thirumana thadai neenga

பக்தியோடு வணங்குபவர் களின் அனைத்து ஆசைகளை யும் விருப்பங்களையும் பெண் தெய்வ வழிபாடு பூர்த்தி செய்கிறது. அதிலும் அம்பாள் வழிபாடு அனைவரின் வாழ்விலும் ஏற்றமிகு பலன்களை ஏற்படுத்தவல்லதாகும்.

ஏதேனும் ஒரு அம்பாள் கோயிலுக்கு விரதம் இருந்து செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்று அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற புடவை சாற்றி வழிபாடு செய்வதால் உங்கள் வீட்டில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறத் தொடங்கும்.

நீண்ட காலமாக திருமணமாகாமல் தவித்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் மனதிற்கேற்ற வரன் அமைந்து இனிமையான இல்லற வாழ்க்கை உண்டாகும். இந்த விரதத்தை 5, 9, 11 வாரங்களும் தொடர்ந்து செய்து வரலாம். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்பது உறுதி.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *