Visiting Thirukandiyur is a blessing from a previous birth!

படைப்பின் கடவுளான பிரம்ம தேவனுக்கு கோவில்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளது, அதிலும் சரஸ்வதியும் பிரம்மதேவன் ஒரே இடத்தில் அருள் பாவிக்கும் அற்புத திருக்கோவிலானது. வ்தஞ்சை மாவட்டம்,திருவையாறு செல்லும் வழித்தடத்தில்  திருக்கண்டியூர் என்ற இடத்தில் உள்ளது, இங்கு சிவபெருமான் அருள்மிகு ஸ்ரீ பிரம்ம சிரகண்டீஸ்வரர். என்ற திருப்பெயரில் அழைக்கப்படுகிறார்.

தனக்கென உள்ள கோவில்களில் தனியாக காட்சி தரும் பிரம்மதேவன், மிக அரிதாக அன்னை ஸ்ரீ சரஸ்வதி தேவியுடன்  தம்பதி சமேதராக பிரம்மதேவன் கலைமகளின் வெண்தாமரை போன்று மலர்ந்த முகத்துடன் காட்சி அளிக்கிறார். கலையின் வடிவமான சரஸ்வதி தேவியும் படைப்பின் அம்சமான பிரம்ம தேவனையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் பாக்கியம் பூர்வ ஜென்ம  புண்ணியமாகும், புராணத்துடன் தொடர்புடைய இவ்விடம் தோன்றியதின் காரணம், பிரம்ம தேவனின் தலையை சிவபெருமான்  கொய்தார். இதன் காரணமாக ஈசனுக்கு  பிரம்ம சிரகண்டீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது.

நான்கு முகத்துடன் புன்னகை புரிந்தவாறு'தனது துணைவியார் சரஸ்வதி தேவியுடன். இருவரையும் கலைநயத்துடன் வேறொரு பிரம்மா படைத்திருப்பாரா" ? என" எண்ண தோண்டும், வகையில், சிந்தனையை தூண்டுகிறது. இதன் அருகே மற்றொரு திருக்கோவிலும் உள்ளது, அங்கு திருமால், சாப விமோசனப் பெருமாள். என்ற திருநாமத்துடன் அருள் பாவிக்கிறார். கல்வி, தொழில் வளர்ச்சி, கலைத்துறை, ஆகியவற்றில் சாதிக்க விரும்பும் அன்பர்கள் அன்னை ஸ்ரீ சரஸ்வதி தேவியுடன் அருள் பாவிக்கும் பிரம்ம தேவனின்' திருக்கண்டியூர் வந்து தரிசனம் செய்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது திண்ணம். 

பொன்.கோ.முத்து திருவள்ளூர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *