பத்திலோ, ஆண்-பெண் இணைவிலோ பிறக்காமல், அம்பாளின் சக்திகளாக அவதரித்தவர்களே ‘பிராம்ஹி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னியர்கள்.

    இவர்களே ‘சப்த கன்னிகள்’, ‘சப்த மாதர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். பலர் தங்கள் குலதெய்வம் எது என்று தெரியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த சப்த கன்னியரை வழிபட்டு பலன் பெறலாம்.