Author: cmsadmin

  • ஜூன் 24 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – ஜெயம்
    ரிஷபம்         – நலம்
    மிதுனம்     – பயம்
    கடகம்         –  பரிவு
    சிம்மம்         –   ஆசை
    கன்னி         –    வாழ்வு
    துலாம்         –     பரிசு
    விருச்சிகம்     –  செலவு  
    தனுசு         –     தனம்
    மகரம்         –    ஆர்வம்   
    கும்பம்         –      தெளிவு   
    மீனம்         –      உறுதி
    சந்திராஷ்டமம்    –         ரோகிணி, மிருகசீருஷம்

  • ஜூன் 24 – திருவோண விரதம்

    ஜூன் 24 – திருவோண விரதம்
    குரோதி வருடம் – ஆனி 10
    ஜூன் 24 – 2024
    திங்கள்
    நல்ல நேரம் : 6.30 – 7.30
    எமகண்டம் : 10.30 – 12.00
    குளிகை : 1.30 – 4.00
    ராகு : 7.30 – 9.00
    திதி : திரிதியை
    திதி நேரம் :  துவிதியை அ.கா 5.46
    நட்சத்திரம் :  உத்திராடம் மா 5.56
    யோகம் : மரண-அமிர்த
    சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் தெப்பல் உற்சவம்…

    18 நாள் மகாபாரத போர் முடிந்து 19-ம் நாளில் திரௌபதியின் மடியில் கிருஷ்ணன் அமர கண்கொள்ளா காட்சியுடன் நடைபெற்ற தெப்பல் உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    புதுச்சேரி அடுத்த காட்டேரி குப்பம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் தேவஸ்தானம் அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயம், முத்து மாரியம்மன் ஆலயம், அய்யனாரப்பன் ஆலயங்களுக்கு பிரம்மோற்சவம் விழா கடந்த மாதம் 9 ஆம் தேதி வெகு விமர்சையாக துவங்கியது.

    தொடர்ந்து 11-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவானது தொடர்ந்து காலை மாலை என தினம் தோறும் உற்சவம், விநாயகர் வீதி உலா, சாகை வார்த்தல், கும்பம் கொட்டுதல், அம்மன் வீதி உலா, என தினந்தோறும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதில் மகாபாரதத்தில் 18 நாள் போர் முடிந்து 19 நாளில் திரௌபதியின் மடியில் கிருஷ்ணன் அமர கண்கொள்ள காட்சியுடன் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

     நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.

  • பழனி கிரிவலப் பாதையில் வள்ளி கும்மி நடனம்…

    பழனி கிரிவலப் பாதையில் 200  க்கும் மேற்பட்ட பெண்கள் வள்ளி கும்மி நடனம் ஆடி வழிபாடு செய்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

    ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விசேஷ நாட்களில் லட்சக்கன க்கான பக்தர்கள் சாமி  செய்ய வருவார்கள். அந்த வகையில்  இன்று கோவையை  சூலூர் கள்ளப்பாளையம் சேர்ந்த வைரவேல் வள்ளிகும்மி  குழுவினர் பழனியில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். பழனி அடிவாரம் கிரிவலப்பாதையில் வலம் வந்த  கோவை சூலூர் கள்ளப்பாளையம் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் ஒரே மாதிரியான சேலை கட்டி வள்ளிக்கும்மி நடனமாடிய படியே கிரிவலம் சென்றனர். அப்போது முருகன் பக்தி பாடல்கள் பாடியபடியே நடனமாடியது பக்தர்கள் அனைவரையும் கவர்ந்தது.

  • ஜூன் 23 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – இன்பம்
    ரிஷபம்         – ஜெயம்
    மிதுனம்     – வரவு
    கடகம்         –  உயர்வு   
    சிம்மம்         –   வெற்றி  
    கன்னி         –    துன்பம்
    துலாம்         –     பகை
    விருச்சிகம்     –  தாமதம்
    தனுசு         –     ஆதாயம்
    மகரம்         –    ஆதரவு  
    கும்பம்         –      முயற்சி  
    மீனம்         –      சுகம்
    சந்திராஷ்டமம்    –         கார்த்திகை, ரோகிணி

  • ஜூன் 23 – இன்றைய நல்லநேரம்

    ஜூன் 23 – இன்றைய நல்லநேரம்
    குரோதி வருடம் – ஆனி 09
    ஜூன் 23 – 2024
    ஞாயிறு
    காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    குளிகை : 3.00 – 4.30
    ராகு : 4.30 – 6.00
    திதி : துவிதியை
    திதி நேரம் :  பிரதமை கா 6.19
    நட்சத்திரம் :  பூராடம் மா 6.42
    யோகம் : சித்த-அமிர்த
    சந்திராஷ்டமம் : ரோகிணி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • ஜூன் 22 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – களிப்பு
    ரிஷபம்         – கீர்த்தி
    மிதுனம்     – ஜெயம்
    கடகம்         –  பரிவு  
    சிம்மம்         –   பாசம்   
    கன்னி         –    பகை
    துலாம்         –     பரிசு
    விருச்சிகம்     –  பாராட்டு
    தனுசு         –     குழப்பம்  
    மகரம்         –    மேன்மை
    கும்பம்         –      நிம்மதி
    மீனம்         –      நஷ்டம்
    சந்திராஷ்டமம்    –         பரணி, கார்த்திகை

  • ஜூன் 22 – காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா

    ஜூன் 22 – காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா
    குரோதி வருடம் – ஆனி 08
    ஜூன் 22 – 2024
    சனி
    காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    குளிகை : 6.00 – 7.30
    ராகு : 9.00 – 10.30
    திதி : பிரதமை
    திதி நேரம் :  பவுர்ணமி கா 7.19
    நட்சத்திரம் :  மூலம் இ 7.03
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : கார்த்திகை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • சொர்ணவாரீஸ்வரர் சாந்தநாயகி அம்மன் கோயில் ஆனி தேரோட்டம்…

    சிவகங்கை மாவட்டம் மேலநெட்டூர் சொர்ணவாரீஸ்வரர் சாந்த நாயகி அம்மன் கோயில் ஆனி தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடந்தது. சிவபெருமானின் கோபத்தை தணிக்க ஒரு கோடி சஷ்டி விரதம் இருந்து வலம் வந்த போது எதிரே வந்த சிவனின் கோபம் தணிந்ததால் இங்கு சொர்ணவாரீஸ்வரர்/சாந்த நாயகி அம்மன் என பெயர் பெற்ற ஸ்தலம் இது.

    இங்கு ஆனி மாதம் பத்து நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும், இந்தாண்டு திருவிழா கடந்த  13ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி அம்மனும் சுவாமியும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தனர். பத்தாம் நாளான இன்று தேரோட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    மாலை நான்கு மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் சொர்ணவாரீஸ்வரரும் சாந்தநாயகி அம்மனும் அலங்கார கோலத்தில் குதிரைகள் பூட்டிய தேரில் அமர்ந்தனர். முதலில் விநாயகர் தேர் செல்ல் அதன்பின் சொர்ணவாரீஸ்வரர் தேரை பொதுமக்கள் கூடி இழுத்தனர். நான்கு மாட வீதிகளையும் வலம் வந்த தேர் மாலை ஐந்தரை மணிக்கு நிலையை வந்தடைந்தது.

    பின் தேருக்கு முன்னால் பக்தர்கள் பலரும் சிதறு தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். தேரோட்டத்தை முன்னிட்டு மானாமதுரை டிஎஸ்பி கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

     

  • பழனி மலைக்கோயில் 108 வலம்புரி சங்கு பூஜை

    பழனி மலைக்கோயில் உலக நலன் வேண்டி 108 வலம்புரி சங்கு பூஜை மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் இன்று உலக நலன் மற்றும் விவசாய செழுமை வேண்டி 108 வலம்புரி சங்கு பூஜை மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் தங்கச் சப்பரத்தில் பிரதான கலசம் வைக்கப்பட்டு புனித நீர் நிரப்பப்பட்டு முன்னதாக தாம்பாளத்தில் வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு புனித நீர் நிரப்பப்பட்டு ரோஜா, தாமரை  அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க யாகம் நடைபெற்றது. யாக பூஜை நிறைவாக பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீபாராதனை  நடைபெற்றது. பின்னர் கலசங்கள் கோவிலை சுற்றிவர செய்யப்பட்டு கலச தீர்த்தம் மற்றும் சங்க தீர்த்தம் அருள்மிகு தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பச்சை கற்பூரம், சுத்த அன்னம்,வில்வ இலை கொண்டு  அன்னாபிஷேகமும் நடைபெற்றது.

    முன்னதாக அர்ச்சக ஸ்தானிக சங்கம் சார்பில் சண்முக நதியில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.