Methods of performing puja at home: Spiritual guidelines

பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு திசைகளை நோக்கி அமரக் கூடாது. தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும்; முடியாவிட்டால், தெற்கு தவிர பிற திசைகளைப் பயன்படுத்தலாம். வணங்குபவர் வடக்கு நோக்கி அமரலாம்.

பூஜை அறையில் தெய்வச் சிலைகளை நெருக்கமாக வைக்காமல், போதிய இடைவெளி விட வேண்டும். நிவேதனம் செய்த தேங்காயை மறுபடியும் சமையலில் பயன்படுத்தி சாமிக்கு நிவேதனம் செய்யக் கூடாது. உணவை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைப்பதற்கு பதிலாக, இலையில் வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

வீட்டில் கோலம் போடாமலும், விளக்கேற்றாமலும் கோவிலுக்கு செல்லக் கூடாது. எரியும் விளக்கின் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொட்டு தலையில் தடவுவது தவறு. விஷ்ணு கோவிலில் இருந்து திரும்பும்போது அங்கு உட்காராமல் நேரடியாக வீடு திரும்ப வேண்டும், ஏனெனில் லட்சுமி தேவி உடன் வருவதாக ஐதீகம்.

வாசலில் ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம், திரிசூலம் சின்னங்களை வைப்பது பாதுகாப்பையும் அதிர்ஷ்டத்தையும் தரும். உலர்ந்த பூக்களை சாமி படங்களில் வைக்கக் கூடாது. வாசலுக்கு நேர் எதிரே சிரிக்கும் புத்தர் சிலையை வைப்பது வளமையையும் வெற்றியையும் அளிக்கும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *