Soorya prabai vaganam

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி.

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாவது திருநாளான இன்று காலை உற்சவ மூர்த்தியான மலையப்பா சுவாமி சூரிய நாராயணராக சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு காட்சியளித்தார். நான்கு மாட வீதிகளிலும் உலா வந்த சூரிய நாராயணரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருமலை நான்கு மாட வீதிகளில் வெகு விமர்சியாக நடைபெற்ற இந்த வாகன சேவையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடன கலைஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *