Sani Preethi homam

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 07.12.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும், ஜெய மங்கள சனீஸ்வரருக்கும் சனி ப்ரீதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றது.

மேலும் ஏகாதசி திதியை முன்னிட்டு உத்சவர் வைத்தியராஜனுக்கு நெல்லிப்பொடியுடன் பஞ்ச திரவிய திருமஞ்சனமும், மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு விசேஷ ஆராதனைகளும் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நோய்கள் தீரவும், சனி கிரகத்தினால் ஏற்படும் கஷ்டங்கள் நிவர்த்தியாகவும், மன கஷ்டங்கள் அகலவும், மேலும் பல்வேறு நன்மைகள் பெறவும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *