“Why did Kashi Vishwanath appear to the morgue guard Arichandran?”

உத்திரபிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதர் திருக்கோவிலானது உலகப் பிரசித்தி பெற்றதாகும், இங்கு சிவபெருமான் ஸ்ரீ காசி விஸ்வநாதர் என்ற திருப்பெயரில் எழுந்து அருளியுள்ளார். இந்துக்களின் புனித தளமாக விளங்கும் இவ்விடத்தில் புனித திருத்தமான கங்கை நதி பாய்ந்து ஓடுகிறது. பாவங்களைப் போக்கும் இடமாகவும் முக்தி அளிக்கும் புண்ணிய பூமி ஆகவும் விளங்கும், காசிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு, (பனாரஸ்) என அழைக்கப்படும், வாரணாசி நகரில் இந்துவாக பிறந்த ஒருவர் மாண்டு விட்டால்' சடலத்தை காசியில் கங்கைக் கரையில் அரிச்சந்திர மயானத்தில் எரித்தால்' அவர்களின் ஆன்மா சொர்க்க லோகம் செல்லும், என்பது நம்பிக்கை, இதனால் இறந்த செல்வந்தர்களின் உடலை அவர்களது.

உறவினர்கள் காசிக்கு எடுத்துச் சென்று அரிச்சந்திர மயானத்தில் எரித்து அஸ்தியை கங்கை நதியில் கரைக்கும் வழக்கம் காசி தோன்றிய காலத்தில் இருந்து உள்ளது. உள்ளூரிலேயே மயானம் இருக்கும்போது, காசி நகர மயானத்திற்கு அப்படி என்ன  சிறப்பு ? கங்கைக்கரை மயானத்தை ஒரு காலத்தில் அரிச்சந்திரன் காவல் காத்து வந்தான். அப்போது வாரணாசி நகர் வரும் யோகிகள், அகோரிகள், ஞானியார், சிவா அடியார்களுக்கு அரிச்சந்திரன் தொண்டு புரிந்ததாகவும், அவனது இறைத் தொண்டுக்கு மனமிரங்கிய காசி விஸ்வநாதர். நேரடியாக அரிச்சந்திரனுக்கு காட்சியளித்து என் மேல் உள்ள பக்தியின் காரணமாக அடியார்களுக்கு நீர் புரிந்த தொண்டின் பலனாக இனிவரும் காலங்களில் மயான காவல் தெய்வமாக வணங்கப்படுவாய் என அருள் வழங்கியதாகவும், அதன் பலனாக தற்போதும். உலகம் முழுவதும் இந்து மக்கள் பயன்பாட்டில் உள்ள.

மயானங்களில் அரிச்சந்திரன் காவல் காக்கிறார் என்ற நம்பிக்கை உள்ளது, இதன் காரணமாக இன்று வரை மயானங்களில்  அரிச்சந்திரன் கோவில்கள் அமைக்கப்பட்டு, அரிச்சந்திரனுக்கு அபிஷேகம் செய்து தீப ஆராதனை காட்டி ஆசி பெற்று' அதன் பின் அவரது அனுமதி அனுமதியோடு தான் ' மயானத்துக்குள் சென்று'  இறந்தவரின் உடலுக்கு இறுதி ஈமச்சடங்குகள் செய்யும் வழக்கம் உள்ளது. 

பொன்.கோ.முத்து திருவள்ளூர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *