Author: லிங்கேஷ்

  • Gudiyatham sirasu thiruvizha

    குடியாத்தம் நகரில் கோலாகலமாக நடைபெற்ற கெங்கை அம்மன் சிரசு திருவிழா. குடியாத்தம் நகரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்.

    இந்த ஆண்டு சிரசு ஊர்வலம் அதிகாலையில் முன்கூட்டியே நடைபெற்றதால் பக்தர்கள் ஏமாற்றம். வழக்கமாக காலை 6:00 மணிக்கு தரணம் வேட்டை முத்தாலம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு 10 மணியளவில் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலுக்கு சிரசு வந்தடையும். ஆனால் இந்த முறை அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு எட்டு முப்பது மணிக்கு எல்லாம் கோவிலுக்குள் சென்றதால் வெளி மாநிலம் மற்றும் வெளியூரில் இருந்து சரசு விழாவை காண வந்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஆண்டு தோறும் வைகாசி 1- ம் தேதி நடைபெறும் புகழ்பெற்ற வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சியாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. நகர் முழுவதும் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் முக்கிய அம்சமான  தரணம்பேட்டை பகுதியில் உள்ள முத்தியாலம்மன் ஆலயத்தில் இருந்து அமம்ன் சிரசு நகரின் வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் ஆலத்தில் உள்ள அம்மன் உடலில் பொறுதப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அம்மன் கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    அமம்ன் சிரசு ஊர்வலத்தில் போது பக்தர்கள் சாலை நெடுங்கிலும் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். சிரசு திருவிழாவை காண தமிழகம், ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் குடியாத்தம் நகரமே விழாக்கோலமாக மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.

     

  • Sattai nathar koil koo poojai

    சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு  சிறப்பு கோ பூஜை வழிபாடு.

     மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.  இந்நிலையில்  வைகாசி  மாத பிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை வழிபாடு நடந்தது. முன்னதாக கொடிமரத்து விநாயகர், பலிபீடம், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து கோ சாலையிலிருந்து  வரவழைக்கப்பட்ட புங்கனூர் குட்டை பசு மாட்டிற்கு சிறப்பு வழிபாடு செய்து தீபாராதனை காட்டி கோ பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பசுமாட்டிற்கு வாழைபழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வணங்கி வழிபட்டனர்.

  • May 14 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – நன்மை
    ரிஷபம்         – பக்தி  
    மிதுனம்     – ஓய்வு
    கடகம்         –  பரிசு
    சிம்மம்         –   வெற்றி
    கன்னி         –    சிரமம்
    துலாம்         –     இன்பம்
    விருச்சிகம்     –  நிறைவு
    தனுசு         –     ஆர்வம்
    மகரம்         –    பேராசை
    கும்பம்         –      நஷ்டம்
    மீனம்         –      மகிழ்ச்சி
    சந்திராஷ்டமம்    –        அனுஷம், கேட்டை

  • May 14 2024 Indrayanaal

    மே 14 – இன்றைய நல்லநேரம்….
    குரோதி வருடம் – வைகாசி – 01
    மே 14, 2024
    செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    எமகண்டம் : 9.00 – 10.30
    குளிகை : 2.00 – 1.30
    ராகு : 3.00 – 4.30
    திதி : சூன்ய
    திதி நேரம் :  சஷ்டி கா 6.21
    நட்சத்திரம் :  பூரம் மா 4.15
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : அனுஷம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • Vaigasi visagam kodiyetram

    கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

    கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வர சுவாமி திருக்கோயில் அன்னை பராசக்தி தவம் செய்ததும், சோழ மன்னர்களின் காவல் தெய்வமான துர்கை வடக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு எட்டு கரங்களுடன் விஷ்ணு துர்க்கையாகவும், லட்சுமி துர்க்கையாகவும் அருள்பாலிக்கிறார் காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து முக்தி பெற்ற தலமும், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப்பெற்றதும், திருஞானசம்மந்தருக்கு முத்து பந்தல் அமைத்து அதன் கீழ் நடந்து வரும் அழகை காண ஈசன் நந்தியை விலக கட்டளையிட்ட தலமும் ஆகும்.

     இத்தகைய சிறப்புபெற்ற தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டுக்கான விழா, இன்று காலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம்பெருமான் பொறிக்கப்பட்ட திருக்கோடி மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, ஏற்றிப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பாம்பு வாகனம், அன்னப்பறவை வாகனம், பச்சைக்கிளி வாகனம், காமதேனு வாகனம்,  உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 17 ஆம் தேதி 5 ஆம் நாள் தன்னைத்தான் வழிபடுதல் காளை வாகனத்தில் இறைவர் இறைவி ஓலைச்சப்பரத்தில் வீதியுலா 7 ஆம் நாளான 19 ஆம் தேதி திருக்கல்யாணம் 9 ஆம் நாளான 21 ஆம் தேதி கட்டுத் தேரோட்டம் வருகிற 24 ஆம் தேதி விடையாற்றியுடன் இவ்வாண்டுக்கான வைகாசி விசாக பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

  • May 13 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – அமைதி
    ரிஷபம்         – இன்பம்
    மிதுனம்     – புகழ்
    கடகம்         –  வெற்றி
    சிம்மம்         –   அனுகூலம்   
    கன்னி         –    உதவி
    துலாம்         –     போட்டி
    விருச்சிகம்     –  செலவு
    தனுசு         –     ஆசை
    மகரம்         –    உயர்வு  
    கும்பம்         –      நன்மை
    மீனம்         –      சுபம்
    சந்திராஷ்டமம்    –        விசாகம், அனுஷம்

  • May 13 2024 Subamuhurthanaal

    மே 13 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள் ….
    குரோதி வருடம் – சித்திரை – 30
    மே 13, 2024
    திங்கள்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 6.00 – 7.30)
    சஷ்டி விரதம்
    நல்ல நேரம் : 6.30 – 7.30
    எமகண்டம் : 10.30 – 12.00
    குளிகை : 1.30 – 4.00
    ராகு : 7.30 – 9.00
    திதி : சஷ்டி
    திதி நேரம் :  பஞ்சமி அ.கா 5.28
    நட்சத்திரம் :  புனர்பூசம் ம 2.44
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் : விசாகம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • May 12 2024 Adi shankarar Jayanthi

    மே 12 – ஆதிசங்கரர் ஜெயந்தி….
    குரோதி வருடம் – சித்திரை – 29
    மே 12, 2024
    ஞாயிறு
    ஆதிசங்கரர் ஜெயந்தி
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    குளிகை : 3.00 – 4.30
    ராகு : 4.30 – 6.00
    திதி : பஞ்சமி
    திதி நேரம் :  சதுர்த்தி அ.கா 5.17
    நட்சத்திரம் :  திருவாதிரை ம 1.40
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : சுவாதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

     

  • May 12 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – மகிழ்ச்சி
    ரிஷபம்         – ஆசை
    மிதுனம்     – பொறுமை
    கடகம்         –  அச்சம்  
    சிம்மம்         –   வெற்றி  
    கன்னி         –    இரக்கம்
    துலாம்         –     சுகம்
    விருச்சிகம்     –  நற்செயல்
    தனுசு         –     போட்டி
    மகரம்         –    பெருமை
    கும்பம்         –      அமைதி  
    மீனம்         –      நன்மை
    சந்திராஷ்டமம்    –        சுவாதி, விசாகம்

  • Mari amman Koil Therottam

    புதுச்சேரி அரியாங்குப்பம் அருள்மிகு செடிலாடி செங்கழுநீர் மாரியம்மன் ஆலயத்தின் முதலாம் ஆண்டு தேரோட்டம். புதிதாக செய்த தேரை கோவிலுக்கு அர்ப்பணித்த முதல்வர் ரங்கசாமி தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி அரியாங்குப்பம் அருள்மிகு செடிலாடி செங்கழுநீர் மாரியம்மன் ஆலயத்தின் 110 ஆம் ஆண்டு மகோற்ச்சவ விழா கடந்த வாரம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் செய்யப்பட்டு சிம்ம வாகனம் யானை வாகனம் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    தொடர்ந்து திரு தேரோட்டம் இன்று நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி புதியதாக செய்யப்பட்ட திருத்தேரை கோவிலுக்கு அர்ப்பணித்து முதலாம் ஆண்டு தேரோட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்கள்.

    கோவில் பிரகாரத்தில் இருந்து புறப்பட்ட திரு தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்து அடைந்தது. இந்த தேரோட்டத்தில் அரியாங்குப்பம் மட்டுமின்றி சுற்றுப்புறத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அம்மன் அருளை பெற்று சென்றனர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.