Benefits and miraculous effects of Karthigai Deepam!

கார்த்திகை தீபம் தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருப்பதன் பலனை தேவி புராணம் விரிவாகக் கூறுகிறது. திருவண்ணாமலைக்கு வந்து தவமிருந்த அம்பிகை, மகிஷாசுரனுடன் போர் புரிந்தபோது, தவறுதலாக ஒரு சிவலிங்கத்தை உடைத்துவிட்டாள். அதனால் அவளுக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நீக்குவதற்காக கார்த்திகை தினத்தில் தீபம் ஏற்றி விரதம் இருந்ததாக கூறப்படுகிறது.

கார்த்திகை சோமவாரம் அனுஷ்டிப்பவர்கள் இறைவனின் அருளால் சகல மேன்மைகளையும் பெறுவர். கார்த்திகை விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் தவறாமல் கடைப்பிடித்த நாரத முனிவர், அதன் பலனாக சப்தரிஷிகளையும் மேம்பட்ட நிலையில் இருப்பதற்கு அருளைப் பெற்றார்.

கார்த்திகை அன்று தீபங்கள் ஏற்றி வைத்து, மூன்று முறஜோதி பரப்பிரம்மம்! தீபம் சர்வ தமோபஹம்! தீபனே சாத்யதே சர்வம்! சந்த்யா தீப நமோஸ்துதே!
என்ற மந்திரத்தைச் சொல்வது மிகுந்த விசேஷபலனை தரும்.

திருக்கார்த்திகை நாளில் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால், தீபம் ஏற்றியதும் வணங்க வேண்டும்.

கார்த்திகை திருநாளில், நெல் பொரியுடன் வெல்லப்பாகு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து பொரி உருண்டை தயாரித்து அண்ணாமலையாருக்கும் தீபங்களுக்கும் நிவேதனம் செய்கிறார்கள்.
வெள்ளை நிறப் பொரி திருநீறு பூசிய சிவனை குறிக்கிறது; தேங்காய் துருவல் கொடைத் தன்மையின் அடையாளமான மாவலியை குறிக்கிறது; வெல்லம் பக்தர்களின் மனப்பக்தியைச் சுட்டிக்காட்டுகிறது.

ஆத்மார்த்தமான பக்தியால் மகிழும் சிவன், நெற்பொரிக்குள்ளும் தோன்றுவார் என்ற தத்துவத்தால், இந்நாளில் பெரிய நெற்பொரி உருண்டைகளும் அப்பமும் நிவேதனம் செய்யப்படுகின்றன.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *