Thirupathy theporchavam day 4

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலமாக நடைபெற்று வரும் வருடாந்திர தெப்போற்சவம். தெப்பத்தில் வலம் வந்து காட்சியளித்த ஸ்ரீதேவி பூதேவி  சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாசர்.

ஆண்டுதோறும் ஐந்து நாட்கள்   வருடாந்திர   தெப்போற்சவம் நடத்துவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 21ஆம் தேதி தெப்போற்சவம் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது அந்த வகையில் நான்காம் நாளான இன்று ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீ சீனிவாச பெருமாளை அலங்கரித்து மாட வீதிகளில் வலம் வர செய்தனர்.

தொடர்ந்து வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில்  உற்சவ மூர்த்திகளை எழுந்தருள செய்து  திருக்குளத்தில் வலம் வரச் செய்தனர் நான்காம் நாளான இன்று ஐந்து சுற்றுகள் திருக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு பெருமாள் தாயார்கள் காட்சியளித்தனர் .

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *