Varahi amman pushpa alangram

ஆசாட நவராத்திரி விழாவின் பதினோராவது  நாளான இன்று வராகி அம்மனுக்கு புஷ்ப  அலங்காரம். திரளான பக்தர்கள் நீண்ட வரிசைகள் என்று சுவாமி தரிசனம்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் தனி சன்னதியில் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் 11 நாட்கள் ஆசாட நவராத்திரி விழா விமர்சையாக நடைபெறும்.

இந்த ஆண்டு ஆசாட நவராத்திரி விழா கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது.  அதனை தொடர்ந்து பதினோராவது நாளான இன்று புஷ்ப அலங்காரம்  செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வாராகி அம்மனை தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *