Kulatheivalthai vazhipadungal – kuthukalamaka vaalunga

குல தெய்வத்தை வழிபடுங்கள் – குதூகலமாக வாழுங்கள்
குலதெய்வம் தெரியாதவர்கள் அதனைக் கண்டறிந்து,   வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். குல தெய்வ வழிபாடு இல்லையென்றால் எந்த பலனும் இல்லை. அதாவது எவர் ஒருவர் குலதெய்வம் வழிபாடு சிறப்பாக தொடர்ந்து செய்து வருகின்றார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்வதில்லை. குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி உள்ளது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் வேறு. ஆனால் அவற்றின் சக்தி ஒரே அளவில் இருக்கும்.
குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்ப்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது. பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும்.
உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒரு முறையோ தங்கள் வசதிக்கு ஏற்ப வருடம் ஒரு முறையோ கண்டிப்பாக, நேரில் சென்று பூஜை செய்து கொள்ளவேண்டும். மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும், குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய், பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள். ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.
 உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கியப்பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும். அவரவர் சம்ப்ரதாயம் ஏற்ப பூஜை செய்யலாம். இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.
குலதெய்வம் படத்தை வாங்கி வந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும். வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப் பின்னரே செயலில் இறங்க வேண்டும்.
குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளுங்கள்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *