Saneeswara Gayathri Mandiram

கிரகங்களில் வலிமையானவர், தர்மாதிகாரி, எம தர்மராஜனின் சகோதரர் இப்படி எல்லாச் சிறப்புகளையும் பெற்றவர் சனீஸ்வர பகவான். அவருக்கு  பயப்படாதவர்கள் கிடையாது. காரணம், நீதிமானுக்கு பயப்பட்டுத்தானே ஆகவேண்டும்.

கிரகங்களில் மெதுவாக நகரும் சனி, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனால் அவரை  மந்தன் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
 
மந்த கதியில் சென்றாலும், மெதுவாக நகர்ந்தாலும், இந்த புவியில் உள்ள மனிதர்களின் வாழ்வில் பலன்களை தமக்கே உரிய பாணியில் தந்தே தீருவார்.  முக்கியமாக சனிப் பெயர்ச்சியால் நாம் நலன்களைப் பெற வேண்டுமானால், சனீஸ்வர காயத்ரி மந்திரங்களை சொல்லி, அருகில் உள்ள சிவன் கோயில்களில்  உள்ள சனீஸ்வரர் சந்நிதியை வணங்குவது பலன் தரும்.

காய்த்ரி மந்திரம்:
சனி காயத்ரி மந்திரம்:
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||
 
சனி ஸ்தோத்திரம்:
நீலாஞ்ஜன ஸமாபாஸம் 
ரவிபுத்ரம் யமாக்ரஜம்! 
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் 
தம் நமாமி சனைச்சரம்!!
 
சனி மூல மந்திர ஜபம்:
"ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ", – 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *