Koyilkalil Ennenna Seiya Koodathu?

கோயில்களில் என்னென்ன செய்யக் கூடாது?

கோவிலில் தூங்க கூடாது..
தலையில் துணி ,தொப்பி அணியகூடாது..
கொடிமரம் ,நந்தி,பலிபீடம் ,இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது ..
விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது )வணங்க கூடாது ..
அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது ..
குளிக்காமல் கோவில் போககூடாது …
கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடகூடாது ..
கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டகூடாது..
மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது ..
கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது..
படிகளில் உட்கார கூடாது ..
சிவன் பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும் ,பெருமாள் கோவில்களில் அமர கூடாது ..
வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வம்களுக்கு தர கூடாது ..
மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது ..
கிரணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது ..
கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது ..
புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது..
கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது..
தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது..
சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது..
தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது..
எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *