Jai prathyankara peedam

ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில், மூலஸ்தான விக்ரஹ ப்ரதிஷ்டா வைபவ பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள வெண்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில் கடந்த ஆறு வருடங்களாக மூலஸ்தான அமையவிருக்கும் இடத்தில் வருடந்தோறும்  ஜெய் ப்ரத்யங்கிராவின் லட்ச  மூலமந்திர ஹோமம் நடைபெற்று வந்தது. தற்போது விக்ரஹ ப்ரதிஷ்டா வைபவ பெருவிழவை  ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகளின் திருக்கரங்களால்  விசேஷ மஹா ஹோமங்கள் செய்வித்து  ப்ரதிஷ்டா வைபவ பெருவிழா நடைபெற்றது.

வேத விற்பன்னர்கள் வேதம் முழங்க கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழா, விசேஷ மஹா பூர்ணாஹுதிக்கு பின் மூலஸ்தான, விக்ரஹதிற்க்கு  கலசாபிஷேகம் செய்யப்பட்டது.

விழாவில் முக்கியஸ்தர்களும், பல்வேறு இடங்களில் உள்ள ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தின் அடியார்கள் கலந்துகொண்டு, அன்னை ஜெய் ப்ரத்யங்கிரா அருளையும், குருவின் ஆசியும் பெற்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *