“Krishna sleeping in the cradle”  Devotees singing lullabies!

கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி அருகே கிருஷ்ணன் கோவில் என்ற ஊர் உள்ளது.13 ஆம், நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட' ஆதித்தவர்மன் என்ற அரசன் தன் கனவில் குழந்தை வடிவில் கிருஷ்ணன் பானையில் உள்ள வெண்ணையை திருடி தின்பது போன்று' கனவு  கண்டதின் பலனாக இங்கு'அருள்மிகு ஸ்ரீ பாலகிருஷ்ணன், என்ற திருப்பெயரில் கோவில் கட்டியுள்ளான்.

கருவறையில் குழந்தை வடிவில் நின்ற திருக்கோளத்தில்'  இரு கரங்களிலும், வெண்ணெயை ஏந்தி நிற்கும் பாலகிருஷ்ணனை, இரவு நேர வழிபாட்டின் போது, பக்தர்கள்  வெள்ளித் தொட்டிலில் தாலாட்டுபாடி  தூங்க வைக்கும் வைபவம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, பரந்தாமனுக்கு நெய்வேதனம் செய்யப்பட்ட, வெண்ணெய், பால் ஆகியவை பக்தர்களுக்கு' பிரசாதமாக வழங்கப் படுகிறது. பாலகிருஷ்ணனை, தொடர்ந்து மூன்று அஷ்டமி, அல்லது ரோகிணி நட்சத்திர தினத்தில் வெண்ணெயுடன் வந்து வழிபட்டால்' குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சுயம்பு திருமேனியாக  கிருஷ்ணன் அவதரித்த இடம் என்பதால் இப்பகுதி கிருஷ்ணன் கோவில் ஊர் என அழைக்கப்படுகிறது.

பொன்.கோ.முத்து திருவள்ளூர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *