Bullet amman

தேனியில் ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு முத்துமாரியம்மன் கோயிலில் புல்லட் பைக்கில் எழுந்தருளி வித்தியாசமான முறையில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் அம்மன்

தேனி நகரில் சமதர்மபுரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். இந்த திருக்கோயிலில் முத்துமாரி அம்மனை வித்தியாசமான முறையில் அலங்காரம் செய்திருந்தது பக்தர்கள் அனைவரையும் கவர்ந்தது.

திருக்கோயில் வளாகத்தில் உற்சவர் அம்மனாக காட்சியளிக்கும் முத்துமாரியம்மன் புல்லட் பைக்கின் மீது அமர்ந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார். வண்ண பட்டுடுத்தி வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் புல்லட் பைக்கின் மீது அமர்ந்து சிறப்பு அலங்காரத்தில் இருந்தார். இதேபோல் மூலவர் அம்மனுக்கு வண்ண பட்டுடுத்தி ஆபரணங்கள் அணிந்து மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு அம்மன் மேல் பணம் மழை பொழிவது போன்று ரூபாய் நோட்டுகளை செடிகள் மீது வைத்து அம்மனை அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கப்பட்டன.

முத்துமாரியம்மன் வித்தியாசமான முறையில் அலங்கரித்து இருந்தது பொதுமக்கள் பக்தர்கள் அனைவரையும் கவர்ந்தது. பின்னர் முத்துமாரி அம்மனுக்கு தீபாராதனை காட்டி பூஜைகள் செய்தனர் இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *