karthigai deepam kondadum vidham

கார்த்திகை தீப வழிபாடு மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணிதீபம் என்றும், கார்த்திகை நட்சத்திரம் அன்று கார்த்திகை தீபம் என்றும் மறுநாள் சுடலைக் கார்த்திகை என்றும் மூன்று நாட்கள் கார்த்திகை விளக்குகள் ஏற்படுகின்றன.

மகிழ்ச்சியான திருமண வாழ்வு வேண்டியும், தங்கள் குழந்தைகளின் நலன் வேண்டியும் பெண்கள் கார்த்திகைத் திருநாளன்று விரதம் மேற்கொள்கின்றனர்.

கார்த்திகை தீபத்தை கொண்டாடுபவர்கள் தங்கள் வசிப்பிடங்களை தூய்மைப்படுத்தி, மாலை நேரத்தில் வீட்டு வாசலில் வண்ணக் கோலம் இட வேண்டும். மண், பீங்கான் மற்றும் உலோகத்தினான சிறிய அகல் விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பஞ்சு திரி போட்டு விளக்கேற்றி விழிபட வேண்டும்.

விளக்குகளை வாயிற்படிகள், ஜன்னல்கள், பால்கனிகள், முற்றம் ஆகியவற்றில் வைத்து அலங்கரிக்கலாம். சிறுவர்கள் கார்த்திகை தீபத்தை பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர். கார்த்திகை தீப வழிபாட்டில் பொரி உருண்டை முக்கிய இடம் பெறுகின்றது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *