“The victory tree attached to Murugan’s body”!

முருகப்பெருமானின் அறுவடை வீடுகளில் இல்லாத சிறப்பொன்று திருச்செங்கோடு பகுதியில் மலை மீது உள்ள முருகன் கோவிலுக்கு உண்டு. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற இக்கோவிலில் முருகப்பெருமானின் கையில் இருப்பது.  கல்லாலான வேலாகும். மற்ற கோவில்களில் முருகனின் விக்கிரகத்தில் தனியாக வெள்ளி அல்லது தங்கத்தால் ஆன' வேலை கருவறையில் உள்ள முருகனின் திருமேனியுடன் வைத்திருப்பார்கள்.

இங்கு முருகப்பெருமானின் தலையில் உள்ள' கீரிடத்திற்கு மேல் 3 அங்குலம் நீட்டிக்கொண்டிருக்கும், சிறப்பினை காண முடியும், இது இறைவனின் உடலோடு சேர்ந்தே இருக்கும். எனவே இதை குறைக்கவோ, அல்லது தனியாக பிரித்து எடுக்கவோ  முடியாதப்படி நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ணனுக்கு எப்படி உடலுடன் ஒட்டி கவச குண்டலம் இருந்ததோ அதேபோன்று முருகனுக்கு வெற்றிவேல்  இருப்பது  குறிப்பிடத்தக்கது.

பொன்.கோ.முத்து திருவள்ளூர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *