கருட வாகனத்தில் திருப்பதி ஏழுமலையான்….

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமியையொட்டி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமியையொட்டி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி ரங்கநாதர் மண்டபத்தில்  எழுந்தருளினார். பின்னர் ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது.  

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று கருட வாகனத்தில் எழுந்தருளி மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.கொரோனா  வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பௌர்ணமி கருட சேவை வீதி உலா ரத்து செய்யப்பட்டு ரங்கநாதர் மண்டபத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். 

கருட வாகனத்தில் திருப்பதி ஏழுமலையான்….

Posted by shakthionline.com on Monday, July 6, 2020

முன்னதாக கோவிலில் மூலவர் கருவறையிலிருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி ரங்கநாதர் மண்டபத்திற்கு எழுந்தருளினார். இந்த உற்சவத்தில் துணை செயல்அலுவலர் ஹரிந்திரநாத்,  சிறப்பு அதிகாரி சேஷாத்திரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.