Thiruchendur Hundiyal Kanikkai

திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜுலை மாத உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே அறுபத்தொறு லட்சம் ரூபாய்  கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை மாதத்திற்கான உண்டியல் எண்ணிக்கை கோவிந்தம்மாள் ஆதித்தனார் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் இன்று நடைபெற்றது. சிவகாசி பதினென்னு சித்தர் மடம் பீடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். 

இதில்  கோவில் யானை பராமரிப்பு , கோசாலை பராமரிப்பு , அன்னதானம் மற்றும்  நிரந்தர உண்டியல் என அனைத்து உண்டியல்களிலும் ஜூலை மாதத்திற்கான  உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 61லட்சத்து 41 ஆயிரத்து 909 ரூபாய் மொத்தம் கிடைக்கப்பபெற்றுள்ளது.  

மேலும் 1375 கிராம் தங்கமும்,    20,266 கிராமும் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது. மேலும் லண்டன்,  சிங்கப்பூர் , மலேசியா போன்ற   வெளிநாட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 536 அயல்நாட்டு நோட்டுகளும்  காணிக்கையாக கிடைக்கபெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *