Author: cmsadmin

  • ஆண்டாள் சூடி களைந்த மாலைகள் திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்…

    திருப்பதி ஏழுமலையானுக்கு நாளை பிரம்மோற்சவ கருட வாகன புறப்பாடு உள்ள நிலையில்,  இந்து தர்மர்த்த சமிதி திருக்குடைகள்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாயார் மலர்மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கருட வாகன புறப்பாடு நாளை இரவு நடைபெற உள்ளது. முன்னதாக நாளை காலை ஏழுமலையானின் மோகினி அலங்கார புறப்பாடும் நடைபெற உள்ளது.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான நாளை தமிழ்நாட்டில் தொடர்புடைய இந்த இரண்டு புறப்பாடுகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மோகினி அலங்கார புறப்பாட்டில் உற்சவருக்கு அலங்கரிக்க தேவையான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியாருக்கு சூட்டி களையப்பட்ட மலர் மாலைகள், மலர் ஜடை, இலைகளால் செய்யப்பட்ட பச்சைக்கிளி ஆகியவை திருப்பதி மலைக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

     நாளை இரவு திருப்பதி மலையில் நடைபெற இருக்கும் கருட வாகன புறப்பாட்டில் அலங்கரிக்க தேவையான வெண்பட்டு திருக்குடைகளை சென்னையை சேர்ந்த இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை அதன் அறங்காவலர் ஆர்.ஆர் கோபாலஜி தலைமையில் திருப்பதி மலைக்கு கொண்டு வந்திருந்த நிலையில் அவற்றை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

     

  • அக்டோபர் 07 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  நன்மை
    ரிஷபம்         – பக்தி
    மிதுனம்     – வெற்றி
    கடகம்         –  சுகம்  
    சிம்மம்         –   பயம்   
    கன்னி         –    நஷ்டம்  
    துலாம்         –     பாராட்டு  
    விருச்சிகம்     –  குழப்பம்
    தனுசு         –    ஆரோக்கியம்
    மகரம்         –   ஆர்வம்
    கும்பம்         –     விவேகம்
    மீனம்         –    மேன்மை  
    சந்திராஷ்டமம்    –        ரேவதி, அசுபதி

  • அக்டோபர் 07 – இன்றைய நல்லநேரம்…

    அக்டோபர் 07 – இன்றைய நல்லநேரம்…  
    குரோதி வருடம் – புரட்டாசி 21
    அக்டோபர் 07 – 2024
    திங்கள்
    நல்ல நேரம் : கா 6.00 – 7.30
    எமகண்டம் : கா 10.30 – 12.00
    குளிகை : ம 1.30 – 3.00
    ராகு : கா 7.30 – 9.00
    திதி : பஞ்சமி
    திதி நேரம் :  சதுர்த்தி கா 7.22
    நட்சத்திரம் :  அனுஷம் முழுவதும் 0.00
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் :   அசுவினி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி 4 ஆம் நாள் துர்கை அம்மன் அலங்காரம்…

    வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி 4 ஆம் நாள் துர்கை அம்மன் அலங்காரம் செய்து மகாதீபாராதனைகள் நடந்தது  இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர் ஆன்மிக இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று நவராத்திரி விழா  4 ஆம் நாளான இன்று அம்மனுக்கு , துர்கை அம்மன் அலங்காரம் செய்து  குங்கும லட்ச்சார்ச்சணைகளும் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாகங்களும் நடந்தது.

    பின்னர் மகாதீபாராதனைகளும் நடந்தது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர் பின்னர் ஆன்மிக பாரம்பரிய இசைகலைநிகழ்ச்சிகளும் நடந்தது. இதில் மாணவ,மாணவிகள் பங்கேற்று இசைகருவிகளை இசைத்தும் ஆன்மிக பாடல்களையும் பாடினார்கள் இதனை மக்கள் கண்டு ரசித்தனர்.

  • அக்டோபர் 06 – சதுர்த்தி நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  செலவு
    ரிஷபம்         – குழப்பம்
    மிதுனம்     – ஆரோக்கியம்
    கடகம்         –  வெற்றி
    சிம்மம்         –   சுகம்  
    கன்னி         –    நட்பு
    துலாம்         –     அமைதி
    விருச்சிகம்     –  கவனம்
    தனுசு         –    முயற்சி
    மகரம்         –   ஆர்வம்
    கும்பம்         –     பயம்   
    மீனம்         –    அனுகூலம்
    சந்திராஷ்டமம்    –        உத்திரட்டாதி, ரேவதி

  • அக்டோபர் 06 – சதுர்த்தி விரதம்

    அக்டோபர் 06 – சதுர்த்தி விரதம்  
    குரோதி வருடம் – புரட்டாசி 20
    அக்டோபர் 06 – 2024
    ஞாயிறு
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் :  திரிதியை கா 6.04
    நட்சத்திரம் :  விசாகம் இ 11.03
    யோகம் : மரண
    சந்திராஷ்டமம் :   ரேவதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் திருப்பதி ஏழுமலையான்

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில்  சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி.

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று இரவு சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அன்ன பறவை பால், தண்ணீரை வேறு செய்வது போல் பக்தர்களின் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை சுவாமி தனது பக்தர்களுக்கு அருள் புரிவதாக நம்பிக்கை. சுவாமி வீதிஉலாவில் கர்நாடக, ஆந்திரா ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம், பஜனைகள் மற்றும் பல்வேறு வேடம் அணிந்து  பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான நாளை காலை சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும் நானே என்று உணர்த்தும் விதமாக மனிதர்களிடம் உள்ள விலங்களுக்குன்டான தீய எண்ணங்களை போக்கி கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

  • அக்டோபர் 05 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  சுகம்
    ரிஷபம்         – புகழ்
    மிதுனம்     – பாராட்டு
    கடகம்         –  ஆதாயம்
    சிம்மம்         –   தாமதம்
    கன்னி         –    விருப்பம்  
    துலாம்         –     விவேகம்    
    விருச்சிகம்     –  தோல்வி
    தனுசு         –    அலைச்சல்
    மகரம்         –   வெற்றி
    கும்பம்         –     நன்மை  
    மீனம்         –    பக்தி
    சந்திராஷ்டமம்    –        பூரட்டாதி, உத்திரட்டாதி

  • அக்டோபர் 05 – இன்றைய நல்லநேரம்

    அக்டோபர் 05 – இன்றைய நல்லநேரம்
    குரோதி வருடம் – புரட்டாசி 19
    அக்டோபர் 05 – 2024
    சனி
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 1.30 – 3.00
    குளிகை : கா 6.00 – 7.30
    ராகு : கா 9.00 – 10.30
    திதி : திரிதியை
    திதி நேரம் :  துவிதியை அ.கா 2.33
    நட்சத்திரம் :  சுவாதி இ 9.06
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் :   உத்திரட்டாதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • வருடாந்திர பிரம்மோற்சவம்… பெரியசேஷ வாகனத்தில் திருப்பதி ஏழுமலையான்…

    திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமியின் பெரிய சேஷ வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

    பெரிய சேஷ வாகன புறப்பாட்டை முன்னிட்டு கோவிலில் இருந்து உபய நாச்சியார்கள் சமேதராக புறப்பட்ட மலையப்ப சுவாமி வாகனமண்டபத்தை அடைந்தார். அங்கு பெரியசேஷ வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர்களுக்கு சமர்ப்பணம் நடைபெற்றது.

     தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் பெரியசேஷ வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது. அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய சேஷ வாகன புறப்பாட்டை கண்டு வழிபாடு மேற்கொண்டனர்.