Thiruverkadu karumari amman temple newyear celebration

திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு இரவு 12 மணிக்கு அம்மனுக்குசிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

2024 ஆம் ஆண்டு பிறந்த ஆங்கில புத்தாண்டு தினத்தை உலக நாடுகள் முழுவதும் கொண்டாடி வரும் நிலையில்  சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் இரவு 12 மணிக்கு அம்மன் கருவறையில் இரண்டு பசுகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து பட்டு ஆடை  அணிவித்துகோமாதா பூஜை நடைபெற்றது.

பின்பு கருவறையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் பால் அபிஷேகம் தேன் சந்தன அபிஷேகம்அபிஷேகம் இளநீர் அபிஷேகம் போன்றபல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன பின்பு பல்வேறு மலர்களால்அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு  பல்வேறு வகையான பழங்கள் படையல் இட்டு நெய்வேத்தியம் காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் தீப ஆராதனை நடைபெற்றது.

இந்த புத்தாண்டு சிறப்பு பூஜையில் முன்னாள் அதிமுக நகர மன்ற தலைவர் மகேந்திரன் கலந்து கொண்டார் இந்த புத்தாண்டு சிறப்பு பூஜையில்ஆயிரக்கணக்கான பக்தர்களும்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்பு தரிசனம் செய்து முடித்த வந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கினார்.   

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *