“Do not pluck lotus flowers from the pond.” What did Gajendra do in response to Mahavishnu’s command?

தூ வாய புல் ஊர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை 
தேவாதிதேவனை செங் கமலக் கண்ணனை
நாவாய் உளானை நறையூரில் கண்டேனே ! '- 
(திவ்யதேச பாசுர விளக்கம்‌.)

( துஸவாய புள்) 'தூ வாய' என்றும், 'தூ ஐய' என்றும் பிரிக்கலாம். தூ ஐய வே தஸ்வரூபியாகையாலே ஸ்வத பரிசுத்தனானா என்றபடி.! 

 கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் 108 வைணவத் தலங்களில் ஒன்றான. திருநாவாய் திருக்கோவிலானது, 76-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்களும், நம்மாழ்வார் 11 பாசுரங்களும் பெருமாள் மீது  பாடிய இடமாகும். திருமாலை நோக்கி 9 யோகிகள் இங்கு தவம் புரிந்ததால், நவ யோகித்தலம் என அழைக்கப்பட்டு காலப்போக்கில்  தற்போது திருநாவாய் என்றழைக்கப்படுகிறது.  தேவலோகத்தில் ஒரு முறை திருமகளும்,  கஜேந்திரனும் தடாகத்தில் இருந்து பறித்த தாமரை மலர்களைக் கொண்டு மகாவிஷ்ணுவுக்கு  அர்ச்சனை செய்து வணங்கி வந்தனர். அப்போது ஒரு முறை வழக்கம்போல் தடாகத்தில் தாமரை மலர்களை பறிப்பதற்காக சென்றபோது.

கஜேந்திரனுக்கு தாமரை மலர்கள் கிடைக்கவில்லை, இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய கஜேந்திரன் இது குறித்து மன வருத்தத்துடன் சென்று' தனது நிலையை மகாவிஷ்ணுவிடம் எடுத்துரைத்தான். உடனே மகாவிஷ்ணு திருமகளை அழைத்து, இனி தடாகத்தில் நீ தாமரை மலர்களை பறிக்கக் கூடாது என கட்டளையிட்டார், அதனை ஏற்று திருமகளும் கஜேந்திரனுக்காக தாமரை மலர்களை பறிக்காமல் விட்டுக் கொடுத்தால், இதனால் மகிழ்ச்சி அடைந்த  கஜேந்திரன் அன்று முதல் நாள்தோறும் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து மகாவிஷ்ணுவை  வழிபட்டு வந்தான். அவனது பூஜையில் மன மகிழ்ந்த இறைவன் பூஜை நேரத்தில் திருமகளை தன்னுடன் சிம்மாசனத்தில் அமர செய்து, கஜேந்திரனின் பூஜையை ஏற்று திருமகளுடன் தம்பதியர் சமேதரராக கஜேந்திரனுக்கு  காட்சி கொடுத்ததாக தல வரலாறு' பெருமான் அருள்மிகு ஸ்ரீ நவ முகுந்தன் என்ற திருப்பெயரில்  கிழக்கு நோக்கிய  முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் புதைந்த நிலையில் வேறெங்கும் காண முடியாத திருக்கோளத்தில் காட்சி தருகிறார், தாயார், அருள்மிகு ஸ்ரீ மலர்மங்கை நாச்சியார் என அழைக்கப்படுகிறாள்.

தீர்த்தம், கமல தடாகம், கருவறை விமானம்,  வேத விமானம்,  கோயில் வளாகத்தில்  கணபதி, திருமகள், ஐயப்பனுக்கு தனி சன்னதிகள்  உள்ளன. ஆற்றங்கரையில் சிவபெருமான், பிரம்மதேவன், ஆகியோர் தனியாக கோவில் கொண்டுள்ளனர்.  இதன் காரணமாக் இத்தலம் மும்மூர்த்தி தலம் என போற்றப்படுகிறது. மகாபாரத காலத்தில்' பஞ்சபாண்டவர்களுடன் சேர்ந்து கிருஷ்ணர் இவ்விடத்தில் பித்ரு பரிகார பூஜை செய்துள்ளனர். ஆடி அமாவாசை தினத்தன்று பெருந்திரளானோர் இங்கு வந்து தங்கள் முன்னோருக்கு' தர்ப்பணம் செய்வது  வழக்கம், வைகுண்ட ஏகாதசி, திருவோணம் உற்சவங்களும், மாமாங்கத் திருவிழா ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டத்தில் இருக்கும்,   இக்கோவிலுக்கு திரூர் நகரில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. பாலக்காடு, குருவாயூர், திருச்சூர், எர்ணாகுளம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து திரூர் செல்வதற்கான பேருந்துகள் உண்டு.

பொன்.கோ.முத்து திருவள்ளூர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *