Sani peyarchi palangal

சனி பகவான் நாளை (20/12/2023) மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மாலை சரியாக 5:20 மணிக்கு இந்த பெயர்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

கும்பம் ராசியில் ஆட்சி செய்யப்போகும் சனிபகவான் என்ன பலன்களை கொடுக்கப்போகிறார்.

மேஷம் – லாப சனி
ரிஷபம் – தொழில் சனி
மிதுனம் – பாக்ய சனி
கடகம் – அஷ்டமத்து சனி
சிம்மம் – கண்டச்சனி
கன்னி – ருண ரோக சத்ரு சனி
துலாம் – புண்ணிய சனி
விருச்சிகம் – அர்த்தாஷ்டம சனி
தனுசு – தைரிய சனி
மகரம் – பாத சனி
கும்பம் – ஜென்ம சனி
மீனம் – விரைய சனி

தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும்.  இந்த சனிப்பெயர்ச்சியால் பாதிப்புகள் குறைய கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.

இந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்…

மேஷ ராசிக்காரர்களுக்கு 2024 ஆண்டு முதல் சனி பகவான் லாபத்தை அள்ளித்தரப்போகிறார். தொட்டதெல்லாம் இனி பொன்னாகும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். வெளிநாடு போகும் யோகம் வரும். வியாபாரம் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். இனி வரும் காலம் அற்புதமான காலமாக அமையும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்ய சனி காலம். சனிபகவான் உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறார். பாக்யசனி காலம் தொடங்குகிறது என்பதால் ஸ்ரீ விநாயகரை வணங்கலாம். உங்களின் குல தெய்வத்தை விடாமல் கும்பிடுங்கள். வாலாஜாபேட்டையில் எழுந்தருளும் லட்சுமி வராகப்பெருமாளை வணங்க மேலும் நன்மைகள் நடைபெறும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவான் கண்டச்சனியாக பயணம் செய்தாலும் ஆட்சி பெற்ற சனி சச மகா யோகத்தை தரப்போகிறார். வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்கினால் நன்மைகள் நடைபெறும். சனிக்கிழமைகளில் சனிபகவானையும், பைரவரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

கன்னி ராசிக்காரர்களுக்கு இது பொன்னான காலம். கன்னி ராசிக்காரர்களுக்கு முழு அதிகாரத்தையும் சனி தருவார். விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. ஆறாம் வீட்டில் அமரும் ருண ரோக சத்ரு ஸ்தான சனி என்பதால் விநாயகர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *