Need positive energy

வீடு சிறியதோ…. பெரியதோ…. நமக்கு தேவை அமைதியான சூழல், நல்ல சிந்தனை, வாழ்க்கையில் சந்தோஷம். இவை நிறைந்து இருந்தால் தான் வாழ்க்கையை தங்கு தடையின்றி பயணிக்க முடியும். 

சிலர் வீட்டில் அடிக்கடி பிரச்னை, நிம்மதியற்ற சூழல், நோய் தாக்குதல், பதற்றம் இவ்வாறு தொடர்ந்து ஏற்பட்டு கொண்டு இருக்கும். இது போன்ற வீட்டில் ஏதோ எதிர்மறை சக்திகள் ஆட்கொண்டுள்ளதாகப் புரிந்துகொள்ள வேண்டும். 

இந்த எதிர்மறை சக்திகளை விரட்டி நேர்மறை சக்திகள் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? 

ஜோதிட ரீதியாக பாசிடிவ் எனர்ஜி என்னும் நேர்மறை சக்திகளை நம் வீட்டிற்குள் கொண்டுவருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம். 

வீட்டினுள் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் ஒரு விரிப்பு விரித்து ஏதேனும் ஒரு சிறிய செப்பு அல்லது பித்தளை அல்லது கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். இதனை காலையில் செய்வதே சிறந்தது. தினமும் காலையில் இந்த தண்ணீரை மாற்றவும். பழைய தண்ணீரை செடியிலோ அல்லது மொட்டை மாடியிலோ விட்டு விடலாம். 

உதாரணமாக.. சிவன் கோயிலிலும், பெருமாள் கோயிலிலும் உள்ள கர்ப்பகிரஹத்தில் செப்புப் பாத்திரம் அல்லது பித்தளையில் தீர்த்தம் வைத்திருப்பார்கள். பெருமாள் ஆலயத்தில் கர்ப்பகிரகத்தில் கொடுக்கும் தீர்த்தத்தில் துளசியும், பச்சைக் கற்பூரமும் சேர்ப்பார்கள். சிவன் கோயிலில் கொடுக்கும் தீர்த்தத்தில் வில்வமும், மஞ்சள் பொடியும் கலந்திருக்கும்.

இவ்வாறு நாம் வசிக்கும் வீட்டினுள் தினமும் செய்துவந்தால் எதிர்மறை ஆற்றல் மறைந்து நேர்மறை சக்திகள் உருவாகும். தினமும் இதைச் செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் மறைந்து சந்தோஷம் பிறக்கும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *