Lord Muruga appearing in the copper temple” A miracle that bestows grace on the underworld!

பெரும்பாலும் தமிழ் கடவுள் ஆன' நாம் முருக பெருமான் குன்றின் மீது எழுந்தருளி கோவில் கொண்டுள்ளதை நாம் அறிவோம். இதேபோன்று விநாயகப் பெருமான் மலை உச்சியில் எழுந்தருளியதால் உச்சி பிள்ளையாராகவும், பாதாளத்தில் கோவில் கொண்டு உள்ளதால் பாதாள கணபதி அழைக்கப்படுகிறார். ஆனால் முருகப்பெருமான் பாதாளத்தில் செப்பு திருமேனியாக எழுந்தருளி அருள் பாவிக்கும் பாதாள முருகன் கோவில் எங்கு உள்ளது தெரியுமா" ? வாருங்கள் அந்த அதிசய கோவிலில் அருள் புரியும் கந்தனை வணங்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  இராமலிங்கம் பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது.  அருள்மிகு ஸ்ரீ பாதாள செம்பு முருகன் 16 அடி ஆழத்தில் வலது கரத்தை தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் பாவிக்கும் விதமாக அழகென்ற சொல்லுக்கு முருகா என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் சித்திரை நிலவு போன்று பிரகாசிக்கும் முகத்துடன் புன்னகையோடு, இடது கையில் வெற்றி வேலுடன் நின்ற கோளத்தில் அருள் பாவிக்கிறார். வசீகரத் தோற்றத்துடன் காணப்படும் முருகனின் அழகு திருமேனியை காண கண் கோடி வேண்டும். 

காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைமாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை. செம்பு முருகனை வழிபடலாம். செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு வழிபாடும் இங்கு நடைபெறுகிறது.

பொன்.கோ.முத்து திருவள்ளூர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *