Vallar Kolgaigal

கடவுள் ஒருவரே. 

அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர். 

புலால் உணவு உண்ணக்கூடாது. 

எந்த உயிரையும் கொல்லக்கூடாது. 

சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது. 

இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும். 

எதிலும் பொது நோக்கம் வேண்டும். 

பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும். 

சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது. 

எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்

நல்லோர் மனதை நடுங்க செய்யாதே. 

தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே. 

மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே. 

ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே. 

பொருளை இச்சித்து பொய் சொல்லாதே. 

பசித்தோர் முகத்தைப் பாராதிராதே. 

இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே. 

குருவை வணங்கக் கூசி நிற்காதே. 

வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே 

தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *