Sagala Thirumana Dhosham Neenga

துளசி கல்யாணம் செய்தால் திருமணம் நடைபெறும்.

ஓர் ஏழைப் பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, புத்தாடை அளித்து உணவு அளித்தால் திருமணம் நடைபெறும்.

சென்னை – திருவேற்காட்டில் கருமாரியம்மனை தரிசிக்கும் பெண்களுக்கு திருமண பாக்கியம் கூடி வருகிறது.

வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை கடலை எண்ணை நீங்கலாக பிற பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி மஞ்சள் பொடி அபிஷேகமும், பால் அபிஷேகமும் செய்தால் திருமணம் நடைபெறும்.

நாகமூர்த்திகளை வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி நாட்களில் அடிப்பிரதட்சணம் செய்யுங்கள். ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யச் சரடு தானம் செய்யுங்கள்.

கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிஷார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களும் நீங்கி திருமணம் கூடி வருகிறது.

முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வந்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் நிச்சயமாகும்.

வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றினால் திருமணம் கை கூடும்.

புன்னை மரத்தை சுற்றி வணங்கி வந்தால் திருமணம் நடைபெறும்.

ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட்டால் பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *