Thirupathy mohini avatharam

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி  பிரம்மோற்சவத்தின் 5 வது நாள் மோகினி அவத்தாரத்தில் மலையப்ப சுவாமி.

திருப்பதி எழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 18 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று காலை பார்கடலில் மந்திரகிரி என்ற மலையை வாசுகி என்னும் பாம்பை கொண்டு  தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்து எடுத்து அமிர்தத்தை அசுரர்களிடம் இருந்து தேவர்களுக்கு மட்டும் கிடைக்க செய்யும் விதமாக மகா விஷ்ணு பெண் வேடத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் ( மோகினி அலங்காரத்தில் ) தோன்றி அமிர்தத்தை தேவர்களுக்கு கிடைக்க செய்தார்.

இந்த அவதாரத்தில்   இன்று  காலை நாட்ச்சியார் திருக்கோலத்தில் ( மோகினி அலங்காரத்தில் ) மாய மோகத்தை போக்கும் விதமாக கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் நாச்சியர் திருகோலத்தில் உள்ள தனது உருவத்தை ( மகாவிஷ்ணு ) கிருஷ்ணராக தோன்றி அவரது அழகை அவரே ரசித்து வருவதாக மற்றொரு பல்லக்கில் நாட்சியாருடன் ஸ்ரீ கிருஷ்ணரும்  அருள் பாலித்தார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *