அக்டோபர் 05 – இன்றைய நல்லநேரம்
குரோதி வருடம் – புரட்டாசி 19
அக்டோபர் 05 – 2024
சனி
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 1.30 – 3.00
குளிகை : கா 6.00 – 7.30
ராகு : கா 9.00 – 10.30
திதி : திரிதியை
திதி நேரம் : துவிதியை அ.கா 2.33
நட்சத்திரம் : சுவாதி இ 9.06
யோகம் : அமிர்த-சித்த
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Author: லிங்கேஷ்
-
October 05 2024 Indrayanaal
-
Periya shesha vaganathil ezhumalayan
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமியின் பெரிய சேஷ வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.
பெரிய சேஷ வாகன புறப்பாட்டை முன்னிட்டு கோவிலில் இருந்து உபய நாச்சியார்கள் சமேதராக புறப்பட்ட மலையப்ப சுவாமி வாகனமண்டபத்தை அடைந்தார். அங்கு பெரியசேஷ வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர்களுக்கு சமர்ப்பணம் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் பெரியசேஷ வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது. அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய சேஷ வாகன புறப்பாட்டை கண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
-
Thirupathy pattu vasthiram
ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்த முதல்வர் சந்திரபாபு நாயுடு. திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்த நிலையில் வழக்கத்தின் அடிப்படையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்தார். அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க மனைவி புவனேஸ்வரியுடன் கோவில் எதிரில் இருக்கும் பேடி ஆஞ்சநேய சுவாமி கோவில் வந்த முதல்வருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அவருக்கு தேவஸ்தான அர்ச்சகர்கள் பரிவட்டம் கட்டி பட்டு வஸ்திரங்களை வெள்ளி தட்டில் வைத்து முதல்வர் தலை மேல் ஏற்றி வைத்தனர். அங்கிருந்து பட்டு வஸ்திரங்களுடன் கூடிய வெள்ளி தட்டை சுமந்து நடந்து சென்ற சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தார்.
தொடர்ந்து ஏழுமலையானை வழிபட்ட சந்திரபாபு நாயுடுவிற்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கிய நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
-
October 04 2024 Chandra Dharisanam
அக்டோபர் 04 – சந்திர தரிசன நாள்
குரோதி வருடம் – புரட்டாசி 18
அக்டோபர் 04 – 2024
வெள்ளி
சந்திர தரிசனம்
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : ம 3.00 – 4.30
குளிகை : கா 7.30 -9.00
ராகு : கா 10.30 – 12.00
திதி : துவிதியை
திதி நேரம் : பிரதமை அ.கா 2.38
நட்சத்திரம் : சித்திரை மா 6.48
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : பூரட்டாதி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
October 04 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – தனம்
ரிஷபம் – நட்பு
மிதுனம் – சுபம்
கடகம் – பயம்
சிம்மம் – பரிசு
கன்னி – வெற்றி
துலாம் – ஏமாற்றம்
விருச்சிகம் – ஓய்வு
தனுசு – நலம்
மகரம் – அமைதி
கும்பம் – சலனம்
மீனம் – ஆக்கம்
சந்திராஷ்டமம் – சதயம், பூரட்டாதி -
Palani navarathri starts
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா காப்புக்கட்டுடன் துவங்கியது. ஒன்பது நாள் திருவிழாவை முன்னிட்டு வரும் அக்.11 ம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்.12 ம் தேதி விஜயதசமி அம்புபோடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி மலைக்கோயிலில் உச்சிக்காலத்தின்போது மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் மூலஸ்தானத்தில் உள்ள வினாயகர், மூலவர், உற்சவர், வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகர் ஆகியோருக்கும், பாரவேல் மண்டபத்தில் உள்ள துவாரபாலகர், கொடிக்கம்பம், மயில்வாகனத்துக்கும் காப்புக் கட்டப்பட்டது. நவவீரர்கள், பரிவார மூர்த்திகளுக்கும் காப்புக் கட்டப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அக்.11 ம் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையும், அக். 12 ம் தேதி விஜயதசமி அம்புவில் போடுதலும் நடைபெறுகிறது.
விழா நாட்களில் பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, அலங்காரமும், ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. காப்புக்கட்டு விழாவில் பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
-
siva peruman vazhipatta soorya bagavan
அனந்தலை கிராமத்தில் அகத்திய முனிவர் வழிபட்ட சுயம்பு சிவ பெருமானை சூரிய ஒளியால் வழிபட்ட சூரிய பகவான்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ உமா மகேஸ்வரி உடனுறை சுயம்பு நாதேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த திருத்தலம் அகத்திய முனிவரால் வழிபட்ட சிறப்புக்குரிய திருத்தலமாகும்.
இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் சிவனின் திருமேனியின் மீது சூரிய ஒளி கதிர்கள் சிவனை வழிபடும் அரிய நிகழ்வு நடைபெற்று வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டும் புரட்டாசி மாதம் இதேபோல வார காலமாக காலை 6.30 மணி முதல் சூரியன் உதயமாகி 6.45 வரை மூலவர் சிவலிங்கத்தின் திருமேனி மீது படர்ந்து ஜொலித்த காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
இதுபோன்ற சூரிய ஒளி கதிர்கள் வழிபடும் நேரத்தில் பக்தர்களுடைய திருமண தடை குழந்தை பாக்கியம் அனைத்து விதமான வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதனால் அனந்தலை கிராமத்தை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் இந்த தகவலை அறிந்ததும் கோவிலுக்கு வருகை தந்து காத்திருந்து சூரிய ஒளி கதிர்கள் சிவனை வழிபட்ட நிகழ்வை கண்டு மெய்சிலிர்த்து சுவாமியை வழிபட்டனர் மேலும் சூரியக் கதிர்கள் வழிபடும் நிகழ்வை முன்னிட்டு கருவறையில் இருக்கும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் மங்கல தீபராதனைகள் நடைபெற்றது..
-
October 02 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – தாமதம்
ரிஷபம் – லாபம்
மிதுனம் – ஆதரவு
கடகம் – சிந்தனை
சிம்மம் – தனம்
கன்னி – வெற்றி
துலாம் – நன்மை
விருச்சிகம் – பொறுமை
தனுசு – நஷ்டம்
மகரம் – பயம்
கும்பம் – பக்தி
மீனம் – இன்பம்
சந்திராஷ்டமம் – திருவோணம், அவிட்டம் -
October 02 2024 mahalaya amavasai
அக்டோபர் 02 – மகாளய அமாவாசை
குரோதி வருடம் – புரட்டாசி 16
அக்டோபர் 02 – 2024
புதன்
காந்தி ஜெயந்தி
மகாளய அமாவாசை
நவராத்திரி கொலு வைக்க காலை 10.00 – 10.30 மணி
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : கா 7.30 – 9.00
குளிகை : கா 10.30 – 12.00
ராகு : ம 12.00 – 1.30
திதி : அமாவாசை
திதி நேரம் : அமாவாசை முழுவதும் 0.00
நட்சத்திரம் : உத்திரம் ம 1.44
யோகம் : அமிர்த-மரண
சந்திராஷ்டமம் : அவிட்டம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
Vellore pradhosham
வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத சோமவார பிரதோஷம் நந்திபகவானுக்கு பால்,தயிர் ,தேன்,சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரங்களை மகாதீபாராதனைகள் பக்தர்கள் சுவாமிதரிசணம் செய்தனர்.
வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி சமேத ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று புரட்டாசி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால்,தயிர்,தேன்,சந்தனம்,விபூதி,கரும்புசாறு ,பன்னீர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்து அருகம்புல்,வில்வ இலைகள் ,தாமரை மலர்கள்,மலர்மாலைகளால் சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகள் நடந்தது.
பின்னர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரி அகிலாண்டீஸ்வரி அம்மன் சுவாமி உட்பிரகார உலாவும் வந்தது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர்.