Guru Dhosham Neenga

குருபகவான் முழுமையான சுபக்கிரகம் என்று அழைக்கப்படுவர். எந்த விஷயத்தைப் பார்ப்பதாக இருந்தாலும் குருபகவானுடைய அனுக்கிரகம் அந்த ஜாதகருக்கு இருக்கிறதா…உதாரணமாக ஒருவருக்கு திருமணம் ஆக வேண்டும் என்றால் குருபலன் வந்துவிட்டதா, வியாழ நோக்கம் வந்துவிட்டதா, குரு பார்வை இருக்கிறதா என்பதைத் தான் முதலில் பார்ப்போம்.

அப்பேர்பட்ட குருவினால் ஏற்பட்ட தோஷம் விலக வேண்டுமென்றால் கீழ்க்கண்ட இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம். வியாழக்கிழமைகளில் குருவுக்கு உகந்த முல்லை பூவையும், கொண்டைக் கடலையும் நிவேதனமாகப் படைத்து இந்த ஸ்லோகத்தைச் சொன்னால் மேலும் சிறப்பு.

தேவானாஞ்ச ரிஷீணாஞ்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்திமன்தம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்

மறைமிகு கலை நூல் வல்லோன் வானவர்க்கரசன் மந்திரி
நறை சொரி கற்பகப்பொன் நாட்டினுக்கதிபனாகி
நிறை தனஞ் சிவிகை மண் வீடு போகத்தை நல்கும்
மறையவன் குரு வியாழன் மருமலர்ப் பாதம் போற்றி!​

9 அல்லது 108 தடவை சொல்ல குரு பகவான் மகிழ்ந்து தன் தோஷத்தை விலக்கிக் கொள்ளுவார்
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *