Oru Agalil etriya nerupil innoru agal deepam etralama

பஞ்ச (5) தீபம், 5 வகை எண்ணெய் கொண்டு தனித்தனியே ஏற்றப்பட வேண்டும், 5 தனி தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும்,இதுவே பஞ்சதீபம்.

பௌர்ணமி கழித்து வரும் அஷ்டமி தேய்பிறை அஷ்டமி என்று அனைவருக்கும் தெரிந்ததுதான், இந்த அஷ்டமி கார்த்திகை மாதத்தில் வரும் போது பஞ்ச எண்ணெய் தீபம் கால பைரவருக்கு ஏற்ற வேண்டும்,

ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடபாது சக்தி மோதல் உண்டாகும்) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும்,

இல்லத்தில் பயன் படுத்த, நல்ல பலன்களை பெற, நெய் அல்லது விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் இவையே சிறப்பு. 

நல்லெண்ணெய்: தூய்மையான நல்லெண்ணெய் தீபம் இறைவனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இதை கொண்டு விளக்கேற்றுவதன் மூலம் வீட்டில் உள்ள பீடைகள் அனைத்தும் ஒழியும். அதோடு நவக்கிரகங்களையும் இதன் மூலம் திருப்தி படுத்தலாம்.

விளக்கெண்ணெய்: விளக்கெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவதன் மூலம் வீட்டில் உள்ளவர்களுக்கு புகழ் வந்து சேரும்.

நெய்: நெய்யால் தீபம் ஏற்றுவதன் மூலம் வீட்டில் எப்போதும் சந்தோஷம் நிலைத்திருக்கும். அதோடு நவக்கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

24 மணிநேரமும் விளக்கு எரியலாம். முடியாதவர்கள் காலை 6ல் இருந்து 7க்குள் விளக்கு ஏற்றி மதியம் 12 க்குள் மலர் கொண்டு குளிர்விக்க பின் மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றி உறங்கும் முன் அல்லது இரவு 9 மணிக்கு மலர் கொண்டு குளிர்விக்கலாம். அவ் வீட்டிற்க்குறிய பெண் அல்லது ஆண் ஏற்றலாம். தீபத்தை பராமரிக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் செவ்வாய் வெள்ளியாவது ஏற்றிட  நன்மை பயக்கும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *