Alangudi Natarajar abishegam

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் உலக நன்மைக்காக நடைபெற்ற நடராஜர் அபிஷேக விழாவில் மழையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கலந்து கொண்டனர். இரண்டாவது குருஸ்தலம் என அழைக்கப்படும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோவிலில் உள்ளது

இவ்வாலயத்தில் நடராஜமூா்த்திக்கு, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி மாதங்களில் மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதாவது ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் நடைபெறும். இதில் ஆனித்திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம் ஆகிய இரு அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அந்த வகையில் புரட்டாசி மாத பௌர்ணமி அபிஷேகத்தை முன்னிட்டு நடராஜமூா்த்திக்கு விபூதி, பால், தயிர், தேன், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீா், பன்னீா், சந்தனம் புஷ்பம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தனர்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *