Kaliamman koil kanthara nadanam

விருதுநகர் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தெய்யம் நடனம் நடைபெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பொதுவாக புரட்டாசி மாதங்களில் காளியம்மன் திருவிழா நடைபெறும் நிலையில், விருதுநகர் வாடியான் தெருவில் உள்ள  காளியம்மன் கோவில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்தாண்டு திருவிழா முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. மாலையில் தொடங்கி இந்த ஊர்வலத்தில் பத்துக்கும் மேற்பட்ட மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் வலம் வர ஒவ்வொரு வாகனத்தின் பின்புறமும் சுவாமி நடனம், புலியாட்டம், கோலாட்டம் என கலை நிகழ்ச்சிகள் வீதிகளில் அரங்கேற்றம் செய்யப்பட்டன.

அதில் அதிகம் கவனம் பெற்றது காந்தாரா என்று அறியப்படும் கேரளா கர்நாடகா பகுதிகளின் பாரம்பரிய நடனமான தெய்யம் நடனம் தான். இதற்காக கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட கலைஞர்கள் அம்மன், கிருஷ்ணன், ஈசன் என விதவிதமான வேடங்களில் வந்து தெய்யம் நடனமாடி வந்தது மக்களின் கவனத்தை ஈர்த்தது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *